சென்செக்ஸ் 141 புள்ளிகள் உயர்வு

இந்திய பங்குச்சந்தைகளில் இன்று ஏற்றம் காணப்பட்டது.

மும்பை பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தக முடிவில் குறியீட்டெண் சென்செக்ஸ் 141 புள்ளிகள் உயர்ந்து 15,922 புள்ளிகளில் முடிவடைந்தது.

யுனிடெக், ரிலையன்ஸ் கேபிடல், இந்தியன் வங்கி, பார்தி ஏர்டெல், வோல்டாஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலையில் ஏற்றம் காணப்பட்டது.

நெஸ்லே, ஹெச்.சி.எல். டெக்னாலஜீஸ், டாடா டீ, ஜீ என்டர்டெய்ன்மென்ட், ஃபெடரல் வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலையில் சரிவு ஏற்பட்டது.

தேசியப் பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தக முடிவில் குறியீட்டெண் நிஃப்டி 44 புள்ளிகள் உயர்ந்து 4,732 புள்ளிகளில் முடிவடைந்தது

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails