மைக்கேல் ஜாக்சன் கொல்லப்பட்டதாக அறிவிப்பு

பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் (வயது 50). கடந்த ஜூன் மாதம் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். அதிக சக்தி வாய்ந்த மருந்து மாத்திரை வழங்கியதால் தான் அவர் மரணம் அடைந்தார்.

எனவே, அவரது சாவுக்கு அந்த மருந்தை கொடுத்த டாக்டர் முர்ரே தான் காரணம் என குற்றம் சாட்டப்பட்டது.

இந்த நிலையில், மைக்கேல் ஜாக்சனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதில், வழங்கப்பட்ட மருந்தின் நச்சுத்தன்மை தான் அவரது உயிரை பறித்தது என தெரிய வந்துள்ளது. எனவே, மைக்கேல் ஜாக்சன் கொலை செய்யப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே பிரேத பரிசோதனையின் முழு அறிக்கையையும் வெளியிடும்படி டாக்டர் முர்ரேயின் வக்கீல் கேட்டுக்கொண்டுள்ளார்.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails