Cookies என்றால் என்ன?


பல வினாக்கள் கொண்ட ஒரு இணையதளத்தைப் பார்வையிடுகிறீர்கள். முதல் வினா முதல் பக்கத்திலும் இரண்டாவது மூன்றாவது வினாக்கள் அடுத்தடுத்த பக்கங்களிலுமுள்ளதாக வைத்துக் கொள்வோம்.

இரண்டாவது பக்கதிற்குச் செல்லும்போது முதல் பக்கத்தில் இருந்த கேள்விக்கான விடையைத் தெரிவு செய்தவரே இரண்டாம் பக்கத்தை தற்போது பார்வையிடுகிறார் என்பதை அந்த இணைய தளம் சேமிக்கப்பட்டுள்ள வெப் செர்வர் அறிந்து கொள்கிறது.

இவ்வாறு பல இணைய பக்கங்களிலுள்ள கேள்விகளுக்கு பதிலளித்த பின்னர் கடைசியாக அனைத்து விடைகளுக்குமான புள்ளிகளை மொத்தமாக சொல்லி விடுகிறது அந்த இணைய தளம். இது எவ்வாறு சாத்தியம்?

மேற் சொன்ன செயற்பாட்டின் போது வெப் சேர்வருக்கு உதவுகிறது நமது கணினியில் சேமிக்கப்பட்டிருக்கும் ஒரு சின்னஞ் சிறிய டெக்ஸ்ட் பைல். இதனையே குக்கீ எனப்படுகிறது.

சில இணைய தளங்களைப் பார்வையிடும்போது அந்த வெப் சேர்வர் ஒரு குக்கீ பைலை உமது கணினியின் ஹாட் டிஸ்கில் சேமித்து விடுகிறது. இதன் மூலம் அந்த குக்கீ பைலுக்குரிய நபர் நீங்கள் தான் என்பதை சேர்வர் நினைவில் கொள்ளும்.

இங்கு குக்கீ பைல் ஒரு அடையாள அட்டை போல் செயல்படுகிறது. மீண்டும் ஒவ்வொரு முறையும் ஒரு குறிப்பிட்ட தளத்தைப் பார்வையிடும்போது உங்கள் வெப் பிரவுசர் அந்த குக்கீயை சேர்வருக்கு அனுப்பி விடுகிறது.

இதன் மூலம் வெப் செர்வர் அந்த இணைய தளத்தில் நுளைந்திருப்பது முன்னர் வந்து போகும் நபர்தான் என்பதை உறுதிப் படுத்திக் கொள்வதோடு அந்த இணைய தளத்தில் எந்த ஒரு பக்கத்தைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தாலும் உங்களை சேர்வர் இனங காணும்

முன்னர் பார்வையிட்ட ஒரு இணைய தளத்தை மறுபடியும் பார்வையிடும்போது குக்கீஸ் நமக்கு உதவுகின்றன. உதாரணமாக ஒரு பயனர் பெயரை குக்கீ பைலாக நமது கணினியில் சேமித்தவுடன் அந்த பயனருக்குரிய பாஸ்வர்ட், இமெயில் முகவரி, தற்போதைய தேர்வுகள் போன்ற வேறு விவரங்களை சேர்வரில் உள்ள தரவுத் தளத்தில் பதியப்பட்டு விடும்..

அந்த குக்கீயில் பதியப்பட்ட பயனர் பெயரைக் கொண்டு அவரின் பாஸ்வர்டை மறுபடியும் டைப் செய்யாமலேயே அவர் பற்றிய விவரங்கள அறிந்து கொள்கிறது, இதன் மூலம் ஒரு குறிப்பிட்ட இணைய தளத்திற்குள் ஒருவரின் செயற்பாட்டை அறிந்து கொள்ளவும் நேரத்தை சேமிக்கவும் முடியுமாயுள்ளது.

அவ்வாறே இணையம் மூலம் பொருட்களைக் கொள்வனவு செய்யும் போதும் (online shopping) அந்த தளங்கள் உங்களைப் பற்றிய விவரங்களை குக்கீஸில் போட்டு விடுகிறது. இதன் மூலம் அந்த தளங்களை மறுபடியும் பார்வையிடும்போது உங்கள் பெயர் விவரங்களை மறுபடியும் வழங்க வேண்டிய அவசியம் ஏற்படாது.

குக்கீஸ் இனையத்தில் உங்கள் செயற்பாட்டை அவதானிக்கவே உருவாக்கப்படுகின்றன.. ஒரு குக்கீயை உருவாக்கும்போது அவ்விணைய தளத்தின் பெயரும் அந்த குக்கீயில் பதிவாகிவிடும். . அதன் மூலம் அந்த குக்கீயைத் திறந்து பார்க்க அவ்விணைய தளத்திற்கு மட்டுமே அனுமதியளிக்கப்படும்.

ஏனைய் தளங்களால் அந்த குக்கீயைப் பார்வையிட முடியாது.

சில இணைய தளங்கள் வியாபார நோக்கம் கொண்ட நிறுவனங்களுடன் கூட்டுச் சேர்ந்ந்து அவர்களின் குக்கீகளை நமது கணினியில் சேமித்து விடும். இவை மூன்றாம் தரப்பு குக்கீ (Third party cookies) எனப்படும்.

இதன் மூலம் அவ்வியாபார நோககம் கொண்ட நிறுவனங்கள் தங்கள் குக்கீகளை பயன்படுத்துவோரின் இணைய் செயற்பாட்டை அவதானிப்பதோடு அவர்களை இணையத்தில் பின் தொடர்ந்து கொண்டேயிருக்கும். .

அதாவது நீங்கள் எவ்வாறான இணைய பயனர், உங்கள் விருப்பு என்ன, எவ்வகையான பொருட்களை இணையத்தின் வ்ழியே கொள்வனவு செய்கிறீர்கள போன்ற விவரங்களைப் பெற்றுக் கொள்ளும்.


எடுத்துக் காட்டாக ஒரு இணைய் தளத்திலிருந்து ஒரு டிஜிட்டல் கேமராவை வாங்கி விடுகிறீர்கள். அப்போது குக்கீயைப் பகிர்ந்து கொள்ளும் வேறு நிறுவன இணைய தளங்களும் கேமரா போன்ற வேறு இலத்திரனியல் சாதனங்களை உங்களுக்கு விற்பனை செய்ய முயலும்.

ஒரு இணைய தளத்தில் இமெயில் முகவரியை வழங்கும் போது அதன் சக நிறுவனங்களும் அதனை அறிந்து கொண்டு நீங்கள் கேட்காமலேயே உங்களுக்கு வேண்டாத குப்பை அஞ்சல்களையெல்லாம் உங்களுக்கு அனுப்பி விடும். உங்களைப் பற்றி இவர்கள எப்படி அறிந்து கொண்டார்கள் என்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள்.

குக்கீஸ் என்பவை மிகச் சிறிய டெக்ஸ்ட் பைல்களே. இவை .txt எனும் பைல் நீட்டிப்பைக் கொண்டிருக்கும். அது ஹாட் டிஸ்கில் சேமிக்கப்பட் டிருக்கும். விண்டோஸில் குக்கீ பைல்கள் c - சீ ட்ரைவில் Documents and Settings போல்டரில் உள்ள பயனர் கணக்கிற்குரிய Cookies போல்டரில் சேமிக்கப்பட்டிருக்கும்.

எனினும் இவற்றால் கணினிக்கு எந்த வித பாதிப்பம் ஏற்படாது. இவை வெறும் டெக்ஸ்ட் பைல்களேயன்றி .இதன் மூலம் வைரஸை கணினியில் பரவச் செய்திட முடியாது. நீங்கள் ஒரு இணைய தளத்தில் வழங்கிய தகவல்களை அந்த இணைய தளம் மூன்றாம் தரப்பினருடன் பகிர்ந்து கொள்ளாதவரை குக்கீஸால் எந்த வித பாதிப்பும் இல்லை.

இணைய தளங்கள் உங்களைப் பற்றிய விவரங்களை நினைவில் வைத்திருக்க குக்கீஸ் உதவுவதால், உங்கள் கணினியை உபயோகிக்கும் வேறொரு நபரால் நீங்கள் ஏற்கனவே பார்வையிட்ட இணைய தளங்களைப் பர்வையிட வழி கிடைத்து விடுகிறது.

குக்கீஸ் மேல் உங்களுக்கு நம்பிக்கையில்லையானால் அதனை அனுமதிக்காது விடலாம் அல்லது குக்கீஸ் எனும் வசதியை வெப் பிரவுசரிலிருந்து முடக்கி விடலாம். எனினும் இவ்வாறு செய்வதால் வேறு சில வசதிகளைப் பெற முடியாது போய்விடும்.

சிலர் தங்கள் கணினியில் பதிவாகியிருக்கும் குக்கீஸை அவ்வவப்போது அழித்து விடுவதும் உண்டு. இவ்வாறு அழிப்பது சில வேளை சிக்கலை ஏற்படுத்தவும் கூடும். ஏனெனில் சில தளங்கள் குக்கீஸ் இல்லாது தமது தளத்தை அணுக விடாது..

அனேகமான வெப் பிரவுசர்களில் குக்கீஸைக் கட்டுப் படுத்துவத்ற்கன வசதியுள்ளது., இதன் மூலம் குறிப்பிட்ட சில பாதுகாப்பான இணைய தளங்களிலிருந்து மட்டும் குக்கீஸை அனுமதிக்கலாம்.



இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் குக்கீகளை எவ்வாறு தடுப்பது?

இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் Tools மெனுவில் Internet Options தெரிவு செய்யுங்கள். அங்கு Privacy டேபின் கீழ் ஸ்லைடர் கொண்டு குக்கீ அளவினைக் கட்டுப்படுத்தலாம்.

Block All Cookies, High, Medium High, Medium, Low, Accept All cookies என ஆறு தெரிவுகள் இருக்கும். (Block All Cookies) தெரிவு செய்வதால் அனைத்து குக்கீகளையும் தடுக்க முடியும்.. இத்தகைய செயலமைப்பால், எந்தவொரு இணைய தளமும் கணிணிக்குள், குக்கீகளை உட்புகுத்தி சேமிக்க இயலாது.

அனைத்து குக்கீகளையும் தடுத்தால், மிகுதியான இணைய தளங்களை பார்வையிடுவதை தடுக்க நேரிடும்.. அடுத்த இரண்டு நிலைப்பாடுகளான, உயர்வு (High), மிதமான உயர்வு (Medium High), ஆகியவை மிக்க பொருத்தமானவையாகும். மேலும் ஒரு குறிப்பிட்ட தளத்திற்கான குக்கீயை மட்டும் தடுக்கவும் இயலும்.



பழைய குக்கீகளை நீக்கல்

முன்பு ஹாட்டிஸ்கில் சேமிக்கப்பட்ட குக்கீகளை அகற்றும் வரை அவற்றைப் படிக்க இயலும். அனைத்து குக்கீகளையும் அகற்றுவதற்கு, இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் Tools மெனுவில், Internet Options தேர்ந்தெடுக்கவும்.

General டேபின் கீழ் Temporary Internet Files பகுதியில், Delete Cookies என்பதை தேர்ந்தெடுத்து ஓகே சொல்லி விடுங்கள்

அதிவேக வயர்லெஸ் இன்டர்நெட்

மொபைல் நிறுவன உலகில் புதுவரவாக வந்துள்ள எம்.டி.எஸ் தொலைதொடர்பு நிறுவனம் 3.1 எம்பிபிஎஸ் திறனுடைய அதிவேக வயர்லெஸ் இண்டர்நெட் இணைப்பை அறிமுகப்படுத்துகிறது.

இதுகுறித்து நிறுவன உயர் அதிகாரி அளி்த்துள்ள பேட்டியில், தங்கள் நிறுவனம் வழங்க உள்ள இந்த சேவை, மற்ற நிறுவனங்கள் வழங்கும் வயர்லெஸ் ‌சேவையை விட 20 மடங்கு விரைவானதும், பிக்ஸ்ட் லைன் இன்டர்நெட் இணைப்பை விட 10 மடங்கு விரைவானது என்று அவர் தெரிவித்தார்.

இந்த சேவை 3ஜி மொபைல் சேவைக்கு மிகவம் பயனுள்ளதாக அமையும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

பிஎஸ்என்எல், டாடா இண்டிகாம் மற்றும் ரிலையன்ஸ் தொலைதொடர்பு நிறுவனங்கள் ஏற்கனவே 3ஜி மொபைல் போன்களை அறிமுகம் செய்துள்ளது குறிப்பி‌டத்தக்கது.

கணினியின் கோப்புகளை நிரந்தரமாக அழிக்க

நமது கணினியில் directory அல்லது கோப்புகள் போன்றவை தேவையில்லை என நினைத்தால், அவற்றை அழிக்கிறோம். அழிக்கப்பட்டவை recycle bin ல் (குப்பைத்தொட்டி) சேகரமாகும். அங்கேயும் சென்று empty recycle bin எனக் கொடுத்துக் காலி செய்கிறோம்.

Shift + Delete சேர்த்து அழித்தால் recycle bin க்குச் செல்லாமல் நேரடியான அழிவு.

இந்தச் செயல்கள் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். விண்டோஸ் பயனாளர்களுக்குப் பரிச்சயமான செயல்களே இவை.

ஆனால் ஒரு திறமை வாய்ந்த தொழில்நுட்ப வல்லுனர் ஒரு பார்வை பார்த்தால் அவரிடம் உள்ள data recovery பயன்பாட்டின் மூலம் இப்படி அழிக்கப்பட்ட கோப்புகளை / directoryகளை மீட்டுவிடுவார்.

அழிக்கப்பட்ட இடத்தில் வேறு ஒரு தகவல் பதிவாகாமல் இருக்கும் வரையில் அதை மீண்டும் தருவித்துவிடலாம். இதனால் ஏதேனும் ரகசியத் தகவல்களை அழித்துவிட்டோம் என யாரும் மார்தட்டிக் கூறிவிட இயலாது.

அழிக்கப்பட்ட தடயத்தைக் கணினியின் hard disk மறக்கவே மறக்காது - எதுவரையில்? - புதிய தகவல்கள் ஏற்கனவே அழிக்கப்பட்ட அதே இடத்தில் மீண்டும் அமரும் வரையில்.

கோப்புகளை மீட்கச் செய்ய வழியே இல்லாமல் - ஒட்டுமொத்தமாக நிரந்தரமாக (அதி தீவிரமான நிரந்தரமாக) அழித்துக் காலி செய்வது எப்படி?

இதற்கு SDelete (Secure Delete)பயன்பாடு உதவுகிறது. Microsoft நிறுவனத்தின் இலவசப் பயன்பாடு இது.

தரவிறக்கம் (Download) செய்யவும், மேலதிக விபரங்களுக்கும் கீழே உள்ள சுட்டியை அழுத்தவும்.

Coming soon to the small screen: TV in 3D

You've seen movies in 3D. Now, how about your favorite TV series?

Panasonic Corp has unveiled a 50 inch high-definition 3D plasma TV and glasses that make images appear like you can touch them.

At a demonstration at Panasonic's head office in Osaka, F1 race cars roared right by viewers and gymnasts barrelled down a runway, hitting vaulting horse and flipping toward the audience.

"We've introduced concrete plans to deliver the first 3D into people's homes. It won't disappoint," said Yoshiiku Miyata, Panasonic managing executive officer in charge of audio-visual products.

He declined to comment on an exact release date or price tag, stating that the company hopes the new TVs will hit shelves sometime in 2010.

The technology works by tricking the brain into seeing 3D as high-speed shutters in the glasses work in sync with the TV to deliver a double layered image at twice the speed of normal TV.

When the TV is showing the left image, the shutter closes the right eye so people can see only the left image," explained Keisuke Suetsugi, manager in charge of high quality AV development.

"And the next moment, when the TV is showing the right image, the shutter glass is covering the left."

The company hopes the smaller, more living room friendly 50 inch model will become a popular choice for home theatres than a 103 inch big brother that debuted last October.

The new model will go on display to the public at the CEATEC Japan tech show Oct 6-10.

Panasonic announced in August it will team up with Twentieth Century Fox and Lightstorm Entertainment in the making of Oscar-winning director James Cameron's new 3D film "Avatar," set to open in theatres worldwide this December.

Chief rival electronics maker Sony Corp announced earlier this month it also plans to launch 3D TVs by 2010.

IP Address என்றால் என்ன?

ஒரு கணினி வலையமைப்பில் அல்லது இணையத்தில் இணைத்திருக்கும் ஒவ்வொரு கணினியும் ஒரு இலக்கத்தைக் கொண்டிருக்கும். அந்த இலக்கத்தை வைத்தே ஒவ்வொரு கணினியும் இனங் காணப்படுகின்றன இதனையே ( IP Address ) ஐபி முகவரி எனப்படுகிறது. இங்கு IP என்பது Internet protocol எனபதைக் குறிக்கிறது.

அந்த இலக்கம் ஒரு வலையமைப்பில் அந்த குறிப்பிட்ட ஒரு கணினியை மட்டுமே குறித்து நிற்கும். இன்னொரு கணினிக்கு அதே இலக்கம் வழங்கப் படமாட்டது.. இதனை ஆங்கிலத்தில்; uniqueness எனப்படுகிறது.

இணையத்தில் இணையும் ஒவ்வொரு முறையும் எமது கணினிக்கு இந்த ஐபி முகவரியை இணைய சேவை வழங்கும் நிறுவனம் வழங்குகிறது.. இது ஒரு தற்காலிகமான ஐபி முகவரியே. அடுத்த முறை இணையத்தில் இணையும் போது வேறொரு ஐபி முகவரியே நமக்குக் கிடைக்கும்,

இதனை டைனமிக் ஐபி முகவரி (Dynamic) எனப்படும். அதேவேளை இணையத்தில் நிரந்தரமாக இணைந்துள்ள சேர்வர் கணினிகள் ஒரு நிலையான (Static) ஐபி முகவரியைக் கொண்டிருக்கும்.

ஒரு ஐபி முகவரி 216.27.61.137 எனும் வடிவத்தில் இருக்கும். இது நான்கு பகுதிகளைக் கொண்டிருக்கும். ஒரு புள்ளி கொண்டு இந்த நான்கு பகுதிகளும் பிரிக்கப்படிருக்கும். ஒவ்வொரு பகுதியும் 0 முதல் 255 வரையிலான ஒரு இலக்கமாக இருக்கும்.

ஐபி முகவரிகள் நமது வசதிக்காக தசம் எண்களினாலேயே குறிக்கப்படுவது வழக்கம். எனினும் கணினி இந்த இலக்கங்களை பைனரி வடிவத்திலேயே புரிந்து கொள்கிறது, மேலுள்ள ஐபி முகவரி 11011000.00011011.00111101.10001001 எனும் பைனரி வடிவைப் பெறும். ஐபி முகவரியிலுள்ளா இந்த நான்கு பிரிவுகளையும் ஒரு ஒக்டட் (Octets) எனப்படும்.

பைனரி எண் வடிவில் ஒவ்வொரு இலக்கமும் 8 இடங்களைக் கொண்டிருப்பதால் இவ்வாறு அழைக்கப்படுகின்றன. இவ்வாறு ஒவ்வொரு எட்டு இலக்கங்களினதும் கூட்டுத் தொகையாக 32 எனும் இலக்கம் கிடைக்கிறது. இதனாலேயே ஐபி முகவரிகள் 32 பிட் எண் எனக் கருதப்படுகின்றன.

இந்த ஒவ்வொரு எட்டு இலக்கமும் 0 அல்லது 1 எனும் இரு வேறு நிலைகளைக் கொண்டிருக்க முடியுமாதலால் எட்டு இலக்கங்கள் கொண்ட ஒவ்வொரு ஒக்டட் கொண்டும் 28 = 256 வெவ்வேறான சேர்மானங்களை உருவாக்கலாம். எனவே ஒவ்வொரு ஒக்டட்டும் 0 முதல் 255 வரையிலான இலக்கங்களைக் கொண்டிருக்க முடியும்.

இவ்வாறு நான்கு ஒக்டட் சேரும்போது 232 அல்லது 4,294,967,296 வெவ்வேறான் சேர்மானங்களை அல்லது இலக்கங்களைக் உருவாக்கலாம். அதாவாது இந்த முறையினை உபயோகித்து உலகிலுள்ள 4.3 பில்லியன் கணினிகளுக்கு வெவ்வேறான ஐபி முகவரிகளை வழங்கி விடலாம்..

NASA picks up new target for collecting water on moon

After the discovery of water on the Moon, scientists have picked a new target for the planned October 9 crash of a NASA spacecraft into a crater near the Moon’s south pole, in the hopes of gathering water ice.

Earlier, the Lunar Crater Remote Observation and Sensing Satellite (LCROSS) was going to target Cabeus A, a crater half as wide that sits further from the South Pole.

Now, according to a report in Nature News, LCROSS will now plough into Cabeus, a 100-kilometre-wide crater, in the hopes of kicking up some ice along with the rock and dust of the lunar soil.

Cabeus A presented favourable viewing angles for the many telescopes on Earth that will be trained on the impact site.

But, instruments aboard the Lunar Reconnaissance Orbiter, launched with LCROSS on June 18, have been offering up startling evidence: not only that water could be locked in a deep freeze within permanently shadowed polar craters, but also that there are significant differences between the craters.

In particular, a neutron-counting instrument has shown a significant excess of hydrogen a possible indicator of ice within Cabeus.

“The Cabeus region seems to be one of the places that could be the wettest, so we’d like to go there,” said Jennifer Heldmann, the LCROSS observation campaign coordinator at NASA’s Ames Research Center in Moffett Field, California.

Cabeus is deeper than Cabeus A, so the impact plume will have to rise higher to be seen from Earth.

But, according to Heldmann, this drawback is mitigated by a deep cleft in the rim wall of Cabeus, which will make viewing lower parts of the plume not as difficult as it could be.

The LCROSS team told astronomers of the new target on September 25.

Nancy Chanover, an astronomer at New Mexico State University in Las Cruces, said that the adjustment shouldn’t be too difficult.

“It’s not a big burden,” said Chanover, who is leading an effort to deduce the composition of the plume through an analysis of its ballistics.

Twenty professional observatories, including the Hubble Space Telescope, will be watching the event, and hundreds of amateur astronomers are expected to add their data to the mix.

But LCROSS itself, which has two components, will have the closest view.

ஸ்பாம் (SPAM) என்றால் என்ன?

உங்கள் இமெயில் ‏கணக்கிற்கு முன் பின் அறிமுகமில்லாதவர்களி டமிருந்து தினமும் உங்களுக்கு வேண்டாத ‏மெயில்களெல்லாம் வந்து குவிந்து உங்கள் மெயில் ‏‎பொக்ஸை நிரப்புவதைப் பார்த்திருப்பீர்கள்.

நீங்கள் கேட்காமலேயே உங்களிடம் பொருட்கள் அல்லது சேவைகளை வழங்குவதற்கு வர்த்தக நோக்கில் வரும் இந்த வேண்டாத ‏மெயி‏ல்களையே ஸ்பாம் (spam) எனப்படுகிறது. வேண்டாத ‏ இந்தக் குப்பை மெயில் அனுப்புவோரை ஸ்பாமர் (spamer) எ‎ன்பர்.

‏‏இந்த ஸ்பாம் எமக்கு நேர விரயத்தை ஏற்படுத்துவதோடு சில வேளைக ளில் வேண்டாத பிரச்சினைகளிலும் சிக்க வைத்து விடுகிறது.

வர்த்தக நோக்கில் வரும் ‏ ‏ இந்த ஸ்பாம் மெயில்கள்,
• எமக்கு அவசியமேயில்லாத பொருட்கள் மற்றும் சேவைகள்
• நம்ப முடியாத விலைக் கழிவுட பொருட்கள்
• ‏இழந்த இளமைபோ மீட்டுக் கொள்ள மருந்து மாத்திரைகள்
• பல்கலைக் கழகம் செல்லாமலேயே பட்டப் படிப்புச் சா‎‎‎ன்றிதழ்கள்
• மலிவு விலையில் கணினி மெ‎‎‎‎ன்பொருள்கள்
• இணையம் வழி சூதாட்டம்
• குறுகிய காலத்தில் உங்களை குபேரனாக மாற்றும் திட்டம்
• மற்றும் ‎ சட்ட விரோத செயல்களுக்கு உதவுதல் போன்‎‎ற
தலைப்புகளை (subject) கொண்டிருக்கும். ‏ ‏இந்த தலைப்பைக் கொண்டே ‏ ‏இவை ஸ்பாம் அஞ்சல் எ‎ன்பதை அடையாளம் கண்டு கொள்ளலாம்.

சில வேளை ‏ந்த ஸ்பாம் மெயில்கள் உங்களுக்கு வழமையாக வரும் ஒரு தனிப்பட்ட மெயில் போ‎‎‎ன்ற தோற்றத்துடன் அல்லது தலைப்புட‎ன் வந்தும் உங்களைத் திசை திருப்பக் கூடும்.

ஸ்பாம் உண்மையில் எமக்குப் பிரச்சினைதானா?

கணினி வைரஸ் போல் ஸ்பாம் அஞ்சல்கள் உங்கள் கனினியி‎ன்; செயற்பாட்டையோ அல்லது டேட்டாவையோ பாதிப்பதில்லை. எனினும் உங்கள் வியாபார நடவடிக்கைகளைப் பாதிப்பதோடு நேர விரயத்தையும் பண விரயத்தையும் கூட உண்டாக்குகிறது.

நீங்கள் தினமும் நூற்றுக் கணக்கான ‏,மெயில்களை வாடிக்கையாளர் களிடமிருந்து பெருகிறீர்கள் என வைத்துக் கொள்வோம். ‏இவற்றுள் எவை ஸ்பாம் மெயில் என்பதைக் கண்டு பிடித்து அழிப்பதில் உங்களது அல்லது உங்கள் அலுவலக ஊழியரது நேரம் வீணாக விரயமாக்கப் படுகிறது. (மிக அரிதாக ‏ மி‎ன்னஞ்சல் பெறுபவர்கள் வே‎ண்டுமானால் ஸ்பாம்களைப் பார்த்து சந்தோசப்பட்டுக் கொள்ளலாம்.)

சில வேளை எது ஸ்பாம் எனக் கண்டறிய முடியாமல் உங்களுக்கு வந்த ஒரு முக்கிய ‏மெயிலையும் கூட தவறுதலாக நீங்கள் அழித்து விட வாய்ப்புண்டு.

எமக்கு முன்பின் அறியாத ஒரு நபர் எமது கம்பியூட்டரை தனது கட்டுப் பாட்டி‎ன் கீழ் கொண்டு வருவதோடு எமது கணினியிலிருந்தே, ஸ்பாம் அ‎ஞ்சல்களை வேறு நபர்களுக்கு அனுப்பிவிடுவார்கள். ‏ இதனால் யரோ ஒருவர் செய்யும் தவறுக்கு நாமே பொறுப்பேற்க வேண்டியிருக்கும்.

ஏ‎ன் ஸ்பாம் அஞ்சல்கள் அனுப்புகிறார்கள்?

‏ஸ்பாம் ஒரு வகை விளம்பர உத்தி எனக் கூடக் கூறலாம். மிகக் மிகக் குறைந்த செலவில் ஆ‏யிரக்கணக்கான மெயில்களை ‏ ஒரே தடவையில் அனுப்பி விடுகிறார்கள் ஸபாமர்கள். ‏இவர்கள் அனுப்பும் ‏மெயில்கள் கிடைக்கப் பெறும் பத்தாயிரம் பேரில் ஒரே ஒருவர் மட்டும் ஒரு பொருளை ‏இவர்களிடமிருந்து கொள்வனவு செய்து விட்டால் அல்லது சேவையைப் பெற்று விட்டால் போதும். அதன் மூலம் அந்த ஸ்பாமர் ,இலாபமடைந்து விடுகிறார்.

ஸ்பாம் அஞ்சலைத் தவிர்ப்பது எப்படி?

1. ஸ்பாம் எதிர்ப்பு அல்லது ஸ்பாம் வடிகட்டும் (spam filter) மெ‎‎‎‎‎ன்பொருளை நிறுவிக் கொள்ளுங்கள். ‏இதன் மூலம் ஸ்பாம் அஞ்சல்களை ஓரளவுக்குக் குறைத்து விடலாம். அத்துட‎ன் ஸ்பாம் பில்டரில் எவை எவை ஸ்பாம் என நாமே மு‎ன் கூட்டியே காட்டி விட்டால் மீ‎ண்டும் மீ‎ண்டும் அதே ஸ்பாம் வருவதைத் தடுக்கலாம்.

2. உங்களுக்கு வரும் ,மெயில் அனுப்பியவர் யார் எனத் தெரியாத பட்சத்தில் அதனை அழித்து விடுங்கள். சில வேளை அந்த ‏ஸ்பாம் மெயிலுடன் வைரசும் சேர்ந்திருக்கக் கூடும். அதனைத் திறந்து பார்க்க உங்கள் கணினி வைரஸ் தாக்கத்திற்குள்ளாகலாம்.

3. ஸ்பாம் அஞ்சலுக்கு ஒரு போதும் பதில் அளிக்கவோ அல்லது அதனோடு வரும் லிங்கில் க்ளிக் செய்யவோ வேண்டாம். அவ்வாறு பதிலளிப்பது சரியான ஒரு முகவரிக்கே நாம் மெயில் அனுப்பியுள்ளோம் எd;பதை ஸ்பாமருக்கு உணர்த்தி விடும்.

4. ஸ்பாம் ‏அஞ்சலில் வரும் விளம்பரங்களைப் பார்த்து பொருட்களையோ சேவையையோ பெற்று விடாதீர்கள். ‏இது மேலும் மேலும் ஸ்பாம் அஞ்சலைப் பெற வழி வகுப்பதோடு மாத்திரமி‎d;றி உமது ‏‏ஈ-மெயில் முகவரி ஏனைய ஸ்பாமர்களி‎ன் கையிலும் சேர வாய்ப்புள்ளது.

5. சில ‏ இணைய தளங்களில் படிவங்களை நிரப்பும்போது “மேலதிக விவரங்களைப் பெற” ஒரு check box ஐ தெரிவு செய்யவோ அல்லது நீக்கவோ வேண்டியிருக்கும். அதனைத் தெரிவு செய்யாமல் தவிர்ப்பது நல்லது.

