சரிவிலிருந்து மீண்டது மும்பை பங்குச் சந்தை

மும்பை பங்குச் சந்தையில் தொடர்ந்து மூன்று நாளாக ஏற்பட்டு வந்த சரிவு செவ்வாய்க்கிழமை மட்டுப்பட்டது. 65 புள்ளிகள் அதிகரித்ததால் குறியீட்டெண் 15,074 புள்ளிகளாக உயர்ந்தது.

இதேபோல தேசிய பங்குச் சந்தையில் 33 புள்ளிகள் உயர்ந்ததால் குறியீட்டெண் 4,471 புள்ளிகளாக உயர்ந்தது. ஆட்டோமொபைல், உலோகம் மற்றும் கட்டுமான நிறுவனங்களின் பங்கு விலைகள் கணிசமாக உயர்ந்ததே புள்ளிகள் உயர்வுக்குக் காரணமாகும்.

ஆட்டோமொபைல் பங்குகள் 3.07 சதவீதமும், கட்டுமான நிறுவன பங்குகள் 2.14 சதவீதமும், உலோக நிறுவனப் பங்குகள் 2 சதவீத அளவுக்கு அதிக விலைக்கு விற்பனையாயின. செவ்வாய்க்கிழமை வர்த்தகம் தொடங்கியதிலிருந்து ஸ்திரமற்ற நிலையே காணப்பட்டது. ஒருகட்டத்தில் குறியீட்டெண் 14,864 புள்ளிகள் வரை கீழிறங்கியது. பின்னர் படிப்படியாக முன்னேறி 15,218 புள்ளிகள் வரை தொட்டது.

பருவ மழை குறைபாடு, வேகமாகப் பரவி வரும் பன்றிக் காய்ச்சல் நோய் ஆகியன பங்குச் சந்தை முதலீட்டை பாதிக்கும் காரணிகளாக அமைந்தன. இருப்பினும் ஆசிய, ஐரோப்பிய பங்குச் சந்தையில் ஏற்பட்ட சிறிதளவு முன்னேற்றம் பங்குச் சந்தை சரிவை தடுத்து நிறுத்தியது.

ஜூலை மாதத்தில் கார் விற்பனை 31 சதவீதம் உயர்ந்ததைத் தொடர்ந்து ஆட்டோமொபைல் துறை பங்கு விலைகள் கணிசமாக உயர்ந்தன.

அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் பெருமளவு பங்குகளை விற்பனை செய்தன. இருப்பினும் பாதிப்பு ஏற்படவில்லை. ஆகஸ்ட் 10-ம் தேதி வரை அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ. 640 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளன.

டாடா மோட்டார்ஸ் நிறுவனப் பங்கு மிக அதிகபட்சமாக 6.81 சதவீதம் உயர்ந்தது. இதற்கு அடுத்தபடியாக மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் 3.55 சதவீதமும், ஹிண்டால்கோ 3.38 சதவீதமும், மாருதி சுஸýகி 3.23 சதவீதமும், பார்தி ஏர்டெல் 2.23 சதவீதமும், டாடா பவர் 1.81 சதவீதமும் உயர்ந்தன.

ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் நிறுவனப் பங்கு 2.64 சதவீதம் சரிந்தது. எச்டிஎஃப்சி 1.11 சதவீதமும், என்டிபிசி 0.88 சதவீதமும் சரிவைச் சந்தித்தன

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails