பொட்டு அம்மான் உயிருடன் உள்ளாரா?

விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் உயிருடன் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புலிகளின் தகவல் தொடர்புகளை இடைமறித்து கேட்டதன் மூலம் இது தெரியவந்துள்ளது என்று ராணுவத்தின் புலனாய்வுப் பிரிவு இலங்கை அரசிடம் தெரிவித்துள்ளதாக இலங்கைத் தமிழர் ஆதரவு இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அந்தத் தகவல் பரிமாற்றத்தின்போது, பொட்டு அம்மானை 'குருவி' என்ற புனைப் பெயரில் புலிகள் குறிப்பிட்டுப் பேசியதாகவும் கூறப்படுகிறது.

வன்னியில் நடைபெற்ற போரில் பொட்டு அம்மான் கொல்லப்பட்டுவிட்டதாக இலங்கை ராணுவம் கூறியிருந்தது. இந்நிலையில், அவர் உயிருடன் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails