Wednesday, October 13, 2010

சிடிஎம்ஏ ஐபோனை அறிமுகப்படுத்துகிறது ஆப்பிள்

ஆப்பிள் நிறுவனம், ரிலையன்ஸ் மற்றும் டாடா-டெலிசர்வீஸ் இரு பெரிய தொலைதொடர்பு நிறுவனங்களுடன் சேர்ந்து சி.டி.எம்.ஏ., தொழில்நுட்பத்துடன் கூடிய ஐ-போன் இந்தியாவில் வெளியிட இருப்பதாக தி வால்ஸ்டீரீட் பத்திரிக்கை ‌செய்தி வெளியிட்டுள்ளது.

ஜி.எஸ்.எம்., தொழில்நுட்பத்துடன் கூடிய ஐ-போன் இந்தியாவில் பாரதி ஏர்டெல் மற்றும் வோடோபோன் குழுமம் வழங்குகின்றன. 2007ம் ஆண்டில் ஆப்பிள் நிறுவனம் ஸ்மார்ட் போன் மற்றும் டச்ஸ்கிரீன் போன் ஆகியவைகளை அமெரிக்காவில் அறிமுகம் செய்தது.

ஆனால் இந்தியாவில் இப்போது தான் ஸ்மார்ட்போன் ஆகியன மார்கெட்களிள் விற்பனைக்கு வந்துள்ளன.

மேலும் அப்பத்திரிக்கை வெளியிட்டுள்ள செய்தியில், வளந்து வரும் மொபைல் தொழில்நுட்பதுறையில் ஒரு மாதத்தில் 18 மில்லியன் மக்கள் புதிய இணைப்பை பெறுகின்றனர். இந்தியாவில் 20 சதவீதம், 670 மில்லியன் மக்கள் சி.டி.எம்.ஏ., போன் உபயோகிக்கின்றனர்.

2 comments:

  1. arumayana thagaval

    balachandar s
    www.maalaineram.com

    ReplyDelete
  2. தகவலுக்க மிக்க நன்றி... சகோதரம்

    ReplyDelete

மன்மதன் அம்புக்காக கமல்ஹாசன் எழுதிய பாடல்

டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன், த்ரிஷா, மாதவன், சங்கீதா நடிக்கும் படம் மன்மதன் அம்பு. உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் உருவாக...