ஏ.வி.எம். ஸ்டுடியோவில் தீ

சென்னை வடபழனியில் உள்ள ஏ.வி.எம். ஸ்டுடியோவில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டது.

இதில் பல கோடி மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.

நடிகர் விஜய் நடிக்கும் வேட்டைக்காரன் படத்தின் படப்பிடிப்பு ஏ.வி.எம். ஸ்டுடியோவின் 7-வது தளத்தில் பிரத்யேக செட் அமைக்கப்பட்டு நடைபெற்று வந்தது.

இதற்கு அடுத்த 6-வது தளத்தில், டி.வி. நிகழ்ச்சி ஒன்றுக்கான படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு 7-வது தளத்தில் வேட்டைகாரன் படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்தது. படப்பிடிப்பு முடிந்து நள்ளிரவில் அனைவரும் சென்று விட்டனராம்.

அதிகாலை 7-வது தளத்தில் இருந்து பெருமளவில் புகை வெளியேறியதாம். தீ விபத்து ஏற்பட்டதைக் கண்ட காவலர்களும் மற்ற செட்களில் இருந்த ஊழியர்களும் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதற்குள் தீ 6-வது தளத்துக்கும் பரவியது.

வடபழனி, போரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்ளில் இருந்து 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களும், குடிநீர் லாரிகளும் விரைந்து வந்து தீயைக் கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சிகளில் ஈடுபட்டன. சுமார் 4 மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இதில் 6, 7-வது தளங்களில் போடப்பட்டிருந்த செட்களும், பல கோடி ரூபாய் மதிப்பிலான கருவிகளும் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.

7-வது தளத்தில் வேட்டைகாரன் படப்பிடிப்பு முடிந்தவுடன் அங்கு சில பெரிய விளக்குகள் எரிந்த நிலையிலேயே வைக்கப்பட்டு இருந்ததாகவும், இதில் ஏற்பட்ட அதிக உஷ்ணம் காரணமாக செட் போட பயன்படுத்தப்பட்டிருந்த தெர்மாகோல் உள்ளிட்ட பொருள்களில் தீ ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது

விண்டோஸ் XP -ல் பூட் பிளாப்பி

புதிய பிளாப்பி டிஸ்க்கை அதன் டிரைவில் நுழைக்கவும்

MY Computer சென்று பிளாப்பி டிஸ்க் icon- ஐ வலது க்ளிக் செய்து format தேர்வு செய்யவும்

வரும் திரையில் format option சென்று Create an MS-DOS startup disk என்பதை தேர்வு செய்யது ok கொடுக்கவும்.

இதற்கு குறைந்தது 5 பிளாப்பி டிஸ்க் தேவைப்படும்.

ஒருவேளை உங்களிடம் கணினியை பூட் செய்ய விண்டோஸ் XP CD இல்லைஎன்றால் இந்த பிளாப்பியை பயன்படுத்தி பூட் செய்யலாம்

மலையன் - -சினிமா விமர்சனம்

சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலை நடத்துபவர் சரத்பாபு, அவர் ஆலையில் வேலை செய்யும் விசுவாச மிக்க ஊழியர் கரண். தொழில் போட்டியில் சரத்பாபுவும் சக்திகுமாரும் மோதிக் கொள்கிறார்கள். சரத்பாபுவுக்கு துணையாக எதிரிகளை நொறுக்குகிறார் கரண்.

கரணுக்கும் உள்ளூர் அடாவடி பெண் ஷம்முவுக்கும் மோதல் ஏற்பட்டு காதல் வயப்படுகின்றனர். பெற்றோர் இருவருக்கும் திருமணம் நிச்சயம் செய்கிறார்கள். அப்போது அந்த பயங்கரம் நடக்கிறது. சரத்பாபுவின் பட்டாசு பேக்டரியில் விபத்து ஏற்பட்டு பலர் சாகின்றனர். அதில் ஷம்முவும் சிக்கி பலியாகிறார்.

சக்திகுமார் சதியால் விபத்து ஏற்பட்டதாக கரண் கொதிக்கிறார். சரத்பாபுவோ சாதாரண விபத்துதான் என்று சொல்லி சமாதான படுத்துகிறார். ஆனால் கரண் மனது அதை ஏற்க மறுக்கிறது. சதிகாரர்களை கண்டுபிடிக்க முயற்சிக்கிறார். ரவுடிகளை வேட்டையாடி சதி திட்டத்தின் ஆணிவேராக இருப்பவரை நெருங்கும்போது அதிர்ச்சி கிளைமாக்ஸ்...

சிவகாசி பட்டாசு தொழிலாளர்களின் வாழ்க்கை போராட்டத்தை கலகலப்பு, விறுவிறுப்பு என காட்சிகளாக்கி கண்முன் நிறுத்துகிறார் இயக்குனர் எம்.பி. கோபி.

