நேசி - திரை விமர்சனம்

நண்பர்களுடன் வெட்டியாக ஊர் சுற்றும் இளைஞன் விகாஸ். கல்குவாரி அதிபர். மகாதேவன் மகள் சோனியா சூரி. இருவரும் அடிக்கடி மோதிக்கொள்கிறார்கள். பிறகு அது காதலாக மலர்கிறது.

மகள் காதல் விஷயம் மகாதேவனுக்கு தெரிய அதிர்ச்சியாகிறார். சோனியா சூரியை கொடைக்கானல் அழைத்து போய் தங்கை வீட்டில் சில தினங்கள் தங்க வைக்கிறார். ஊருக்கு திரும்பி அவசரம் அவசரமாக மாப்பிள்ளை பார்க்கிறார்.

காதலியை காணாமல் தவிக்கிறார் விகாஸ். நண்பர்கள் உதவியுடன் காதலி இருப்பிடத்தை கண்டுபிடிக்கிறார். வேன் பிடித்து கொடைக்கானல் செல்லும்போது வழியில் கடத்தல் வழக்கில் போலீசிடம் சிக்குகிறார். மகாதேவன் சதியால் ஜெயிலில் அடைக்கப்படுகிறார். வீட்டுக்கு திரும்பும் சோனியா வேறு ஒருத்தருடன் திருமண ஏற்பாடு நடப்பது கண்டு அதிர்கிறார். முகூர்த்தத்துக்கு முந்தைய இரவு விகாஸ் விடுதலையாகி சோனியாவை கடத்தி போகிறார். அடியாட்கள் விரட்டுகின்றனர். காதல் ஜோடி என்ன ஆனார்கள் என்பது உலுக்கிப்போடும் கிளைமாக்ஸ்...

நீண்ட தாடி, அழுக்கு உடம்புடன் பிச்சைக்காரர்கள் மத்தியில் இருக்கும் விகாஸ்யாக குண்ட தீயை ஓடோடி போய் அனைத்து கல்லெறி வாங்கி சரியும்போது, எதிர்பார்ப்பை எகிற வைக்கிறார். அங்கிருந்து பிளாஷ்பேக் விரிகிறது.

விகாஷ்-சோனியா மோதிக்கொள்ளும் சீன்கள் சுவாரஸ்யமானவை. தந்தையிடம் தன்னை பற்றி அவதூறு சொன்னதற்காக பழிவாங்க ஆவேசத்துடன் வரும்போது மழையில் நனைந்தப்படி ஊஞ்சலில் ஆடும் சோனியாவை பார்த்து காதல் வயப்படுவது அழகு.

மகளை பாசத்துடன் அழைத்து போய் தங்கை வீட்டில் விட்டு விட்டு உன்னால ஒரு சாவு விழுந்ததுபோல் அவளால் இன்னொரு சாவு நடக்கக் கூடாது என்று சொல்லிவை என மகாதேவன் கர்ஜிப்பது... காதலியை தேடி வரும் விகாஷ¨ம் நண்பர்களும் போலீசில் மாட்டுவது திருப்பங்கள்.

திருமண வீட்டில் இருந்து சோனியாவை அழைத்துக்கொண்டு ஓடுவதும் அடியாட்கள் துரத்துவதும் பரபர சீன்கள்.

கிளைமாக்ஸ் ரத்தத்தை உறைய வைக்கிறது.

காதல் சுகுமார் காமெடியில் சிரிப்பு இல்லை. வழக்கமான கதைதான் என்றாலும் கிளைமாக்சில் நிமிர வைக்கிறார் இயக்குனர் சரவண கிருஷ்ணா. சிற்பி இசையில் பாடல்கள் இனிமை.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails