Sunday, August 2, 2009

ஒபாமாவை மிரட்டியவருக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனை

அதிபர் ஒபாமாவை கொலை செய்யப் போவதாக கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க போலீசாருக்கு 2 இ-மெயில் மிரட்டல்கள் வந்தன. ஒபாமாவை படுகொலை செய்ய வெடிகுண்டுகளை பதுக்கி வைத்துள்ளதாகவும் அந்த இ-மெயிலில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அமெரிக்கா போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் அந்த இ-மெயில்களை டிமோதி ராயின் கியூட்டிரெஸ் என்ற 21 வயது இளைஞர் அனுப்பி இருப்பதை கண்டு பிடித்தனர். அவரை போலீசார் கைது செய்தனர்.

நீண்ட விசாரணைக்கு பிறகு ஒபாமாவுக்கு இ- மெயில் மிரட்டல் அனுப்பியதை டிமோதி ஒத்துக்கொண்டார். இந்த வழக்கில் டென்வர் மாவட்ட கோர்ட்டு நேற்று தீர்ப்பளித்தது.

டிமோதிக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனை அளித்து நீதிபதி உத்தர விட்டார். தண்டனை காலத்தில் முதல் 10 மாதத்தை அவர் வீட்டுக் காவலில் கழிக்கவேண்டும் என்று கூறப்பட்டது.

இது தவிர அவர் ரூ.75 ஆயிரம் அபராதம் கட்ட கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்த பணம் மின்ன போலீஸ் புறநகரில் உள்ள ஒரு அரங்கு பாதுகாப்புக்கு செலவிடப்படும்.

No comments:

Post a Comment

மன்மதன் அம்புக்காக கமல்ஹாசன் எழுதிய பாடல்

டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன், த்ரிஷா, மாதவன், சங்கீதா நடிக்கும் படம் மன்மதன் அம்பு. உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் உருவாக...