அழுக்கு லுங்கி, சட்டையுடன் பட்டாசு மருந்து கலக்கும் ஊழியர் வேடத்தில் கரண் கச்சிதமாக பொருந்துகிறார். எதிரிகளை நொறுக்கும்போது ஆவேசமும் அடாவடி காதலியின் ஆவேசப்பார்வையில் பெட்டிப் பாம்பாக அடங்குகையில் காதலும் காட்டுகிறார். காதலியின் கருகிய உடலை பார்த்து அலறுவது உருக்கம். சதிகாரனை அடையாளம் கண்டு அதிரும்போது, எல்லோருக்கும் அதிர்ச்சி. சண்டையிலும் வேகம் காட்டுகிறார்.

ஷம்மு துறு துறுவென வருகிறார். உதயதாரா வந்து போகிறார். அவரின் திடீர் காதல் செயற்கைத்தனம். சரத்பாபு அமைதியான வில்லனாக மிரட்டுகிறார். தொழிலாளர்களிடம் கரிசனம் காட்டும் அவர் சர்வதேச தீவிரவாதிகளுக்கு வெடிமருந்து கடத்துபவர் என்றும் தொழிலாளர்களை சாகடிக்க தூண்டியவர் என்றும் அறியப்படும்போது, திடுக்கிட வைக்கிறது. அவரை குடோனுக்குள்ளேயே போட்டு கரண் எரிப்பது எரிமலைத்தனம்.


முதலாளி கெட்டவன் என்பதை ஊருலகத்துக்கு பகிரங்கப்படுத்த மறுக்கும் கரணின் வாதம் ஏற்புடையதாக இல்லை. சரத்பாபு மீதான விசுவாசத்துக்கு காரணம் சொல்லும் கரணின் சிறு வயது பட்டினி கொடுமை பிளாஷ்பேக் கதை. விழிகளில் நீர் கோர்க்கிறது.


கஞ்சா கருப்பு, மயில்சாமி சிரிக்க வைக்கின்றனர். தினாவின் இசை இனிமை சேர்க்கிறது. ஸ்ரீதரின் ஒளிப்பதிவில் பட்டாசு தேச பதிவுகள்


குழந்தைகளை வளர்க்க மைக்கேல் ஜாக்சன் தாய்க்கு கோர்ட்டு அனுமதி

மைக்கேல் ஜாக்சன் தன் 2 மனைவிகளிடம் இருந்து முறைப்படி விவாகரத்து பெற்று விட்டதால், அவரது 3 குழந்தைகளும் ஆதரவற்றவர்களாகி விட்டனர். மைக்கேல் ஜாக்சனின் தாய் காதரீன் ஜாக்சன் (வயது 79). அந்த 3 குழந்தைகளையும் தன் பொறுப்பில் வைத்துள்ளார். இதற்கு மைக்கேல் ஜாக்சனின் மனைவி டெப்பிரோ கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

3 குழந்தைகளையும் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும். குழந்தைகளை வளர்க்கும் உரிமை தாய்க்கே உண்டு என்று அவர் கூறினார். லாஸ்ஏஞ்சல்ஸ் கோர்ட்டில் இந்த வழக்கு நடந்து வருகிறது.

இந்த நிலையில் இருதரப்பு வக்கீல்களும் சந்தித்து இந்த பிரச்சினை குறித்து பேசி னார்கள். அப்போது காதரீன்-டெப்பிரோ இடையே சமரசம் ஏற்பட்டது. மைக்கேல் ஜாக்சனின் 3 குழந்தை களையும் காதரீன் வளர்க்க டெப்பிரோ சம்மதித்தார்.

விரும்பும் நாட்களில் குழந்தைகளை காட்ட வேண்டும் என்று டேப்பிரோ நிபந்தனை விதித்துள்ளார். குழந்தைகள் பராமரிப்பு விஷயத்தில் சமரசம் ஏற்பட்டதால், இது பற்றிய முடிவு திங்கட்கிழமை லாஸ்ஏஞ்சல்ஸ் கோர்ட்டில் அறிவிக்கப்படுகிறது

துணைபோவதும் குற்றமே!

நேர்மையாளர், அப்பழுக்கற்றவர், கறை படியாத கரங்களுக்குச் சொந்தக்காரர் என்று எதிர்க்கட்சியினரேகூட ஏற்றுக்கொள்ளும் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில், ""கோடிகள்'' என்பது சர்வ சகஜமாக ஊழல்களிலும், முறைகேடான வர்த்தக நடவடிக்கைகளிலும் இடம்பெறுவது வருத்தமாக இருக்கிறது.

அலைக்கற்றை ஒதுக்கீட்டில் மத்திய தகவல் தொடர்புத்துறை கையாளும் வழிமுறைகளால் மத்திய அரசுக்கு வர வேண்டிய கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் குறைந்துவிட்டது, ""முதலில் மனுச் செய்தவருக்கே முதலில் அனுமதி'' என்ற கொள்கையால் அரசுக்கு லாபம் ஏதும் இல்லை என்று இடைவிடாமல் கூறிவரும் நிலையில் "2-ஜி' அலைக்கற்றை ஒதுக்கீட்டிலும் அதே முறையைக் கடைப்பிடித்துள்ளதாகவும், ஏற்கெனவே இப்படித்தான் நடந்திருக்கிறது என்றும் அத்துறைக்கான அமைச்சர் மீண்டும் கூறியிருக்கிறார்.

அடித்தளக் கட்டமைப்புத் துறையை மேம்படுத்தத் தேவைப்படும் திட்டங்களுக்காக அரசின் நவரத்தினங்களான அரசுத்துறை நிறுவனங்களின் பங்குகளைக் கூட விற்றால் பரவாயில்லை என்ற அளவுக்கு நிதியைத் தேடும் ஓர் அரசு, இன்னமும், ""முதலில் வருபவருக்கு முதலில் அனுமதி'' என்ற கொள்கையைக் கடைப்பிடிப்பதன் மர்மம்தான் அம்பலமாகவில்லை.

இதில் ஊழல் நடைபெறுகிறது, கோடிக்கணக்கான பணம் கைமாறுகிறது என்பதெல்லாம் ஊகிக்க முடியாத விஷயங்கள் அல்ல. ஆனால் நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியாத வகையில் நன்கு திட்டமிட்டு, (நீதிபதி ரஞ்சித் சிங் சர்க்காரியா பாஷையில் சொல்வதானால்) விஞ்ஞான முறைப்படி நடைபெறுகிறது என்பதல்லவா உண்மை.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் தீருபாய் அம்பானியின் மறைவுக்குப் பிறகு அவருடைய பிள்ளைகள் முகேஷ் அம்பானியும் அனில் அம்பானியும் சொத்துகளைப் பிரித்துக் கொண்டதும், அதில் அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டதும், அவர்களிடையே தொழில்ரீதியாகப் போட்டி ஏற்பட்டதும் அவர்களுடைய சொந்த விவகாரங்கள். ஆனால் நாட்டையே பாதிக்கும் ஒரு விஷயத்தை அந்தச் சகோதரர்களில் ஒருவர் சில நாள்களுக்கு முன்னால் தன்னுடைய நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் கலந்துகொண்ட பொதுக்குழு கூட்டத்தில் கூறியிருக்கிறார். அது உண்மையா அல்லது வியாபாரப் போட்டிக்காகக் கூறப்பட்டதா என்று விசாரித்து மக்களுக்குத் தெரிவிக்க வேண்டிய கடமை தனக்கு இருப்பதாகக் கூட மத்திய கம்பெனிகள் விவகாரத்துறையும் சட்டத்துறையும் காட்டிக் கொள்ள மறுக்கிறதே, அது ஏன் என்று நமக்கே கேட்கத் தோன்றுகிறதே, பிரதமர் மன்மோகன் சிங்கால் எப்படி எதுவுமே தெரியாததுபோல இருக்க முடிகிறது?

தேசிய அனல் மின் நிலையத்துக்குக் கூடத் தராமல் கோதாவரி-கிருஷ்ணா வடிநிலத்தில் கிடைக்கும் இயற்கை எரிவாயு முழுவதையும் தன்னுடைய சகோதரர் விற்றுக் காசாக்கப் பார்க்கிறார் என்று அம்பானி சகோதரர்களில் ஒருவரான அனில் அம்பானி குற்றம்சாட்டியிருக்கிறார். விசாரணைகூட இல்லாமல் போனால் எப்படி?

அடுத்ததாக வந்திருக்கிறது பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதியில் 2500 கோடி ரூபாய்க்கு நடந்திருப்பதாகக் கூறப்படும் புதிய ஊழல். இதை மக்களவையிலேயே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் வியாழக்கிழமை எழுப்பியிருக்கிறார்கள். இதில் உண்மையை வெளிக்கொண்டுவர நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கூட்டுக்குழுவை நியமிக்க வேண்டும் என்றுகூட ஒருமித்த குரலில் கோரியிருக்கிறார்கள். ""இது அவசியம் இல்லை, வெறும் அரசு விசாரணையே போதும்'' என்று மத்திய அமைச்சர் கூறிவிட்டார்.

ஆப்பிரிக்க நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்ய முற்பட்ட நிறுவனங்கள் எவை என்று வெளிப்படையாகத் தெரியவில்லையாம்; அந்த நாடுகளில் இந்த அரிசியை வாங்கும் நிறுவனங்கள் எது என்றும் தெரியவில்லையாம். அதைவிட வேடிக்கை, சில நாடுகளுக்கு இந்த அரிசியே போகவில்லையாம். அப்படியானால் ஏற்றுமதியானதாகக் கணக்கு காட்டப்பட்டு அந்த அரிசி இங்கேயே பதுக்கப்பட்டு, விலை ஏறும்போது விற்பதற்குப் பயன்படுத்தப்பட உள்ளதா? முன்பேர வர்த்தகத்தைத் தடை செய்ய வேண்டும் என்று நடுநிலையாளர்கள் கோரும்போதெல்லாம் அரசு அதை நிராகரிப்பது இது போல ஊழல்கள் நடந்தால்தான் தங்களுக்குத் தேர்தல் நிதி கிடைக்கும் என்பதாலா?

2,500 கோடி, 50,000 கோடி என்பதெல்லாம் வெறும் சைபர்கள்தானா, அந்த ரூபாய்க்கெல்லாம் மதிப்பே கிடையாதா? மக்கள் தொடர்ந்து ஏமாற வேண்டியதுதானா?

தவறுக்கு மேல் தவறு நடக்கிறது. அதைத் தட்டிக் கேட்க வேண்டிய பொறுப்பில் இருப்பவர்கள் கண்டும் காணாமல் இருப்பதும், தவறுக்குத் துணை போவதற்குச் சமம்தானே! குற்றம் செய்பவர்களைவிடக் குற்றத்துக்குத் துணை போவதல்லவா அதைவிடத் தவறு?

பொருளாதார மேதையாகவும், கறை படியாத கரங்களுக்குச் சொந்தக்காரராக இருந்தாலும் போதுமா? தவறைத் தட்டிக் கேட்கவும், தடுக்கவும் திராணி இல்லாதவர்களும் தலைமைப் பதவியில் இருப்பதுபோன்ற ஆபத்து வேறு எதுவும் இருக்க முடியாது. இனியாவது, பிரதமர் சற்று சுதாரித்துக் கொண்டு செயல்பட்டால் அவருக்கும் நல்லது, நாட்டுக்கும் நல்லது!

'மாப்பிள்ளை பெஞ்ச்' மாணவர் கதை!

கிரீன் ஆப்பிள் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் புதிய படம் "சிந்தனை செய்'.

படத்தை இயக்கி கதாநாயகனாக நடிப்பவர் யுவன். தெலுங்கின் பிரபல நடிகை மதுசர்மா, புதுமுகம் தர்ஷா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். நிதிஷ்குமார், செஷாந்த், பாலா, சபி, காதல் தண்டபாணி, மயில்சாமி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

இறுதிக் கட்டப் பணியில் இருந்த இயக்குநர் யுவனிடம் பேசியபோது...

""பள்ளி வகுப்பறையில் சரியாகப் படிக்காமல் கடைசி பெஞ்சில் அமர்ந்திருக்கும் மாணவர்களை "மாப்பிள்ளை பெஞ்ச் பார்ட்டி' என நகைச்சுவையாகக் கூறுவது வழக்கம். சரியாகப் படிக்காததினால் இவர்களை முழு முட்டாள்கள் எனக் கருதி விட முடியாது. இவர்களிடமும் ஒரு திறமை இருக்கும். அப்படிப்பட்ட மாணவர்களின் எதிர்காலத்தைப் பற்றிய வித்தியாசமான கதைதான் "சிந்தனை செய்'. படத்தின் பாடல்கள் பெரிய அளவில் ஹிட் ஆகியுள்ளன. சாமானிய மாணவர்களுக்கும் ரசிகர்களுக்கும் இந்தப் படம் நிச்சயம் ஒரு புதிய அனுபவத்தைத் தரும்'' என்றார்.

இசை -தமன். பாடல்கள் -பா.விஜய், யுகபாரதி, யுவன். ஒளிப்பதிவு -ஸ்ரீ பவன் சேகர். படத்தொகுப்பு -கே.தணிகாசலம். தயாரிப்பு -அம்மா ராஜசேகர்

Anil seeks probe into RIL's 'huge scandal'

Questioning clearance by junior Oil Ministry officials to the near four-fold hike in costs to Rs 45,000 crore for gas fields by Mukesh Ambani-led RIL, Anil Ambani demanded a probe into the "huge scandal."

"I am deeply concerned that RIL's capital expenditure of nearly Rs 45,000 crore on KG-D6 fields as confirmed in Parliament by the Petroleum Minister and which is nearly 33 per cent of India's total defence budget was cleared by a management committee..." he said in an e-mailed interview.

"The committee comprised of one junior level official each from the Petroleum Ministry and Director General of Hydrocarbon and two representatives of the contractor (RIL)...talk about conflict of interest," he said, adding that any expenditure above Rs 150 crore by any arm of government goes to the Cabinet Committee of Economic Affairs for approval.

Given the incredibly high stakes involved, the Comptroller and Auditor General and Central Vigilance Commission should examine relevant facts and find out if capex was overstated, Anil said, pointing that budgeted expenditure of RIL for peak production of 40 mmscmd was only Rs 12,000 crore in 2004.

Anil alleged that Petroleum Ministry, particularly after the changes in 2006 (when Murli Deora took over as minister), was colluding with RIL in its quest to make "super-normal profits of Rs 50,000 crore" at the cost of power and fertiliser sectors.

ராஜீவ் காந்தி கொலை-5

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பிடிபட்டவர்களை அடைத்து வைக்க பூந்தமல்லி சப்_ஜெயில் பலத்த பாதுகாப்பு கொண்டதாக மாற்றி அமைக்கப்பட்டது. 14 அடி உயரம் கொண்ட சுற்றுச்சுவர் 18 அடி உயரத்துக்கு உயர்த்திக் கட்டப்பட்டது. மேலே கண்ணாடி துண்டுகள் பதிக்கப்பட்டன. கூடுதலாக 10 சிறை அறைகள் கட்டப்பட்டன. இங்கு நளினி, முருகன் உள்பட ராஜீவ் கொலையையொட்டி கைதானவர்கள் அடைக்கப்பட்டனர்.

சி.பி.ஐ. பிடித்து வைத்து விசாரித்து வந்த நளினியின் தங்கை கல்யாணி விடுவிக்கப்பட்டாள். ராஜீவ் கொலை வழக்கில் புதிதாக விஜயன் என்கிற பெருமாள் விஜயன் (வயது 26), பாஸ்கர் என்கிற வேலாயுதம் (55) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டார்கள்.

மாமனார் _மருமகனான இவர்கள் இலங்கையை சேர்ந்தவர்கள்தான். அகதிகளாக இந்தியா வந்தவர்கள். கொடுங்கைïரில் தங்கி இருந்தார்கள். இவர்களது வீட்டு சமையல் அறையில், தரைக்கு அடியில் மறைத்து வைத்திருந்த `வயர் லெஸ்' கருவியை புலனாய்வு போலீசார் கைப்பற்றினார்கள். இந்த வயர்லெஸ் கருவி மூலம் இலங்கையில் இருக்கும் விடுதலைப்புலிகளுடன் சிவராசன் பேசி இருக்கிறான். ராஜீவ்காந்தி கொலைக்கு முன்பும், கொலை நடந்த பிறகும் இங்கு சிவராசன் வந்து தங்கிச் சென்று இருக்கிறான் என்ற தகவல் கிடைத்தது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரிக்க தனிக்கோர்ட்டு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதன் நீதிபதியாக முதலாவது அடிஷனல் செசன்சு நீதிபதி எஸ்.எம்.சித்திக் நியமிக்கப்பட்டார். இந்த தனி செசன்சு கோர்ட்டு சென்னை கோர்ட்டு வளாகத்தில் அமைக்கப்பட்டது. ராஜீவ் காந்தி கொலையாளியான தனுவுக்கு அடைக்கலம் கொடுத்ததாக தஞ்சை மாவட்டம் வேதாரண்யம் பக்கமுள்ள கொடியங்காடு பகுதியைச் சேர்ந்த மிராசுதார் சண்முகம் (40) என்பவரை சி.பி.ஐ. போலீசார் கைது செய்து சென்னை கொண்டு வந்து விசாரணை நடத்தி வந்தனர். அவரது தோட்டத்தில் ஏராளமான வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது. இதனால் அவரை தனி ஹெலிகாப்டர் மூலம் வேதாரண்யம் அழைத்துச்சென்று சோதனை போட்டனர்.

அவரது தோட்டத்தில் பெட்டிபெட்டியாக பதுக்கி வைத்திருந்த வெடிகுண்டுகளை கைப்பற்றினார்கள். பிறகு மிராசுதார் சண்முகத்தை அங்குள்ள சுற்றுலா மாளிகையில் தங்க வைத்தார்கள்.

சுற்றுலா விடுதி அருகில் உள்ள மரத்தில் மிராசுதார் சண்முகம் மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கினார். மிராசுதாரை போலீசார் அடித்து கொன்று தொங்க விட்டுவிட்டதாக அவரது மனைவி பவானி ஜனாதிபதிக்கு தந்தி கொடுத்தார்.

பிறகு நடந்த பிரேத பரிசோதனையில் மிராசுதார் சண்முகம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக டாக்டர் அறிக்கை கொடுத்தார். விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் (எல்.டி.டி.இ.) பிரபாகரன் உள்பட 41 பேர் மீது தனிக்கோர்ட்டில் 20_5_92 அன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. "ஒற்றைக்கண்" சிவராசன் தனு, சுபா, கோடியக்கரை மிராசுதாரர் சண்முகம் உள்பட 12 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

எல்.டி.டி.இ. தலைவர் பிரபாகரன், பொட்டு அம்மான், அகிலா ஆகியோர் இலங்கையில் இருந்தனர். எனவே இவர்கள் 3 பேரும் "பிரகடனம் செய்யப்பட்ட குற்றவாளிகள்" என்று அறிவிக்கப்பட்டனர். கைது செய்யப்பட்டு ஜெயிலில் இருக்கும் நளினி, அவள் கணவன் முருகன் உள்பட 26 பேர் மீது மட்டும் வழக்கை விசாரிக்க தனிக்கோர்ட்டு முடிவு செய்தது.

குற்றம் சாட்டப்பட்ட 26 பேர் விவரம் வருமாறு:_ 1. நளினி (வயது 33) நர்சு பத்மாவின் மகள். 2. முருகன் (28) நளினியின் கணவன். விடுதலைப்புலி. 3. சின்னசாந்தன் (33) 4. சங்கர் (30) 5. விஜயானந்தன் (47) 6. சிவரூபன் என்கிற சுரேஷ்குமார் (26) 7. கனகசபாபதி (76) 8. ஆதிரை (23) கனகசபாபதியின் பேத்தி. 9. ராபர்ட் பயாஸ் (31) 10. ஜெயக்குமார் (30) 11. சாந்தி (30) ஜெயக்குமாரின் மனைவி 12. விஜயன் (32) 13. செல்வலட்சுமி (31) விஜயனின் மனைவி. 14. பாஸ்கரன் (62) விஜயனின் மாமனார். 15. சண்முக வடிவேலு (53)

16. ரவிச்சந்திரன் என்ற ரவி (30) தமிழர் மீட்புப்படைத் தளபதி. 17. சசீந்திரன் என்கிற மகேஷ் (27) 18. பேரறிவாளன் என்ற அறிவு (24) ஜோலார் பேட்டையைச் சேர்ந்த என்ஜினீயரிங் பட்டதாரி. 19. இரும்பொறை (35) திருச்சி. 20 பத்மா (56) நர்சு. சென்னை ராயப் பேட்டையைச் சேர்ந்தவர். 21. பாக்கியநாதன் (31) நர்சு பத்மாவின் மகன். அச்சக அதிபர். 22. சுபா சுந்தரம் (50) போட்டோ கிராபர்.

23. தனசேகரன் (55) லாரி அதிபர். 24. ரங்கன் (30) ஒற்றைக்கண் சிவராசனின் கார் டிரைவர். 25. விக்கி என்கிற விக்னேசுவரன் (33) 26. ரங்கநாத் (53) பெங்களூர் தொழில் அதிபர்.

26/11 attacks: Lakhvi, Shah 'believed to have confessed

Key Lashker-e-Toiba operatives Zakiur Rehman Lakhvi and Zarar Shah are "believed to have confessed" to their involvement in the Mumbai terror attacks but Pakistani authorities are yet to make it public, a leading daily here reported on Wednesday.

Pakistani investigators have found "substantial evidence" directly connecting LeT to the November 26, 2008 attacks and proving "beyond any reasonable doubt" that it planned and financed the terror strikes, the Dawn newspaper said.

An updated dossier on Pakistani investigation handed over to India on July 11 said the material recovered from LeT camps in Karachi and the coastal town of Thatta indicated that the terrorists were provided training and weapons by the outfit.

"The investigation has established beyond any reasonable doubt that the defunct LeT activists conspired, abetted, planned, financed and established communication network to carry out terror attacks in Mumbai," said the dossier.

The findings provided the basis for the trial which started last week of five arrested LeT operatives by an anti-terrorism court inside Rawalpindi's Adiala jail.

"Lakhvi and Zarar Shah are believed to have confessed to their involvement in the attacks. But Pakistani authorities have never confirmed that publicly," the Dawn said.

Pakistan has already charged Lakhvi, the mastermind of the attack, Zarar Shah and three other LeT men -- Hammad Amin Sadiq, Mazhar Iqbal alias Al Qama and Shahid Jamil Riaz.

"There are sufficient oral, direct documentary, circumstantial and scientific evidence which directly connect the accused with the commission of the offence," said the charge-sheet.

Lakhvi, Zarar Shah and Mazhar Iqbal have also been charged with planning, preparation and execution of the attacks and operational handling of the 10 terrorists.

Zarar Shah was in charge of communication while Iqbal (al Qama) was the main handler, the report said.

Investigators here said they had recovered handwritten diaries, training manuals, Indian maps and operational instructions from the LeT camps.

"The accused were running training camps for terrorists, providing sea and navigational training, conducting intelligence courses and directions for terrorist attack," the dossier said.

According to the new details, training sessions, codenamed 'Azizabad', were held in an LeT camp in Karachi from where the investigators seized militant literature, inflatable lifeboats, detailed maps of the Indian coastline, handwritten literature on navigational training and manual of an intelligence course.

Another training camp in Thatta was housed in five thatched rooms about two kilometres from a creek from where small boats sail to the sea. The terrorists also received training in this camp.


சூரிய கிரகணத்தின்போது மேற்கொண்ட ஆய்வு அறிக்கை

காரைக்காலில் சூரிய கிரகணத்தின்போது கல்லூரி பேராசிரியர்கள் மேற்கொண்ட அறிவியல் ஆய்வு அறிக்கை மாவட்ட ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

சூரிய கிரகணம் ஜூலை 22ஆம் தேதி காலை 5.20 முதல் 7.30 மணி வரை தெரியுமென அறிவிக்கப்பட்டதையொட்டி, காரைக்கால் அவ்வையார் அரசு மகளிர் கல்லூரி பேராசிரியர்கள் நவீன கதிர்வீச்சு கருவிகள் கொண்டு கிரகணத்தை பார்க்க ஏற்பாடு செய்திருந்தனர்.

கிரகணத்தின் மூலம் ஏற்படும் மாற்றங்கள் குறித்து இயற்பியல் துறை தலைவர் சந்தோஷ்குமார் தலைமையிலான பேராசிரியர்கள் குழு ஆய்வு நடத்தியது.

இந்த அறிக்கை மாவட்ட ஆட்சியர் ந. வசந்தகுமாரிடம் செவ்வாய்க்கிழமை சமர்ப்பிக்கப்பட்டது.

சூரிய கிரகணத்தின்போது கடல் நீரில் உள்ள ஹைட்ரஜனின் தன்மையை அறிந்து கொள்ளும் பொருட்டே இந்த ஆய்வு நடத்தப்பட்டதாக அறிக்கையை ஆட்சியரிடம் வழங்கிய பேராசிரியர் சந்தோஷ்குமார் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் லட்சுமி சீனிவாசன், ஆய்வில் பங்குகொண்ட அண்ணா அரசு கலைக் கல்லூரி பேராசிரியர் ரங்கையன், நாகபாலசுப்ரமணியன், ஆசிரியர் பால்ராஜ், அவ்வையார் அரசு மகளிர் கல்லூரி தாவரவியல் பேராசிரியர் சம்பந்தன், முனைவர் நாடிமுத்து உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்

ராஜீவ் காந்தி கொலை-4

சென்னை ஆழ்வார்திருநகரில் பதுங்கியிருந்த ஒற்றைக்கண் சிவராசனும், சுபாவும் இனியும் சென்னையில் இருந்தால் போலீசாரிடம் சிக்கி விடுவோம் என்று நினைத்தனர். அதனால் சென்னையிலிருந்து தப்பிச்செல்ல என்ன வழி என்று யோசித்தனர். சில விடுதலைப்புலிகளின் உதவியுடன் டேங்கர் லாரிக்குள் மறைந்து கொண்டு ரகசியமாக பெங்களூருக்குச் சென்றார்கள். 29_6_1991_ல் பெங்களூர் போய்ச்சேர்ந்தனர்.

அங்கு தலைமறைவாக இருந்த அவர்கள் 1 மாத காலம் போலீஸ் கண்ணில் படாமல் அங்கும் இங்கும் திரிந்தனர். பிறகு கோனேகுண்டே என்ற இடத்தில் ஒரு வாடகை வீட்டில் தங்கினர். இதுபோல் பல விடுதலைப்புலிகள் கர்நாடக மாநிலத்தில் பல்வேறு இடங்களில் தலைமறைவாக இருந்தனர். பெங்களூர் புறநகரில் உள்ள இந்திரா நகர் காலனியில் விடுதலைப்புலிகள் ஒரு ஆடம்பர பங்களாவில் தங்கி இருப்பதாக போலீசுக்குத் தகவல் கிடைத்தது. உடனே சென்னையில் இருந்து சி.பி.ஐ. குழுவினர் 15 பேர் பெங்களூருக்கு விரைந்தார்கள். அந்த பங்களாவை முற்றுகையிட்டார்கள். அந்த பங்களாவில் 3 அறைகள் இருந்தன.

அதை ஒரே நேரத்தில் உடைத்துக்கொண்டு அதிகாரிகள் உள்ளே புகுந்தனர். அங்கு விடுதலைப்புலிகள் சயனைடு தின்று மயங்கி கிடந்தனர். அதில் ஒருவன் சிறிது நேரத்தில் இறந்தான். அவனது பெயர் அரசன். இன்னொருவன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு 3 தினங்களில் இறந்து போனான். அவனது பெயர் குளத்தான் என்று தெரியவந்தது. அதே பகுதியில் இன்னொரு வீட்டில் பதுங்கி இருந்த மிரேஷ் (18) என்ற விடுதலைப்புலி போலீசாரிடம் சிக்கிக் கொண்டான். கர்நாடக மாநிலத்தில் மாண்டியா மாவட்டம் மாலவகள்ளி தாலுகா முத்தத் கிராமத்தில் ஒரு வீட்டில் விடுதலைப்புலிகள் தங்கி இருந்தனர். அந்த வீட்டை போலீசார் சுற்றி வளைத்தபோது 5 விடுதலைப்புலிகள் `சயனைடு' தின்று இறந்து கிடந்தனர்.

