குழந்தைகளை வளர்க்க மைக்கேல் ஜாக்சன் தாய்க்கு கோர்ட்டு அனுமதி

மைக்கேல் ஜாக்சன் தன் 2 மனைவிகளிடம் இருந்து முறைப்படி விவாகரத்து பெற்று விட்டதால், அவரது 3 குழந்தைகளும் ஆதரவற்றவர்களாகி விட்டனர். மைக்கேல் ஜாக்சனின் தாய் காதரீன் ஜாக்சன் (வயது 79). அந்த 3 குழந்தைகளையும் தன் பொறுப்பில் வைத்துள்ளார். இதற்கு மைக்கேல் ஜாக்சனின் மனைவி டெப்பிரோ கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

3 குழந்தைகளையும் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும். குழந்தைகளை வளர்க்கும் உரிமை தாய்க்கே உண்டு என்று அவர் கூறினார். லாஸ்ஏஞ்சல்ஸ் கோர்ட்டில் இந்த வழக்கு நடந்து வருகிறது.

இந்த நிலையில் இருதரப்பு வக்கீல்களும் சந்தித்து இந்த பிரச்சினை குறித்து பேசி னார்கள். அப்போது காதரீன்-டெப்பிரோ இடையே சமரசம் ஏற்பட்டது. மைக்கேல் ஜாக்சனின் 3 குழந்தை களையும் காதரீன் வளர்க்க டெப்பிரோ சம்மதித்தார்.

விரும்பும் நாட்களில் குழந்தைகளை காட்ட வேண்டும் என்று டேப்பிரோ நிபந்தனை விதித்துள்ளார். குழந்தைகள் பராமரிப்பு விஷயத்தில் சமரசம் ஏற்பட்டதால், இது பற்றிய முடிவு திங்கட்கிழமை லாஸ்ஏஞ்சல்ஸ் கோர்ட்டில் அறிவிக்கப்படுகிறது

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails