Saturday, October 30, 2010

கம்‌பெனிக்கு பூட்டு போடத் தயாராகும் இயக்குனர்!

பிரமாண்ட இயக்குனர் என்று பெயரெடுத்த அந்த இயக்குனர் சமீபத்தில் எந்திரமான படத்தை இயக்கி முடித்த கையோடு, தனது சொந்த பட கம்பெனியின் கணக்கு வழக்குகளை பார்த்திருக்கிறார்.

பெயர் சொல்லுகிற மாதிரி படங்களை தயாரித்து வெளியிட்டு வரும் அந்த நிறுவனத்தின் லாப நஷ்ட கணக்கில் லாபத்தை விட நஷ்டம் தலைதூக்கி நிற்கிறதாம்.

மூன்று முக்கியமான படங்களால் மட்டும் ரூ.9 கோடி வரை நஷ்டத்தை சந்தித்திருக்கும் அந்த கம்பெனியை இனியும் ‌தொடர வேண்டுமா? என்ற யோசனையில் மூழ்கியிருக்கும் பிரமாண்ட இயக்குனர், விரைவில் கம்பெனிக்கு பூட்டு போடப் போவதாக சொல்கிறது கோடம்பாக்க தகவல்.

அநேகமாக கம்பெனியின் கடைசிப்படம் அன்நதபுரத்து வீடாகத்தான் இருக்கும் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

1 comment:

  1. என்னது காந்தி செத்துட்டரா..?:)))

    ReplyDelete

மன்மதன் அம்புக்காக கமல்ஹாசன் எழுதிய பாடல்

டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன், த்ரிஷா, மாதவன், சங்கீதா நடிக்கும் படம் மன்மதன் அம்பு. உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் உருவாக...