4 பேர் மயக்கம் அடைந்து கிடந்தார்கள். ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லும் வழியில் ஒருவன் இறந்தான். அதே தாலுகாவில் உள்ள பிரோட்டா என்ற ஊரிலும் ஒரு வீட்டில் விடுதலைப்புலிகள் பதுங்கி இருந்தனர். அங்கு போலீசார் சென்றனர். அதற்குள் வீட்டில் இருந்த 6 விடுதலைப்புலிகள் சயனைடு தின்று செத்தனர். 2 பேர் உயிருக்கு போராடிய நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். கர்நாடக மாநிலத்துக்குள் பல ஊர்களில் விடுதலைப்புலிகள் தங்கி இருப்பதும் பிடிக்கச் செல்லும்போது அவர்கள் தற்கொலை செய்வதும் சர்வசாதாரணமாக நடந்தது. எனவே சிவராசனும், சுபாவும் கர்நாடகத்தில்தான் இருக்க வேண்டும் என்று "சி.பி.ஐ" போலீசார் கருதினார்கள். எனவே அங்கு தங்களது வேட்டையை தொடர்ந்தார்கள்.

19_8_1991_ந்தேதி அன்று பெங்களூர் அருகே கோனே குண்டே என்ற இடத்தில் உள்ள காலனியில் ஒரு வீட்டில் சந்தேகப்படும் படியாக நபர்கள் தங்கி இருப்பதாக பால்கார பெண், போலீசுக்கு தகவல் கொடுத்தாள். உடனே அந்த வீட்டை போலீசார் கண்காணிக்கத் தொடங்கினார்கள். வீட்டில் தங்கியுள்ள விடுதலைப்புலிகளை உயிரோடு பிடிக்கவேண்டும் என்பதற்காக டெல்லியில் இருந்து கமாண்டோ படை வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். 20_ந்தேதி அந்த பகுதியில் 1,500_க்கும் மேற்பட்ட ஆயுதம் தாங்கிய போலீசார் குவிக்கப்பட்டார்கள். வீட்டைச்சுற்றி சுமார் 200 அடி தூரத்தில் போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர்.

`திடீர்' என்று வீட்டிற்குள் இருந்து துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. போலீசார் திருப்பி சுட்டனர். இரவு 7 மணிக்கு தொடங்கி சுமார் 1/2 மணி நேரம் துப்பாக்கிச் சண்டை நடந்தது. பிறகு வீட்டிற்குள் இருந்து எந்த சத்தமும் வரவில்லை. எனவே கமாண்டோ படை வீரர்கள் 8 பேர் வீட்டின் கூரை வழியாக வீட்டிற்குள் புகுந்தார்கள். அந்த வீடு ஒரே அறை மட்டுமே கொண்டிருந்தது. உள்ளே 7 பேர் இறந்து கிடந்தனர். இதில் 5 பேர் ஆண்கள். இருவர் பெண்கள். ஒரு ஆணின் தலையில் மட்டும் துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட காயம் இருந்தது. மற்ற 6 பேரும் "சயனைடு" விஷம் தின்று செத்துக்கிடந்தார்கள்.

பெண்களில் ஒருத்தி மரத்தினால் செய்யப்பட்ட செயற்கை காலை பொருத்தி இருந்தாள். உடனே சி.பி.ஐ. டைரக்டர் விஜயகரன், ஐ.ஜி. கார்த்திகேயன், பெங்களூர் போலீஸ் கமிஷனர் ஆர்.ராமலிங்கம் ஆகியோர் வீட்டிற்குள் சென்று பார்வையிட்டார்கள்.

தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இறந்து கிடந்தவன் ஒற்றைக்கண் சிவராசன் என்பதை கார்த்திகேயன் உறுதி செய்தார். பெண்களில் ஒருத்தி சுபா என்பதையும் கண்டுபிடித்தார்கள். சிவராசனும், சுபாவும் அருகருகே பிணமாக கிடந்தனர். சிவராசன் பேண்ட், கறுப்பு நிற பனியன் அணிந்திருந்தான். சிவராசன் சயனைடு அருந்தியதுடன் துப்பாக்கியாலும் சுட்டுக்கொண்டான்.

அவனது வலது கண்ணுக்கு மேல் நெற்றியில் குண்டு பாய்ந்திருந்தது. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்தபோது குண்டு துளைத்ததால் அவனது செயற்கை கண் பிதுங்கி கீழே விழுந்து கிடந்தது. சுபா வெள்ளை நிற குட்டைப் பாவாடையும், கறுப்பு நிறத்தில் முழுக்கை சட்டையும் அணிந்திருந்தாள். காதில் சிவப்பு நிற கம்மலும், காலில் வெள்ளிக்கொலுசும், மெட்டியும் போட்டிருந்தாள். பின்னர் 7 பேரின் பிணங்களும் பிரேத பரிசோதனைக்காக பெங்களூர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ராஜீவ்காந்தியைக் கொலை செய்து விட்டு 91 நாட்கள் போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்த சிவராசன், சுபா ஆகியோரின் வாழ்க்கை ராஜீவ் காந்தி பிறந்த தினமான ஆகஸ்டு 20_ந்தேதி தற்கொலையில் முடிவடைந்தது
Related Posts with Thumbnails