சாம்சங்கின் ஆம்னியா!

மின்னணு பொருள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள சாம்சங் நிறுவனம் ஆம்னியா-2 ஜிடி (18000) என்ற புதிய ரக செல்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.

மிகச் சிறந்த மல்டி மீடியா வசதிகள், யூஸர் இண்டர்ஃபேஸ், அதிவேக இணைப்புத்திறன் உள்ளிட்டவை இதன் சிறப்பம்சமாகும்.

விண்டோஸ் 6.1 தளத்தில் செயல்படும் ஆம்னியா-2 ஸ்டைல், மல்டிமீடியா மற்றும் வர்த்தக செயல்பாடுகளை ஒருங்கே வழங்கும்.

புத்தம் புதிய உயர் செயல்பாட்டுத்திறன் கொண்ட முழு தொடுதிரை போனாகும். இதில் டிஜிட்டல் தரத்திலான புகைப்படங்களையும், வீடியோ பதிவுகளையும் எடுக்க முடியும். விலை ரூ. 28,990.

How to: Download and install themes in Windows 7

One of the new features introduced in Windows 7 is the use of themes to customize the system’s appearance in a very easy way. Themes enable you to personalize wallpaper, screensaver, window color and system sounds in just one click. Then, if you want, you can change small details inside the selected theme and create a new custom version of it.


Themes can be selected from the Personalization window, which you can open by right clicking anywhere on the desktop and selecting Personalize. Switching to a new theme is as easy as clicking the theme’s thumbnail. The theme will be immediately applied to your system, so you get the full preview before formally applying it. You can then click on any of the customizable elements at the bottom of the window (desktop background, window color, sounds and screensaver) and change them to suit your taste.


The best thing about themes in Windows 7 is that you’re not limited to the ones that come shipped with the operating system. You can download more from Microsoft by clicking the‘Get more themes online’ link in the Personalization window. Simply click the download button under the theme you want to use and download the .themepack file. Once it’s on your hard drive, double click it and it’ll be automatically applied – and added to the Personalization window under ‘My themes’.


Of course, Microsoft is not the only source of themes for Windows 7. A quick search on Google returns dozens of sites to download themes from and try new styles on your system, like Paul’s theme packs, the iThinkDiff collection or the themes in the IntoWindows blog. They’re as easy to install as the ones you download from Microsoft.




சமையல் குறிப்பு அப்லோட் செய்திட

எனக்கு யார் தருவது சமையல் குறிப்பு? நானே ஒரு நல்ல எக்ஸ்பர்ட் ஆக்கும் என்று எண்ணுபவரா நீங்கள். இதோ உங்களுக்கென ஓர் இணைய தளம் இயங்குகிறது.

இங்கு பலவிதமான உணவு தயாரிக்க சமையல் குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றைப் படித்துப் பார்த்து, ஏதேனும் கூடுதலாகச் சேர்த்தால் உணவின் ருசி கூடும் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா!

அப்படியானால் அந்த விபரங்களைத் தயார் செய்து இந்த தளத்தில் அப்லோட் செய்திடலாம். இந்த தளத்தின் பெயர் புட்டிஸ்ட்டா (Foodista). இதன் முகவரிhttp://www.foodista.com/ . "The Cooking Encyclo pedia Everyone Can Edit" என்றே இதன் முகப்பில் இந்த தளத்திற்கான விளக்கம் தரப்பட்டுள்ளது.

எனவே நம் உணவு முறைகளைப் பற்றிய குறிப்புகள், இதில் தரப்பட்டுள்ள உணவு முறைகளுக்கான குறிப்புகளில் மாற்றங்கள் ஆகியவற்றை நீங்கள் தாராளமாக இந்த தளத்திற்கு அனுப்பலாம்.

மேலும் நீங்கள் தயார் செய்திடும் உணவு இப்படித்தான் இருக்கும் என்று காட்ட அதனைப் போட்டோ எடுத்தும் அனுப்பலாம்

மைக்கேல் ஜாக்சன் படம் ஒரே நாளில் ரூ.100 கோடி வசூல்

மறைந்த பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் கடைசியாக நடித்த படம் “தி இஸ் இட்”. இப்படம் தற்போது உலகம் முழுவதும் வெளியிடப்பட்டுள்ளது.

இப்படத்தை கொலம்பியா பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது. உலகம் முழுவதும் ஒருநாளில் மட்டும் இப்படம் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளது.

அமெரிக்கா மற்றும் கனடாவில் ரூ.35 கோடியே 20 லட்சமும், இங்கிலாந்தில் ரூ.63 கோடியே 50 லட்சமும், பிரான்சில் ரூ.5 கோடியே 70 லட்சத்துக்கும் டிக்கெட்டுகள் விற்று சாதனை படைத்துள்ளது.

உலகம் முழுவதும் உள்ள மைக்கேல் ஜாக்சன் ரசிகர்கள் இந்த சாதனையை ஏற்படுத்தியுள்ளனர்.

விண்டோஸ் 7 நேரடி இறக்கம்

மைக்ரோஸொப்ட் நிறுவனம் தனி நபர் கணினிகளுக்கான தனது புதிய இயங்கு தளத்ததின் பீட்டா பதிப்பை (Beta Version) கடந்த வாரம் வெளியிட்டது.

விண்டோஸ் 7 (Seven) எனப் பெயரிடப்பட்டிருகும் இந்த இயங்கு தளம் இது வரை வெளி வந்த விண்டோஸ் பதிப்புக்கள் அனைத்தையும் விட மேம்பட்டதாக இருக்கும் என மைக்ரோஸொப்ட் மார் தட்டிக் கொள்கிறது.

பெரும் எதிர்பார்ப்புடன் வெளியிடப்பபட்ட விண்டோஸின் முன்னைய பதிப்பான விஸ்டா கணினி பயனர்களிடையே எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை.

மாறாக அது மைக்ரோஸொப்ட் நிறுவனம் இதுவரை பெற்றிருந்த நற்பெயருக்கும் களங்கம் விளைவித்தது, எனவே விஸ்டாவினால் இழந்த பெயரை சரிசெய்வதற்காக புதிய ஒரு இயங்கு தளத்தை விரைவிலேயே வெளியிட வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் மைக்ரோஸொப்ட் நிறுவனத்துக்கு ஏறபட்டது.

இழந்த பெயரை மீட்டுக்கொள்ளவும் விண்டோஸுக்குப் போட்டியாக வந்திருக்கும் லினக்ஸின் துரித வளர்ச்சிக்கு ஈடு கொடுக்குமாறும் மேலதிக வசதிகளுடனும் உருவாக்கப் பட்டுள்ளது விண்டோஸ் 7.




விண்டோஸ் 7 இறக்கம் செய்ய கீழே குறிபிட்டுள்ள சுட்டிகளை சொடுக்கவும்.

இந்திய மொழிகளில் பேஸ்புக்

சமுதாய இணைய வலை அமைப்பில் முதல் இடம் பெற்றிருக்கும் பேஸ்புக் இந்தியாவில் இன்னும் அதிகமான எண்ணிக்கையில் வாடிக்கையாளர்களைப் பெறும் வகையில் இந்திய மொழிகளில் தன்வலைத் தளத்தை உருவாக்கியுள்ளது.

முதல் கட்டமாக தமிழ், இந்தி, பஞ்சாபி, பெங்காலி, தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் பேஸ்புக் கிடைக்கிறது. வாடிக்கையாளர்கள் தமிழிலேயே தங்கள் அக்கவுண்ட்டை உருவாக்கி அப்டேட் செய்திடலாம்.

பேஸ்புக் வலைத்தளத்திற்குப் போட்டியாகச் செயல்பட்டு வரும் ஆர்குட் ஏற்கனவே தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் ஒலிக் குறிப்பின் அடிப்படையில் அந்த அந்த மொழிகளில் எழுதும் வசதியைத் தந்துள்ளது.

ஆனால் பேஸ் புக் இன்னும் அந்த வசதியைத் தரவில்லை. இருப்பினும் தற்போதைய வசதியின் அடிப்படையில் இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் வாடிக்கையாளர்களை பேஸ்புக் பெறுமா என்பதனைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Save / Save As வேறுபாடு

பல பயன்பாட்டு மென்பொருள்களில் ஒரு பைலை சேமிக்க வென சேவ் (Save) , சேவ் ஏஸ் (Save As) என இரு கட்டளைகள் இருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம்.

இரண்டு கட்டளைகளும் செய்வது ஒரே வேலைதான் எனினும் இரண்டுக்குமிடையில் சிறிய வேறு பாடும் இருக்கத் தான் செய்கிறது.

முதன் முதலாக ஒரு பைலை சேமிக்கும் போது சேவ் அல்லது சேவ் ஏஸ் எனும் இரண்டு கட்டளைகளில் எதனைத் தெரிவு செய்தாலும் ஒரே மாதிரியான (Save As Dialog Box) டயலொக் பொக்ஸே தோன்றும்.

அப்போது உங்கள் பைலுக்கு பொருத்தமான் ஒரு பெயரை வழங்கி நீங்கள் விரும்பும் இடத்தில் பைலை சேமித்துக் கொள்ளலாம்.

சேமிக்கப்பட்ட அந்த பைலில் மாற்றங்கள் செய்து மறுபடி அதே பெயரில் அதே இடத்தில் சேமிக்க வேண்டுமானால் பைல் மெனுவில் சேவ் க்ளிக் செய்யுங்கள்.

எனினும் இப்போது டயலொக் பொக்ஸ் எதுவும் தோன்றாது. அதேபோல் ஏற்கனவே சேமிக்கப்பட்ட ஒரு பைலை வேறு பெயரில் அல்லது வேறொரு இடத்தில் சேமிக்க வேண்டுமானால் பைல் மெனுவில் சேவ் ஏஸ் தெரிவுசெய்யுங்கள்

யாஹுவை ஜிமெயில் முந்தியது


இந்தியாவில் இமெயில் பயன்பாட்டில் யாஹூவை பின்னுக்குத் தள்ளி ஜிமெயில் முன்னுக்கு வந்துள்ளது. இதுவரை மிகவும் விசுவாசத்துடன் யாஹூ மெயிலைப் பயன்படுத்தி வந்த பலர் ஜிமெயிலுக்குத் தாவி உள்ளனர்.

வைஸி சென்ஸ்(ViziSense) என்ற ஆன்லைன் கண்காணிப்பு நிறுவனம் ஒன்று இந்த தகவலைத் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் இப்போது அதிகம் பயன் படுத்தப்படும் இமெயில் கிளையண்ட்டாக கூகுள் நிறுவனத்தின் ஜிமெயில் இடம் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது.

ஒரு கோடியே 80 லட்சம் பேர்களுக்கும் மேலாக ஜிமெயிலை இந்தியாவில் பயன்படுத்தி வருகின்றனர். சென்ற மாதம் வரை யாஹூ தான் முதல் இடத்தில் இருந்து வந்தது.

யாஹூ மெயிலின் நேயர்கள் எண்ணிக்கை இப்போது ஒரு கோடியே 68 லட்சமாகும். சென்ற ஆகஸ்ட் மாதம் முதல் இதன் வாடிக்கையாளர்கள் 8% குறையத் தொடங்கினர். அதே நேரத்தில் ஜிமெயில் பயனாளர்கள் எண்ணிக்கை தொடர்ந்து 3% அதிகரிக்கத் தொடங்கியது.

அக்டோபரின் முதல் வாரத்திலேயே ஜிமெயில் முதல் இடத்திற்கு வந்தது. அதே போல விண்டோஸ் லைவ் மெயில் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதன் வளர்ச்சி 8% ஆகும்.

ரீடிப் மெயில் 62 லட்சத்து 50 ஆயிரம் பேர்களுடன் இயங்கி மூன்றாவது இடத்தில் உள்ளது. ஆனாலும் உலக அளவில் யாஹூ மெயில் இடத்தை ஜிமெயில் பிடிக்க இன்னும் சில மாதங்களாகலாம். ஏனென்றால் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் லைவ் மெயில் இரண்டாவது இடத்தில் உள்ளது.



அமெரிக்காவில் ஜிமெயில் வளர்ச்சி தொடர்ந்து அதிகரித்து வருவதாக அங்குள்ள ஆய்வு நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது. எனவே யாஹூவும் மைக்ரோசாப்டின் விண்டோஸ் லைவ் மெயிலும் ஏதேனும் அதிரடியான மாற்றங்களையும் வசதிகளையும் கொண்டு வரவில்லை என்றால், நிச்சயம் உலக அளவில் ஜிமெயில் முதல் இடத்தைப் பிடிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றே கூறலாம்.


இதனால் தான் அக்டோபர் தொடக்கத்தில் இந்தியாவின் பிரபலமான ஆங்கில நாளிதழில் யாஹூ ஒரு முழுப் பக்க விளம்பரத்தினை க் கொடுத்தது. தன்னிடம் விசுவாசமாக உள்ள மெயில் பயனாளர்களைத் தன் பக்கம் தக்க வைத்துக் கொள்ள யாஹு எடுத்த முயற்சியே இது என்று இந்தத் துறையில் உள்ளவர்கள் அனைவரும் எண்ணுகின்றனர்.

Infosys techie arrested for raising bomb scare

A 25-year old engineer from Infosys, who thought that he would miss his Bangalore-bound GoAir flight because his train was running late, landed behind bars on Sunday for causing a bomb scare at the Delhi airport.

Abhishek Gupta was coming from Lucknow in Gorakhnath Express and was expected to reach Delhi railway station by 6 a.m. and catch a Bangalore-bound GoAir flight from the capital's domestic airport around 8.45 a.m. Gupta's train got delayed and he reached airport around 9.30 a.m.

"He called up the call centre of GoAir informing them that he was late because of train delays and asked the staff to reschedule his journey and put him on the second flight to Bangalore. But his request was refused by the GoAir staff," said a police officer.

Gupta who desperately wanted to reach Bangalore, again called up at their call centre telling the staff that there was some suspicious object on the plane. He thought that by doing this, the flight would get delayed for some time, and in the mean time, he would reach the airport and board the same flight," added the police officer.

After the call, the GoAir flight G8201 carrying 164 passengers was grounded and passengers asked to disembark. The bomb and dog disposal squads were pressed into service but nothing was found on the aircraft.

At 9:30 am, Gupta reached the airport and asked for the boarding pass. "It aroused some suspicion. Gupta was then cornered and questioned. He then confessed to causing the panic," said the police officer.

A case has been registered against him under appropriate sections of the Indian penal code and he has been arrested.

டவுண்லோட் ஏன் நடுவில் முறிகிறது?

1. இன்டர்நெட் இணைப்பு: டவுண்லோட் செய் வது இடையே அறுந்து போவதற்கான பொதுவான ஒரு காரணம் இன்டர்நெட் இணைப்பு துண்டிக்கப்படுவதுதான். டவுண் லோட் ஆகிக் கொண்டிருக்கையில் இன்டர் நெட் இணைப்பு துண்டிக்கப்பட்டால் டவுண்லோட் முழுமையாக தோல் வியடையும். ஏன் இப்படி ஆனால் என்ன என்றெல்லாம் மாற்று வழி எல்லாம் இதற்குக் கிடையாது. டவுண்லோடிங் செயல் பாட்டிற்கு அத்தியாவசிய அடிப்படைத் தேவை இன்டர்நெட் கனெக்ஷன் தான். அது இல்லாத பட்சத்தில் நிச்சயம் டவுண் லோட் செயல்பாடு நின்றுதான் போகும். எனவே டவுண்லோட் அறுந்து போகும் நிகழ்வில் முதலில் நீங்கள் சோதனை செய்ய வேண்டியது இன்டர்நெட் தொடர்பு உள்ளதா என்பதுதான். அது இல்லை என்றால் மீண்டும் இணைப்பை ஏற்படுத்தி டவுண்லோட் செய்திடலாம்.


2. சர்வர் இணைப்பு: இரண்டாவது முக்கிய காரணம் டவுண்லோட் செய்திடும் கம்ப்யூட்டருக்கும் பைலைக் கொண்டிருக்கும் சர்வருக்கும் இணைப்பு துண்டிக் கப்படுவதுதான். இந்த இணைப்பு துண்டிக்கப்பட்டாலும் டவுண்லோட் செய்வது நின்று போகும். இதற்குக் காரணம் உங்கள் கம்ப்யூட்டரோ அல்லது இன்டர்நெட் இணைப்போ அல்ல. இந்த நிகழ்வுக்குக் காரணம் சர்வர் கம்ப்யூட்டரில் உள்ள பிரச்சினைதான். அல்லது இடையே உள்ள இணைப்பில் உள்ள பிரச்சினை. இதனை நம் பக்கத்தில் எதுவும் செய்ய முடியாது. மீண்டும் அந்த சர்வர் அல்லது இணைப்பு சரியாகும் போது மட்டுமே டவுண்லோட் செயலைத் தொடங்க முடியும்.


3. டைம் அவுட் கனெக்ஷன் (Timed out conection) நீங்கள் டவுண்லோட் செய் திடும் பைல் இறங்க அதிக நேரம் எடுத்துக் கொண்டால் பைலை வழங்கும் சர்வர் நேரம் ஆகிவிட்டது என்று இணைப்பைத் துண்டித்துக் கொள்ளும். அதாவது டவுண்லோட் பாதியில் நின்று விடும். இது சர்வருக்கு ஏற்படும் ஓவர்லோடினால் கூட இருக்கலாம்; அல்லது இன்டர்நெட் இணைப்பின் வேகம் மிகவும் மெதுவாக இருக்கலாம். இதற்கும் கவலைப்பட வேண்டியது இல்லை. இது தானாகச் சரி செய்யப்படும்போது மீண்டும் இணைப்பை ஏற்படுத்தி டவுண்லோட் செய்திடலாம்.

மேலே சொன்ன நிகழ்வுகளுக்கான தீர்வு கள் என்ன? அதிலேயே குறிப்பிட்டுள்ளபடி மீண்டும் இணைப்பு ஏற்படுத்தி டவுண்லோட் செய்திடும் பணியை மேற்கொள்ள வேண்டிய து தான். பெரும்பாலான நிகழ்வுகளில் அந்த நேரம் பெரிய அளவிலான பைல்கள் டவுண்லோட் செய்திட உகந்ததாக இருக்காது. இன்டர்நெட் டிராபிக் பெரும் அளவில் இருக்கும்போது டவுண்லோட் சுமுகமாக இருக்காது. எனவே இன்டர்நெட் டிராபிக் குறைவாக இருக்கையில் டவுண்லோட் செய்திட முயற்சிக்கலாம். மேலும் பிரபலாமான பைல்களையும் அப் போதுதான் வெளியான முக்கிய பைலையும் பலர் ஒரே நேரத்தில் டவுண்லோட் செய்திட முயற்சி செய்வார்கள். அப்படிப்பட்ட பைலை நீங்கள் டவுண்லோட் செய்திட விரும்பினால் அதிகம் டவுண்லோட் முயற்சிகள் மேற் கொள்ளப் படாத நேரத்தில் டவுண்லோட் செய்திடலாம்.


இன்னொரு தீர்வு டவுண்லோட் செய்திட வேறு ஒரு சர்வரை நாடுவதுதான். சில முக்கிய பைல்களை உலகின் பல இடங்களில் உள்ள சர்வர்களில் வைத்திருப்பார்கள். அந்த பைல்களை டவுண்லோட் செய்திட அந்த தளங் களுக்குச் செல்கையில் வெவ்வேறான சர்வர் களுக்கு லிங்க் கொடுத்திருப்பார்கள். அல்லது உங் கள் பிரியமான சர்ச் இஞ்சின் மூலம் இந்த சர் வர்களின் முகவரிகளைப் பெற்று இயங்கலாம்.


அடுத்த தீர்வு டவுண்லோட் மேனே ஜர்களைப் பயன்படுத்துவதுதான். இப்போது இணையத்தில் இத்தகைய டவுண்லோட் மேனேஜர்கள் நிறைய இலவசமாகக் கிடைக் கின்றன. இவற்றைப் பயன்படுத்தி டவுண் லோட் செய்தால், டவுண்லோட் செய்கையில் இணைப்பு நின்று போனால் மீண்டும் இணைப்பு கிடைக் கையில் அந்த பைல் எது வரை டவுண்லோட் செய்யப்பட்டுள்ளது என்று பார்த்து மீண்டும் விட்ட இடத்தில் தொடங் கலாம்.


நம்மிடமே சில நேரங்களில் குறை இருக் கலாம். நீங்கள் இன்டர்நெட் இணைப்பிற்குப் பயன்படுத்துவது டயல் அப் தொடர்பாக இருந்து இந்த டவுண்லோட் அறுந்து போகும் பிரச்சினை அடிக்கடி ஏற்பட்டால் உடனே பிராட்பேண்ட் தொடர்பினைப் பெறவும். மெதுவாக இயங்கும் டயல்அப் இன்டர்நெட் எப்போதும் டவுண்லோட் விஷயத்தில் பிரச்சினையைக் கொடுக்கும்.


மேலே குறிப்பிட்டவை எல்லாம் சில பரிந்துரைகள் தான். நீங்கள் தான் உங்களுடைய இன்டர்நெட் அனுபவத்தின் அடிப்படையில், உங்கள் ஊரில், உங்கள் இல்லத்தில் உள்ள இணைப்பு எப்படி என்ன வேகத்தில் இருக்கிறது என்று பார்த்து அதற்கேற்ற வகையில் முடிவெடுக்கலாம். வாரத்திற்கு ஓரிரு முறை பெரிய அளவில் டவுண்லோட் செய்பவராக இருந்து, அடிக்கடி பாதிப்பு ஏற்பட்டால் நிச்சயம் தீர்வு ஒன்றுக்கு நீங்கள் முயல வேண்டும்

இமெயில் தவறுகளைத் தவிர்க்க ஒரு செட்டிங்

தினந்தோறும் இமெயில்களை அனுப்பும் நாம் அடிக்கடி இந்த தவறினைச் செய்திருக்கிறோம். ஒருவருக்கு எழுதிய கடிதத்தினைத் தவறாக மற்றொரு நபருக்கு அனுப்பியிருக்கிறோம். கோபமாக எழுதிய கடிதத்தினைச் சரியான நபருக்கு அனுப்பி விட்டுப் பின் மனம் வருந்தியிருக்கிறோம்.

பத்திரிக்கைகளுக்குக் கட்டுரை எழுதும் என் நண்பர் ஒருவர் அனுப்ப வேண்டிய பத்திரிக்கைக்குப் பதிலாக வேறு ஒரு பத்திரிக்கைக்கு அனுப்பி விட்டார். வெகுநாட்களுக்குப் பின்னரே தவறு உணரப்பட்டுச் சரி செய்யப்பட்டது.

இதற்குக் காரணம் இமெயில் மெசேஜ் எழுதுவது மிக எளிது. பேப்பரோ, பேனாவோ தேவையில்லை. சிஸ்டத்தில் அமைத்துவிடலாம். மேலும் அனுப்ப முகவரி எழுத வேண்டியதில்லை. கவர் தேவையில்லை.

ஸ்டாம்ப் தேவையில்லை. போஸ்ட் பாக்ஸ் இருக்குமிடம் அல்லது கூரியர் அலுவலகம் செல்ல வேண்டியதில்லை. ஏன் எல்லாருக்கும் தெரிந்த இந்த தகவல்களை அடுக்குகிறேன் என்றால் இந்தக் காலத்தில் நாம் மனதை மாற்றிக் கொண்டால் அந்தக் கடிதத்தை எந்நேரமும் நிறுத்திவிடலாம்.

ஆனால் இமெயில் கிளையண்ட் புரோகிராம்கள் எல்லாம் அப்படிப்பட்ட கால அவகாசத்தினைத் தராது. சென்ட் பட்டனை அழுத்தியசில நொடிகளில் உங்கள் கடிதம் சம்பந்தப்பட்டவரின் மெயில் பாக்ஸை அடைந்துவிடும்.


ஏன், இந்த இமெயில் புரோகிராம்களும் சற்றுக் காக்கவைத்து பின் அனுப்பினால் என்ன? என்ற எண்ணம் தோன்றுகிறதா? தாராளமாகச் செய்திடலாம். அதற்கான செட்டிங்ஸ் மட்டும் செட் செய்திட வேண்டும். அவுட்லுக் எக்ஸ்பிரஸ்ஸில் இதனை மேற்கொள்ளும் வழியினைப் பார்க்கலாம்.

1. Tools மெனுவில் Options செலக்ட் செய்திடவும்.

2. அடுத்து Mail Set up டேப்பினைத் தட்டித் திறக்கவும்.

3. Send / Receive ஆப்ஷனில் அதன் மீது கிளிக் செய்திடவும்.

4. பின் All Accounts செக்ஷனில் Include this Group in Send / Receive என்பதில் செக் செய்து இருப்பதனை எடுத்துவிடவும்.

5. பின் Close அழுத்தி OK அழுத்தி வெளியே வரவும்.

அனைத்து அக்கவுண்ட்களையும் சென்ட்/ரிசீவ் ஆப்ஷனிலிருந்து எடுத்துவிட்டிருப்பதால் ஒவ்வொரு முறை நீங்கள் மெயில் அனுப்பும்போதும் பெற முயற்சிக்கையிலும் சென்ட் / ரிசீவ் பட்டனை அழுத்த வேண்டும்.


இவ்வாறு நீங்கள் எழுதும் ஒவ்வொரு கடிதமும் உங்கள் முயற்சியில் தான் செல்லும். இது ஜஸ்ட் லைக் தட் சென்ட் பட்டனை அழுத்தும் வேலை இல்லை. சிறிது நேரம் ஆகும் என்பதால் நாம் முகவரியை மீண்டும் சரியா எனப் பார்க்கலாம்.


கோபத்தில் எழுதிய கடிதத்தினை மீண்டும் சரி செய்து நாகரிகமானதாக மாற்றலாம். கடிதத்தில் உள்ள டெக்ஸ்ட்டில் உள்ள சிறிய தவறுகளைத் திருத்தலாம். அழகு படுத்தலாம். மொத்தத்தில் அனைவரிடமும் நல்ல பெயர் எடுக்கலாம்

Insert key யின் பயன்பாடு

விசைப் பலகையின் வலது புற்ம் Insert எனும் ஒரு விசை இருப்பதை நீங்கள் அறிவீர்கள். சில கீபோர்டுகளில் இது INS எனப் பெயரிடப் பட்டிருக்கும். இதன் பய்ன்பாடு என்ன என்பதை அறிவீர்களா?

டைப் செய்த எழுத்துக்களை அழிப்பதற்கு Delete Key பயன்படுத்துவதைப் போல் சில (Word Processor) வேர்ட் ப்ரொஸசர்களில் எழுத்துக்களை இடையில் செருகு வதற்கு இந்த Insert கீயை அழுத்த வேண்டியிருக்கும்..

அல்லா விடின் இடையில் டைப் செய்யும் எழுத்துக்கள் முன்னர் டைப் செய்த எழுத்துக்களை (Overwrite) அழித்து விடும்.. எம். எஸ். வர்டில் இந்த விசை எம்.எஸ்.வர்டைத் திறந்ததுமே Insert நிலையிலேயே இயல்பாக் (default) இருக்கும்.

Insert கீயை ஒரு முறை அழுத்தியதும் அது Overwrite நிலைக்கு மாறி விடும். அப்போது இடையில் எழுத்துக்களை டைப் செய்யும்போது முன்னர் டைப் செய்த எழுத்துக்களை அழித்து விடுவதைக் காணலாம்.

எம்.எஸ்.வர்ட் தற்போது Insert நிலையிலா அல்லது Overwrite நிலையிலா இருகிறது என்பதை Status Bar இல் காண்பிக்கும். ஸ்டேட்டஸ் பாரில் OVR என இருப்பின் அது Overwrite நிலையில் இருப்பதாகக் கொள்ளுங்கள்.

அத்தோடு Insert கீயை எம்.எஸ்.வர்டில் (Clip Board) க்ளிப் போர்டில் உள்ளதைப் (Paste) பேஸ்ட் செய்வதற்கான ஒரு குறுக்கு விசையாகவும் பயன்படுத்தலாம்.

அதற்கு Tools மெனுவில் Edit டேபைத் தெரிவு செய்யுங்கள். அங்கு Use the ‘Ins’ key for paste என்பதைத் தெரிவு செய்து ஓகே சொலுங்கள்.

எதையும் தாங்கும் நோக்கியா மொபைல்

நோக்கியா நிறுவனம் 3720 என்ற எண்ணுடன் தன் கிளாசிக் சிரீஸ் வரிசையில் மொபைல் போன் ஒன்றை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த போன் கீழே போட்டு எடுத்தாலும் அந்த அதிர்ச்சியைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக நோக்கியா அறிவித்துள்ளது. அத்துடன் தண்ணீர் மற்றும் தூசியினைத் தாங்கும் வகையிலும் இது உள்ளது.

கடற்கரை, தூசு கிளம்பும் கட்டட பணி நடக்கும் இடங்கள், அடிக்கடி மழை பொழியும் இடங்கள் ஆகியவற்றில் வசிக்கும் மற்றும் பணியாற்றுபவர்களுக்கு இந்த போன் ஏற்றதாக இருக்கும். நீண்ட நாள் உழைக்கக் கூடிய மொபைலை வாங்க விரும்புவோர் இதனை நாடலாம்.

இது ஒரு ஹேண்டி பார் டைப் மொபைல். சிம்பியன் எஸ் 40 சிஸ்டம் இயங்குகிறது. உள்ளிருக்கும் சர்க்யூட் போர்டும் பேட்டரி கம்பார்ட்மெண்ட்டும் சீல் செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளது. பேட்டரியை மாற்ற வேண்டும் என்றாலும் ஸ்க்ரூ கழட்டித்தான் மாற்ற வேண்டும்.

2,2 அங்குல வண்ணத்திரை, எல்.இ.டி. பிளாஷ் லைட் இணைந்த 2 எம்பி திறன் கொண்ட கேமரா, மைக்ரோ எஸ்டி கார்ட் சப்போர்ட், நோக்கியா மேப்ஸ், ஜி.பி.ஆர்.எஸ். / எட்ஜ் தொழில் நுட்பம், A2DP இணைந்த புளுடூத் 2.1, ஆர்.டி.எஸ். கொண்ட ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ மற்றும் ஹேண்ட்ஸ் பிரீ சாக்கெட் எனப் பல்வேறு வசதிகள் இந்த போனில் தரப்படுகின்றன.

ரூ.8,520 என்ற விலையில்இது கிடைக்கலாம். சாம்சங் பி 1200 இதற்கு இணையாக மார்க்கட்டில் போட்டியிடலாம்.

பரந்து விரிந்தது டாட்டா டொகோமோ

அறிமுகமான சில மாதத்தில் 5 லட்சத்திற்கும் மேலான எண்ணிக்கையில் வாடிக்கையாளர்களைத் தமிழ்நாட்டில் பெற்றுள்ளது டாட்டா டொகோமோ.

சி.டி.எம்.ஏ. வகை இணைப்பினைத் தந்து வந்த டாட்டா டெலி சர்வீசஸ் ஜப்பான் நாட்டு நிறுவனத்துடன் இணைந்து ஜி.எஸ்.எம். வகை மொபைல் சேவையினை வழங்க அண்மையில் அனுமதி பெற்றது.

தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் ஒரிஸ்ஸாவில் 19 நகரங்களில் இந்த சேவையினை வழங்க அனுமதி பெற்றுள்ளது.

விரைவில் தாங்கள் வழங்க இருக்கும் கூடுதல் மதிப்பு சேவைகள் மொபைல் போன் பயன்பாட்டில் புதிய திருப்பத்தினை உண்டாக்கும் என இந்நிறுவனத் தலைமை நிர்வாக அதிகாரி நாக வேலமுரி தெரிவித்தார்.

இலவச வாய்ஸ் மெயில், குறிப்பிட்ட நேரத்தில் எஸ்.எம்.எஸ். சேவை, இலவச மிஸ்டு கால் அலர்ட், கால்–மி ட்யூன் போன்ற பல புதுவித சேவைகள் வழங்க இருப்பதாகத் தெரிவித்தார்.

Related Posts with Thumbnails