வ குவாட்டர் கட்டிங் : ஸ்பெஷல் ஹைலைட்ஸ்

தமிழ்ப்படம் வெற்றிக்கு பிறகு மிர்ச்சி சிவா நடித்திருக்கும் படம் வ குவாட்டர் கட்டிங். தயாநிதி அழகிரியின் க்ளவுட் நைன் மூவிஸ் தயாரிக்கும் இப்படத்தை டைரக்டர் புஷ்கர் - காயத்ரி இயக்கியுள்ளனர். வித்தியாசமான வ குவாட்டர் கட்டிங் படத்தின் ஸ்பெஷல் ஹைலைட்‌ஸ் :-

* ஒரு இரவில், சென்னையில் நடக்கும் கதைதான் வ குவாட்டர் கட்டிங் படத்தின் மொத்த கதையும்.

* தமிழ்ப்படம் சிவா நாயகனாகவும், லே‌கா வாஷிங்டன் நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள்.

* கோவையில் இருந்து சென்னைக்கு வரும் சிவா, தன் அக்கா கணவர் எஸ்.பி.பி. சரண் வீட்டில் தங்கி, அடுத்த நாள் சவுதிக்கு போக வேண்டும். அந்த ஒரு நாள் ராத்திரியில் மாலை 6.30 மணி முதல் காலை 6.30 மணி வரை நடக்கும் கதையை சுவாரஸ்யமாக கொடுத்திருக்கிறார்கள் புஷ்கர் - காயத்ரி தம்பதிகள்.

* படத்தின் சிவாவின் பெயர் சுந்தர்ராஜன். விஜய் ரசிகராக நடிக்கிறார். எனவே தனது பெயரை சுரா என சுருக்கிக் கொள்வாராம்.

* தமிழ்ப்படம் போல் எந்த கலாய்ப்பும் இல்லாத, சுத்த காமெடி படமாம் இந்த வ குவாட்டர் கட்டிங். பெரிய மெசேஜ் எதுவும் இல்லாமல் ஒரு ஜாலியான படம்.

* ஆர்யா - பூஜா நடித்த ஓரம் போ திரைப்படத்திற்கு பிறகு கணவன் - மனைவியான புஷ்கர் - காயத்ரி இணைந்து இயக்கும் 2வது படம் இது.

* படத்தில் ஆங்காங்கே சந்திக்கும் சின்ன பிரச்னை எப்படி பெரிய ‌பாதிப்பை தருகிறது என்பதை அழுத்தமாக பதிவு செய்துள்ளாராம்.

* ஜனவரியில் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை 68 நாட்கள் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர். பெரும்பாலான காட்சிகள் இரவில்தான் படமாக்கப்பட்டுள்ளது.

* 19 வயசு பொண்ணு, 12ம் வகுப்பு படிக்கிறது, 3 முறை பெயில் ஆகி, தற்கொலைக்கு முயற்சி பண்ணுவது போன்ற இயல்பான காட்சிகள் படத்தில் உள்ளனவாம்.

* டான்ஸ் மாஸ்டர் கல்யாண், நடனம் அமைத்துக் கொடுத்திருப்பதுடன், சொக்கத் தங்கள் என்ற பெயரில் அரசியல்வாதியாகவும் நடித்து பட்டையை கிளப்பியிருக்கிறார்.

* சுரா வாக வரும் சிவாவின் அக்கா கணவர் எஸ்.பி.பி. சரண், மார்த்தண்டன் என்ற கேரக்டரில் சிறப்பாக நடித்துள்ளாராம். படத்திற்காக 20 கிலோ எடை போட்டு அந்த கேரக்டரை நிஜமாக கொண்டு வந்திருக்கிறாராம் அவர்.

* எல்லா படங்களும் வித்தியாசமான லவ் ஸ்டோரி, வித்தியாசமா எடுத்திருக்கோம்னு சொல்வாங்க, ஆனா இந்த படத்தை பார்த்தா உங்களுக்கே வித்தியாசமான படமா இருக்கேன்னு சொல்லத் தோணும் என்கின்றனர் படத்தி்ன் டைரக்டர்களான புஷ்கர் - காயத்ரி தம்பதியர்.

கம்‌பெனிக்கு பூட்டு போடத் தயாராகும் இயக்குனர்!

பிரமாண்ட இயக்குனர் என்று பெயரெடுத்த அந்த இயக்குனர் சமீபத்தில் எந்திரமான படத்தை இயக்கி முடித்த கையோடு, தனது சொந்த பட கம்பெனியின் கணக்கு வழக்குகளை பார்த்திருக்கிறார்.

பெயர் சொல்லுகிற மாதிரி படங்களை தயாரித்து வெளியிட்டு வரும் அந்த நிறுவனத்தின் லாப நஷ்ட கணக்கில் லாபத்தை விட நஷ்டம் தலைதூக்கி நிற்கிறதாம்.

மூன்று முக்கியமான படங்களால் மட்டும் ரூ.9 கோடி வரை நஷ்டத்தை சந்தித்திருக்கும் அந்த கம்பெனியை இனியும் ‌தொடர வேண்டுமா? என்ற யோசனையில் மூழ்கியிருக்கும் பிரமாண்ட இயக்குனர், விரைவில் கம்பெனிக்கு பூட்டு போடப் போவதாக சொல்கிறது கோடம்பாக்க தகவல்.

அநேகமாக கம்பெனியின் கடைசிப்படம் அன்நதபுரத்து வீடாகத்தான் இருக்கும் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

பிரமாண்ட டைரக்டரின் அவசர முடிவு!

பிரமாண்ட டைரக்டர் என்ற பெயரெடுத்த அந்த இயக்குனர், இந்தியில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் ஆன 3 முட்டாள்கள் படத்தை தமிழில் ரீ-மேக் செய்ய திட்டமிட்டதும், இதற்கான நடிகர்கள் - நடிகைகள் தேர்வு நடைபெற்றதும் தெரிந்த சங்கதிதான்.

என்ன காரணத்தினாலோ அந்த படத்தை தயாரிக்க முன்வந்த ஜெமினி நிறுவனம் தயாரிப்பு முயற்சியை சற்று தள்ளிப் போட்டிருக்கிறதாம்.

அதுவரை இளைய தளபதியின் தேதிகளை வீணடிக்க விரும்பாத பிரமாண்டம், அவரை வைத்து மசாலா படம் ஒன்றை இயக்க அவசர முடிவு எடுத்திருக்கிறாராம்.

இந்த மசாலா படத்தில் ஏற்கனவே நடிக்கவிருந்தவர் ஜீவமான இளம் நடிகர்தானாம். இந்த தகவல் அறிந்த ஜீவ நடிகர் அதிர்ச்சியடைந்து, விஜயத்தை நேரில் சென்று பார்த்து பேசியிருக்கிறார்.

அவர்கள் என்ன பேசினார்கள் என்பது தெரியவில்லை. ஓருவேளை படத்தில் 2 பேரும் சேர்ந்து நடிக்கலாம் என்று கோடம்பாக்கத்தில் பேசிக் கொள்கிறார்கள்.

டைரக்டருக்கு அதிர்ச்சி கொடுத்த தம்பி நடிகர்!

முதல் படத்திலேயே கிராமத்து நாயகனாக வெற்றிவாகை சூடிய அந்த தம்பி நடிகர் அடிப்படையில் அசிஸ்டென்ட் டைரக்டராக இருந்தவர். அடுத்தடுத்து நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தால் நல்ல கதைக்காக காத்திருந்து நடித்து வருகிறார்.

இயக்குனர் துறையில் தனக்குள்ள அனுபவம் தான் நடிக்கும் படங்களில் தெரிய வேண்டும் என நினைக்கும் அந்த தம்பி நடிகர் தற்போது நடித்து வரும் புதிய படத்தில் கொஞ்சம் ஓவராகவே மூக்கை நுழைக்கிறாராம்.

எல்லா விஷயத்திலும் மூக்கை நுழைப்பதால் படத்தின் டைரக்டர் ரொம்பவே அப்செட். சமீபத்தில் படத்தில் இடம்பெறப் போகும் பாடல் என்று கூறி ஒரு பாடலை நாயகனுக்கு போட்டுக் காட்டியிருக்கிறார் டைரக்டர்.

பாடலை கேட்ட ஹீரோ, இந்த பாட்டு வேணாம் என்று சொல்லி விட்டாராம். இதனால் அதிர்ச்சியுடன் கூடி ஆக்ரோஷத்தில் இருக்கிறதாம் இயக்குனர் தரப்பு.

ஏற்கவே இந்த தம்பி நடிகரின் அண்ணன் சூட்டிங் ஸ்பாட்டில் ஓவராக பில்ட்-அப் கொடுப்பதால் தயாரிப்பாளர் மற்றும் டைரக்டர்கள் அவஸ்தை பட்டு வருதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் தம்பியும், அண்ணன் வழியில் தன்னை மாற்றிக் கொண்டிருப்பது எங்கே போய் முடியுமோ? என புலம்புகிறார்கள் அஸிஸ்டென்ட் டைரக்டர்கள்.

திருட்டு கதையில் உருவான எந்திரன்

எனது கதையை திருடி எந்திரன் என்ற பெயரில் படம் எடுத்துள்ளனர் என்று படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மீது எழுத்தாளர் அமுதா பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

சென்னை, வேளச்சேரி எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர் அமுதா தமிழ்நாடன். வாரமிருமுறை வெளிவரும் புலனாய்வு இதழில் துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர், நேற்று (25ம்தேதி) சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்து புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

நான் எழுதிய "ஜூகிபா எனும் சிறுகதை, "இனிய உதயம் எனும் பத்திரிகையில் 1996ம் ஆண்டு ஏப்ரலில் வெளிவந்தது. தொடர்ந்து 2007ம் ஆண்டில், சாருபிரபா பப்ளிகேஷன்ஸ் சார்பில் வெளிவந்த "திக் திக் தீபிகா என்ற புத்தகத்திலும் வெளிவந்தது.

சமீபத்தில் திரைக்கு வந்த, "எந்திரன் திரைப்படத்தை பார்த்த என் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் நேரிலும், போனிலும் மற்றும் கடிதம் மூலமும், இந்த படம் என் படைப்பான "ஜூகிபா என்ற சிறுகதையை அப்படியே எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தனர்.

சமீபத்தில் நானும் அந்த படத்தை தியேட்டரில் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். என், "ஜூகிபா கதையை மூலக்கதையாக வைத்து, சினிமா சங்கதிகளான பாட்டு, சண்டை, கிராபிக்ஸ் காட்சிகளை சேர்த்து, "எந்திரன் படத்தை எடுத்து வெளியிட்டுள்ளனர்.

இந்திய பத்திரிகை பதிவாளர் முன் பதியப்பட்ட, "இனிய உதயம் இதழில் வெளியான காப்புரிமை கொண்ட எனது, "ஜூகிபா கதையை படமாக்க, என்னிடமோ, இனிய உதயம் வெளியீட்டாளரிடமோ எந்த முன் அனுமதியும் பெறவில்லை. மோசடி செய்து, லாபம் சம்பாதிக்கும் உள்நோக்கத்துடன் இயக்குனர் சங்கர், 1997 - 98ல் தான் கற்பனை செய்தது போல் பொய்யாகக் கூறி, "எந்திரன் படத்தை உருவாக்கி, அவரே அதன் இயக்குனராக செயல்பட்டுள்ளார்.

இயக்குனரும், தயாரிப்பாளரும் சேர்ந்து கூட்டு சதி செய்து இந்த படத்தை தமிழ், தெலுங்கு, இந்தியில் வெளியிட்டு, என் காப்புரிமையை சட்டத்திற்கு விரோதமாக உரிமை மீறல் செய்துள்ளனர். இந்திய காப்புரிமை சட்டத்தின்படி, கிரிமினல் குற்றம் புரிந்துள்ள இயக்குனர், தயாரிப்பாளர் மீது வழக்கு பதிவு செய்து, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

புகார் மனுவுடன் தனது கதை வெளியாகி இருந்த பத்திரிகையின் நகலையும் ஆரூர் தமிழ்நாடன் இணைத்திருந்தார். கமிஷனரிடம் அளிக்கப்பட்ட புகார் குறி்தது அமுதா தமிழ்நாடன் கூறுகையில், "இரண்டு முறை இந்த சிறுகதை வெளிவந்துள்ளது. முதலில் நண்பர்கள் கூறியதை நான் நம்பவில்லை.

நான் பார்த்த பின்புதான் தெரிந்து கொண்டேன். இதுகுறித்து சிவில் வழக்கு தொடரப்படும். இப்பிரச்னையில் நடவடிக்கை எடுப்பதாகவும், சைபர் கிரைம் பிரிவில் விசாரிக்கும்படி பரிந்துரை செய்தும் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார், என்றார்.

அமுதா தமிழ்நாடனின் வக்கீல் எட்விக் அளித்த பேட்டியி்ல, காப்புரிமை சட்டத்தை அவர்கள் மீறியுள்ளனர் என்பதுதான் எங்கள் குற்றச்சாட்டு. இது கிரிமினல் குற்றமாகும். இதற்கு 3 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை உண்டு. இதுதவிர சிவில் சட்டத்தின் கீழ் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறோம்.

இந்த புகார், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசின் சைபர் குற்றப்பிரிவுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். வேறு மொழியில் வெளியாகி இருக்கும் `எந்திரன் சினிமாவை எதிர்த்தும் வழக்கு தொடர இருக்கிறோம், என்று கூறியுள்ளார்.

நயன்தாராவின் நடிப்பு நச்சரிப்பு ! பிரபுதேவா கடுப்பு !!

நயன்தாராவிற்கு பிரபுதேவாவுடன் காதல் கல்யாணத்தை நோக்கி போய் கொண்டிருப்பதும், பிரபுதேவாவின் முதல் மனைவி இவர்கள் மீது கோர்ட்டு கேஸூ என அலைந்து கொண்டிருப்பதும் ஒரு பக்கம் என்றால், மற்றொரு பக்கம் நயன் நடித்து சமீபத்தில் ரிலீஸான பாஸ் என்கிற பாஸ்கரன் படம் படுசூப்பராக ஓடிக் கொண்டிருப்பதை பார்த்து தொடர்ந்து நடிக்க வேண்டுமென்ற ஆசை நயனுக்கு அதிகம் இருக்கிறதாம்.

ஆனால், பிரபுதேவாவோ அவரது ஆசைக்கு தொடர்ந்து தடை போட்டு வருகிறாராம். உன்னால ஃபீல்டுல நிலைத்து நிற்க முடியும்; காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும் என நயனின் தோழிகள் தொடர்ந்து தூபம் போட்டுவருகிறதால் நயனும் தன் நடிப்பாசையை பிரபு தேவாவிடம் சொல்லி ஓ.கே., வாங்க ஒற்றை காலில் நிற்கிறாராம்.

ஒரு பக்கம் மனைவி ரமலத்தின் கோர்ட்டு கேஸூ பிரச்னை, மற்றொரு பக்கம் நயனின் நடிப்பு நச்சரிப்பு என படாதபாடு படுகிறாராம், மாஸ்டர்..பாவம் தான்!!

ஈசன் - முன்னோட்டம்

சுப்பிரமணியபுரம் படத்துக்கு பின் டைரக்டர் சசிகுமார் இயக்கும் படம் "ஈசன். சமுத்திரக்கனி, வைபவ், தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன் நடிக்கிறார்கள். அபிநயா கதாநாயகியாக நடிக்கிறார்.

அபர்ணா என்ற புதுமுகம் மற்றொரு கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படம் குறித்து டைரக்டர் சசிகுமார் கூறுகையில், "ஈசன் என்பதற்கான காரணம் படம் பார்த்தால்தான் தெரியும். ஆக்கலும், அழித்தலும் செய்கிறவன் ஈசன். ஆனால் இதில் என்ன நடக்கிறது என்பது சஸ்பென்ஸ்.

பிழைப்பு தேடி வந்தவர்கள், தலைமுறை தலைமுறையாய் வாழ்பவர்கள் என சென்னை நகரத்தின் வாழ்வின் பிம்பங்கள்தான் இந்தக் கதை. நகர வாழ்க்கை மனிதர்களின் ஆயிரம் உணர்வுகள் இதில் இருக்கின்றன.

ஒவ்வொரு மனிதனுக்கும் தனிப்பட்ட வாழ்க்கை, அதை பின்னணியாக வைத்து படம் வந்திருக்கிறது. சமுத்திரக்கனி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன் மந்திரியாக நடிக்கிறார், என்றார். ஈசனுக்கு ‌ஜேம்ஸ் வசந்தன் இசையமைக்கிறார்.

உதயநிதியின் நண்பேன்டா!

சிவா மனசுல சக்தி டைரக்டர் ராஜேஷ் எம். இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகர் அவதாரம் எடுக்கவிருக்கும் படத்திற்கு ஒரு கல் ஒரு கண்ணாடி அல்லது நண்பேன்டா என இருவேறு டைட்டில்கள் பரிசீலனையில் உள்ளதாம்.

இதில் நண்பேன்‌டா என்ற தலைப்பு, உதயநிதியின் ரெட்ஜெயண்ட் மூவிஸ் பட நிறுவனம் வெளியீட்டில் ராஜேஷ் எம். இயக்கி சமீபத்தில் வெளியான பாஸ் என்கிற பாஸ்கரன் வெற்றிப்படத்தின் மூலம் பிரபலமான வார்த்தை என்பதால் அதையே டைட்டில் ஆக்கும் உத்தேசமும் இருக்குனருக்கு இருக்கிறதாம்.

உதயநிதி முதன்முதலாக நடிக்கப் போவது காமெடி சப்ஜெக்ட் என்பதும், நண்பேன்டா டைட்டிலும் அதற்கு பொருத்தமாக இருக்கும் என்பதும் ஒரு காரணமாம்! அடடே!

காவலன் சூட்டிங்கில் திக் திக்

காவலன் சூட்டிங்கை முடித்துக் கொண்டு மும்பை புறப்பட்டுச் சென்றார் நடிகை அசின். இலங்கையில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டதுடன், அதிபர் ராஜபக்ஷேவை சந்தித்ததான் நடிகை அசி‌னுக்கு எதிராக பொதுநல ஆர்வலர்கள் பலரும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

விஜய்யுடன் அவர் ஜோடி சேர்ந்திருக்கும் காவலன் பட சூட்டிங் நடக்கும் இடங்களுக்குச் சென்று கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் செய்து வந்தனர். தமிழகத்தில் வில்லங்கம் ஏற்பட்டதால் சூட்டிங்கை கேரளாவுக்கு மாற்றியது காவலன் டீம். அங்கேயும் கறுப்புக் கொடிதான்.

இதனால் எப்படா சூட்டிங் முடியும் என காத்திருந்த அசின், ஒருவழியாக காவலன் சூட்டிங்கை முடித்து விட்டார். தான் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்திலும் நடித்து முடித்த அசின், சூட்டிங் முடிந்‌த கையோடு மும்பை புறப்பட்டு சென்று விட்டார்.

காவலன் சூட்டிங் குறித்து அசின் அளித்துள்ள பேட்டியில், "வாழ்க்கையில் என்னால் மறக்கமுடியாத சூட்டிங்னா அது காவலன் சூட்டிங்காத்தான் இருக்கும். சந்தோஷம், பதட்டம், பயம் எல்லாமே கலந்த சூட்டிங் இதுதான். தினமும் திக் திக் என இருக்கும். ஒரு கட்டத்தில் சீக்கிரம் இந்த படப்பிடிப்பு முடிந்துவிட்டால் போதும் என்றாகிவிட்டது.

ஆனால் விஜய்யும் சித்திக்கும் என்னைப் பார்த்துக் கொண்ட விதம், எனக்கு ஆதரவளித்த விதம் மறக்க முடியாதது," என்று கூறியுள்ளார். அடுத்த வாரத்தில் காவலன் படத்துக்கான டப்பிங் பணிகள் நடைபெற உள்ளன. இதில் அசின் பங்கேற்று சொந்த குரலில் டப்பிங் பேசுவார் என் காவலன் யூனிட்டிங் இருந்து கசியும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒட்டுமொத்த யூனிட்டையே புலம்ப வைக்கும் ஓவர் பில்ட்அப் ஹீரோ

படத்தின் தலைப்பில் இருப்பது‌போல தனக்கும் எக்ஸ்ட்ராவாக ஒரு அறிவு இருப்பதாக நினைத்துக் கொண்டு அந்த ஹீரோ படுத்தும்பாட்டைத்தான் ஒட்டுமொத்த யூனிட்டும் சொல்லி புலம்பிக் கொண்டிருக்கிறது.

தொட்டதிற்கெல்லாம் அந்த வாரிசு நாயகன் மூக்கை நுழைப்பதுடன், குறை சொன்னதால் கடுப்பான முன்னணி ஆர்ட் டைரக்ரட் தோட்டா தரணியே ‌பேக்கப் சொல்லி விலகி விட்டார் படத்தில் இருந்து. முன்னணி நடிகர்கள் பலரது படங்களிலெல்லாம் பணியாற்றியிருக்கிறேன்.

பெரிய பெரிய நடிகர்களே என்னை ஒரு வார்த்தை கூட சொன்னதில்லை. பாராட்டைத் தவிர வேறெதையும் அவர் சொன்னதாக நினைவில்லை. வேறு எந்த நடிகரும், இயக்குநரும், தயாரிப்பாளரும் எனது பணியில் குறுக்கிட்டதுமில்லை, குறை சொன்னதுமில்லை.

அந்த அளவு தொழிலில் நேர்மையாகவே இருந்திருக்கிறேன். ஆனால் நேற்று வந்த ஒரு ஹீரோ எனக்கே ஆர்ட் டைரக்ஷன் சொல்லித் தருகிறார். அதைக் கேட்டுக் கொண்டிருக்கும் அளவுக்கு எனது பகுத்தறிவும் தன்மானமும் இடம்தரவில்லை" என்று கூறி விலகிவிட்டார் தோட்டா.

பாலிவுட் நடிகருக்கு 15 நாள் சிறை

பாலிவுட் நடிகர் ஜான் ஆப்ரகாம், பைக் ஓட்டுவதில் வல்லவர். இவர் மும்பையின் பந்திரா பகுதியில் நடைபெற்ற பைக் போட்டியில் 1100சிசி யமஹா பைக்கை வென்றுள்ளார்.

ஆனால் 2009ம் ஆண்டு ஜான் ஆப்ரகாம் பைக் விபத்து ஒன்றில் சிக்கினார். அந்த விபத்தில் ஜானின் பைக் மோதியதில் சைக்கிளில் வந்த 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

அவ்விபத்து தொடர்பாக ஜான் உடனடியாக கைது செய்யப்பட்டு, பின்னர் பெயிலில் வெளி வந்தார். இது தொடர்பாக வழக்கு மும்பை கோர்ட்டில் நடைபெற்று வந்தது. சமீபத்தில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

அந்த தீர்ப்பில் ஜான் ஆப்ரகாமிற்கு 15 நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஜான் ஆப்ரகாமின் வக்கீல் மேல் கோர்ட்டில் மேல்முறையீடு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

விஜய்க்கு ‌நோ ; ஆர்யாவுக்கு ‌யெஸ்!

பாலிவுட்டில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் ஆன த்ரீ இடியட்ஸ் படத்தின் தமிழ் ரீ-மேக்கில் நடிகர் விஜய் நடிக்கவிருப்பது தெரிந்த சங்கதிதான். இந்த படத்தில் விஜய்யுடன் நடிக்க சிம்பு, மாதவன் ஆகியோரிடம் கேட்கப்பட்டது. இருவருமே மறுத்து விட்டனர்.

இத்தனைக்கும் இந்தி த்ரீ இடியட்ஸில் மாதவனும் ஒரு இடியட்டாக நடித்திருந்தார். தமிழில் விஜய் நாயகனாக நடிக்கவிருக்கும் த்ரீ இடியட்ஸில் ஏனோ மாதவன் நடிக்க மறுத்து விட்டார். அதேநேரம் லிங்குசாமியின் இயக்கத்தில் ஆர்யா நாயகனாக நடிக்கும் வேட்டை படத்தில் நெகட்டிவ் ரோலில் நடிக்க மாதவன் சம்மதித்திருக்கிறாராம்.

ஏன் விஜய்க்கு நோ ; ஆர்யாவுக்கு மட்டும் யெஸ்? என்று மாதவனிடம் கேட்டால், எனக்கு இதமாதிரி வித்தியாசமான ரோலில் நடிக்க ஆசை. இதுமாதிரி கேரக்டர்கள்தான் பேசப்படும் என நழுவுகிறார். படத்தில் ஆர்யாவின் சகோதரனாக நடிக்கிறாராம் மாதவன்.

சாக்லெட் பாயாக இருந்த மாதவனை ஆக்ஷன் நாயகனாக மாற்றிய பெருமை டைரக்டர் லிங்குசாமியையே சேரும். அதனால்தான் லிங்குசாமியின் வேட்டையில் இரண்டு நாயகர்களில் ஒருவராக நடிக்க மாதவன் சம்மதித்திருப்பார் என்கிறது விவரமறிந்த கோடம்பாக்கம் வட்டாரம். அப்போ விஜய்யுடன் நடிக்க மறுத்ததற்கு காரணம்?

சிடிஎம்ஏ ஐபோனை அறிமுகப்படுத்துகிறது ஆப்பிள்

ஆப்பிள் நிறுவனம், ரிலையன்ஸ் மற்றும் டாடா-டெலிசர்வீஸ் இரு பெரிய தொலைதொடர்பு நிறுவனங்களுடன் சேர்ந்து சி.டி.எம்.ஏ., தொழில்நுட்பத்துடன் கூடிய ஐ-போன் இந்தியாவில் வெளியிட இருப்பதாக தி வால்ஸ்டீரீட் பத்திரிக்கை ‌செய்தி வெளியிட்டுள்ளது.

ஜி.எஸ்.எம்., தொழில்நுட்பத்துடன் கூடிய ஐ-போன் இந்தியாவில் பாரதி ஏர்டெல் மற்றும் வோடோபோன் குழுமம் வழங்குகின்றன. 2007ம் ஆண்டில் ஆப்பிள் நிறுவனம் ஸ்மார்ட் போன் மற்றும் டச்ஸ்கிரீன் போன் ஆகியவைகளை அமெரிக்காவில் அறிமுகம் செய்தது.

ஆனால் இந்தியாவில் இப்போது தான் ஸ்மார்ட்போன் ஆகியன மார்கெட்களிள் விற்பனைக்கு வந்துள்ளன.

மேலும் அப்பத்திரிக்கை வெளியிட்டுள்ள செய்தியில், வளந்து வரும் மொபைல் தொழில்நுட்பதுறையில் ஒரு மாதத்தில் 18 மில்லியன் மக்கள் புதிய இணைப்பை பெறுகின்றனர். இந்தியாவில் 20 சதவீதம், 670 மில்லியன் மக்கள் சி.டி.எம்.ஏ., போன் உபயோகிக்கின்றனர்.

உலகின் முதல் 4ஜி மொபைல் போன்

ஸ்பிரிண்ட் மற்றும் ஹெச்டிசி நிறுவனங்கள் சேர்ந்து ஹெச்டிசி எவோ 4ஜி என்ற உலகின் முதலாவது 4ஜி மொபைல்போனை விளம்பரப்படுத்தியுள்ளன.

இது 3ஜி மொபைல்போன்களை விட 10 மடங்கு வேகம் கூடியதுடன்,படங்கள், பைல்கள், வீடியோக்கள் போன்றவற்றை நிமிடக்கணக்கில் அல்லாமல், செகண்ட்களில் டவுன்லோடு செய்யக்ககூடியதாக , அவ்வாறு தரவிரக்கப்பட்ட வீடியோக்களை 4.3 அங்குல அகலத்திரையில் காணக்கூடியதாகவும் உள்ளது.

ஹெச்டிசி எவோ 4ஜி மொபைல்போனில் அடங்கியிருப்பவை. : 1 ஜிபி ஸ்னாப்டிராகன் பிராசசர், 8 எம்பி கேமரா, மொபைல் ஹாட்ஸ்பாட் கேபபிலிட்டி கனெக்ட்ஸ் 8 வை பை என்ஏபிள்டு டி‌வைசஸ், ஹெச்டிஎம்ஐ கனெக்சன், ஜிபிஎஸ் நேவிகேசன், மைக்ரோஎஸ்டி சிலாட், 3.5 மிமமீ. ஜாக், டிஜிட்டல் கம்பாஸ், மோசன் சென்சார் மற்றும் ஹெச்டிசி சென்ஸ் உள்ளிட்டவைகள் இதன் சிறப்பம்சமாகும்.

இசை உலகின் சூப்பர் ஸ்டார் மைக்கேல் ஜாக்சன்

அமெரிக்க இசை உலகின் சூப்பர் ஸ்டாராக விளங்கிய மைக்கேல் ஜாக்சன் (50), மரணம் அடைந்துவிட்டார்.

பாப் பாடகர், பாடலாசிரியர், இசை தயாரிப்பாளர், டான்சர், நடிகர் மற்றும் தொழில் அதிபர் என்று மைக்கேல் ஜாக்சனுக்கு பல முகங்கள் உண்டு.

1958 ஆக. 29ல், ஜோசப் வால்டர் மற்றும் காதரின் எஸ்தர் ஆகியோருக்கு, ஏழாவது மகனாக, இண்டியானா நகருக்கு அருகிலுள்ள கேரி எனும் இடத்தில் பிறந்தவர் ஜாக்சன். இவரது குடும்பம் சாதாரணமானது. வீட்டில் மொத்தம் 9 பிள்ளைகள். 11 வயதிலேயே அவரது சகோரர்களுடன் இணைந்து "தி ஜாக்சன் 5" இசை நிகழ்ச்சி மற்றும் ஆல்பங்களை வெளியிட்டார். "ஐ வான்ட் யூ பேக்" எனும் ஆல்பம் மிகவும் பிரபலம் ஆனது.

சகோதரர்களுடன் தொடர்ச்சியான "ஹிட்' ஆல்பங்களை கொடுத்துக் கொண்டிருந்த ஜாக்சன், 1971ம் ஆண்டு முதல் இசை உலகின் தனது தனி பிரவேசத்தை மேற்கொண்டார். 1972ல் "காட் டு பி தேர்' எனும் ஆல்பம், 1979ல் "ஆப் தி வால்' எனும் "டிஸ்கோ டான்ஸ்' இசை நிகழ்ச்சி, 1982ல் "திரில்லர்' ஆல்பம், 1987ல் "பேட்' , 1991ல் "டேஞ்சரஸ்' மற்றும் 1995ல் "ஹிஸ்டரி' ஆகிய ஆல்பங்கள் சக்கை போடு போட்டன.

1980களில் இவர் அமெரிக்க இசை உலகின் தனி ராஜாவாக (தி கிங் ஆப் பாப்) உருவானார். அப்போதுதான் எம்.டி.வி., உருவாகியிருந்த நேரம். இந்த "டிவி' ஜாக்சனின் நிகழ்ச்சியால் பிரபலம் அடையத் தொடங்கியது. "பீட் இட்", "பில்லி ஜீன்" மற்றும் "திரில்லர்" ஆகிய இசை நிகழ்ச்சிகள் எம்.டி.வி.,யின் "ஹிட்" நிகழ்ச்சிகள்.

1990களில் "பிளாக் ஆர் ஒயிட்' மற்றும் "ஸ்கிரீம்" ஆகிய நிகழ்ச்சிகள் எம்.டி.வி.,யின் புகழை உச்சிக்கு எடுத்து சென்றன.
ஜாக்சனின் நடனம் மிகவும் வித்தியாசமானது. அதற்கு முன் யாரும் அதுபோன்று நடனம் ஆடியது இல்லை. மிகவும் சிக்கலான உடல் அசைவுகளை வெளிப்படுத்தும் விதத்தில் அவர் ஆடினார். ரோபோ நடப்பது போன்றும், நிலவில் காலடி எடுத்து வைத்த வீரர்கள் போன்றும் மேடையில் ஜாக்சன் ஆடியது, ரசிகர்களை மெய்மறக்கச் செய்தது.

உலகம் முழுவதும் 75 கோடி ஆல்பங்கள், 13 கிராம்மி விருதுகள் பெற்று கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றது என ஜாக்சனின் புகழ் உச்சிக்கு சென்றது. அமெரிக்காவில் பாப், ராக் இசையில் 1980களில், மைக்கேல் ஜாக்சனுக்கு ஈடு இணை யாரும் இல்லை என்ற அளவில் உயர்ந்தார்.

20ம் நூற்றாண்டின் மாபெரும் ஹீரோவாக விளங்கியவர். ஆனால், அவர் வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் புகழ் சரிந்து, வீழ்ச்சி அடைந்தவராக காணப்பட்டார்.

இந்த வீழ்ச்சிக்கு காரணம் அவர் பலமுறை பிளாஸ்டிக் சர்ஜரி செய்தது, தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டது. பிளாஸ்டிக் சர்ஜரி செய்த இடங்களில் புற்றுநோய் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. என்றாலும் தனது இசை உலக மறு பிரவேசத்தை நடத்த அவர் திட்டமிட்டிருந்தார். அடுத்த மாதம் முதல், 2010ம் ஆண்டு வரை லண்டனில் 50 இசை கச்சேரிகளுக்கு அவர் திட்டமிட்டிருந்தார். இதற்காக அவர் இன்னொரு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யவும் திட்டமிட்டிருந்தார்.

1993ல் ஒரு பேட்டியில் தனது சிறு வயது கால அனுபவங்களை கூறியிருந்தார். அப்போது, அவர் தந்தை தன்னை எப்படியெல்லாம் கொடுமைப்படுத்தினார், சித்திரவதக்கு உள்ளாக்கினார் என்பதை விவரித்தார். 2003ம் ஆண்டில் சிறுவர்களை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் ஜாக்சன் குற்றம் சாட்டப்பட்டார். என்றாலும் அவர், 2005ல் அவ்வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

பிரஸ்லி என்பவரை ஜாக்சன் 1996ல் திருமணம் முடித்தார். 1999ல் டெபோரா எனும் நர்சை மணம் முடித்துக் கொண்டார். அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இரு திருமணங்களும் விவாகரத்தில் முடிந்தது. என்றாலும், பின்னர் மீண்டும் அவர்கள் சந்தித்துக் கொண்டனர்.

மைக்கேல் ஜாக்சனுக்கு ஒரு பெண் குழந்தை, இரு ஆண் குழந்தை உள்ளனர். கடைசி மகனை (மைக்கேல் ஜாக்சன் 2) வாடகைத் தாய் உதவியுடன் பெற்றதாக கூறப்படுகிறது. மற்ற குழந்தைகள் (ஜோசப் ஜாக்சன் மற்றும் பாரிஸ் மிசேல் காதரின்) டெபோராவுக்கு பிறந்தவர்கள்

ஃப்ளை தியேட்டர் போன்

ஐரோப்பிய நாடுகளில் பிரபலமான பிளை மொபைல், அண்மையில் தன் புது மொபைல் போன் பிளை போன் தியேட்டர் என்னும் மாடலை (எம்.வி.135) இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

இதில் 3ஜிபி, ஏவிஐ மற்றும் எம்பி4 ஆகிய பார்மட்களில் அமைந்த வீடியோ படங்களை, நொடிக்கு 20 முதல் 25 பிரேம்கள் வரை இயக்கலாம். மொபைல் போன்கள் தொலை தொடர்பு சாதனமாக மட்டும் இயங்காமல், நல்லதொரு டிஜிட்டல் பொழுது போக்குக் கருவியாகவும் மாறி வருகிறது என்பதற்கு இந்த மாடல் போன் ஓர் எடுத்துக் காட்டு.

டெக்ஸ்ட் மெசேஜ்களைக் கையாள்வதிலும் இதில் புதிய வசதிகள் புகுத்தப்பட்டுள்ளன. இரண்டு சிம் பயன்பாடு, 2.4 அங்குல வண்ணத்திரை, 2.5 மிமீ ஆடியோ இணைப்பு, நேரம் குறித்து பதியக்கூடிய வசதி கொண்ட எப்.எம். ரேடியோ, எப்.எம். அலாரம், பதிந்தே கிடைக்கும் கேம்ஸ், 1000 எஸ்.எம்.எஸ். மற்றும் 2000 முகவரிகளைக் கொள்ளும் இடம், 9.9 எம்.பி. நினைவகம், 8 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்தும் திறன் கொண்ட மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட் ஆகியவை இந்த போனின் மற்ற அம்சங்களாகும்.

இந்த போனின் விலை ரூ.3,949 எனக் குறிக்கப்பட்டுள்ளது. இரண்டு சிம் மொபைல் போன்களை வடிவமைப்பதில் முன்னோடியாகச் சிறந்த இடத்தைப் பெற்றுள்ள பிளை மொபைல், பிரிட்டனைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் மெரிடியன் மொபைல் நிறுவனத்திற்குச் சொந்தமான நிறுவனமாகும். இந்தியா உட்பட 25 ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இது இயங்கி வருகிறது.

பட அதிபர்களால் ஒதுக்கப்படும் நடிகர்!

ஒரு படம் சுமாராக ஓடியதற்கே, புகழின் உச்சிக்கே சென்றது மாதிரியான ஓவர் பில்ட்அப் கொடுத்த அந்த நடிகரை பட அதிபர்கள் பலரும் ஒதுக்கி வருகிறார்கள்.

காதலில் விழுந்த அந்த நடிகர் பிரபல நடிகையின் தம்பி என்பது ஊருக்கே தெரிந்த சங்கதி. அக்காவின் அட்வைஸ்படி குண்டான உடம்பை சிலிம் ஆக்கி, சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். முதல் படம் சுமாராக ஓடியது.

தமிழ்ப்படத்தில் வரும் ஹீரோ மாதிரி ஓவர் நைட்டில் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டதாக நினைத்த நாயகன், சம்பளமாக கோடிக்கணக்கில்‌ கேட்க ஆரம்பித்தார். அவரது 2வது படம் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை. இப்போது வாய்ப்பில்லாமல் இருக்கிறார்.

அவரா.. ஓவரா சம்பளம் கேட்பாரே, என்று கூறி பட அதிபர்கள் பலரும் புறக்கணித்து ஒதுக்கி வருகிறார்களாம். தவழும்போதே பறக்க ஆசைப்படலாமா?

சொந்த படம் எடுக்கிறார் அஜித்

அஜித்தை வைத்து நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி பல படங்களைத் தயாரித்துள்ளார். இந்நிறுவனத்தில் தயாராகும் படங்களுக்கு அஜித் ஏறக்குறைய ஒரு தயாரிப்பாளர்தான் என்றொரு பேச்சு முன்பு இருந்தது.

நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தியுடன் ஏற்பட்ட பிரிவுக்குப் பின் நடிகராக மட்டுமே இருந்து வந்தார் அஜித். தற்போது தயாரிப்பாளராக புதிய அவதாரம் எடுத்துள்ளார் அஜித்.

தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்திற்கு குட்வில் என்டர்டெய்ன்மெண்ட் என்ற பெயர் சூட்டியிருக்கிறார். விரைவில் இதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளார் தல.

எனது நண்பர்களுக்கும் குட்வில்லில் வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்த அஜித்திடம், இளைய தளபதி விஜயை வைத்து படம் எடுப்பீர்களா என்றால்... கண்டிப்பாக அந்த எண்ணம் உண்டு என்று சிம்பிளாக பதிலளித்தார் தல. தற்போது தனது நிறுவனத்திற்காக பிசியாக கதை கேட்டு வருகிறார் அஜித்.
Related Posts with Thumbnails