6. இமெயில் அனுப்பும் ப்ரோக்ரம்களில் (Mail Client) உங்களது ‏மெயிலைத் திறந்து பார்க்காமலேயே அதன்‎‎‎ உள்ளடக்கத்தைக் காட்டும் (preview) வசதியுள்ளது. ‏ இவ்வாறு preview ல் பார்க்கும் போதே ஸ்பாமர்கள் தா‎ங்கள் அனுப்பிய ஸ்பாம் உரியவரைச் செ‎‎‎ன்றடைந்து விட்டதை உறுதி செய்து கொள்வார்கள். அவ்வாறு Preview ல் காட்ட வைக்காமல் அதன் தலைப்பை மட்டுமே பார்த்து நம்பகமான ‏மெயிலை மட்டும் திறவுங்கள்.

7. ஒரே ‏மெயிலைப் பல பேருக்கு அனுப்பும் போது Bcc (Blind Carbon Copy) எனும் , இ‏டத்தில் முகவரிகளை டைப் செய்யுங்கள். இந்த Bcc பகுதியில் டைப் செய்யும் ‏மெயில் முகவரிகள் நீங்கள் யார் யாருக்கு‎ ‏ இந்த இமெயில் அனுப்பியுள்ளீர்கள் எ‎ன்பதை மறைத்து விடும். மாறாக To பகுதியில் டைப் செய்தால் நீங்கள் டைப் செய்யும் முகவரிகள் அனைத்தும் ஸ்பாமர்களை அடையும்.

8. உங்கள் ‏மி‎ன்னஞ்சல் முகவரிகளை‎ நம்பிக்கையானவர்களிடம்‎ மட் டுமே பகிர்ந்து கொள்ளுங்கள்.

9. இணைய தளங்கள் மற்றும் நியூஸ் க்ரூப் போன்றவற்றைப் பார்வையிடும் போதும் ‏‏‏‏ இணைய அரட்டையில் ஈடுபடும் போதும் ‏இமெயில் முகவரிகளை வழங்க நேரிடும் போது மி‎ன்னஞ்சல் முகவரிகளில் பய‎ன்படுத்தப்படும் “ @ “ எனும் குறியீட்டுக்குப் பதிலாக AT என டைப் செய்யுங்கள். ‏இந்த “ @ “ குறியீட்டைக் கொண்டே ஸ்பாமர்கள் ‏ பயன்படுத்தும் ப்ரோக்ரம்கள் இது ஒரு மின்னஞ்சல் முகவரியென கண்டறிந்து கொள்ளும்.

10. எப்போதும் ஒரே‏ ‏இமெயில் முகவரியை மட்டும் பய‎ன் படுத்தாமால் ஒ‎ன்றுக்கு மேற்பட்ட முகவரிகளை பயன்ப‎டுத்துங்கள். உதாரணமாக அலுவலக தேவைக்கென ஒ‎ரு ‏‏இமெயில் முகவரி, தனிப்பட்ட தேவைக் கென ஒன்று மற்றும்‏,இணைய தளங்களில் வரும் படிவங்களை நிரப்பும் தேவைக்கென வேறொ‎‎‎‎‎ன்றும் என வெவ்வேறாக வைத்துக் கொள்ளுங் கள். ஸ்பாமர்களிடமிருந்து ஓரளவுக்குத் தப்பிக் கொள்ளலாம்.

MS-Office 2007 பயனபடுத்துபவர்களுக்கு...

MS-Office 2007 பதிப்பில் உருவாக்கிய ஒரு பைலை அதன் முன்னைய பதிப்புகளில் திறக்க முற்பட்டு முடியாமல் போன அனுபவம் பலருக்கு இருக்கலாம்.

முன்னைய ஓபிஸ் பதிப்புகளில் விட MS-Ofice 2007 இல் வித்தியாசமான பைல் நீட்டிப்புகள் (File Extension) பயன்படுத்தப்படுவதே அதற்குக் காரணமாகும்.

முன்னைய பதிப்புகளில் பைல் நீட்டிப்பாக Word, Excel, மற்றும் PowerPoint மென்பொருள்களில் முறையே .doc, .xls, .ppt ஆகிய பைல் நீட்டிப்புகளே பயன்படுத்தப் படுகின்றன.

ஆனால் Ofice 2007 இல.docx, xlsx, .pptx ஆகிய நீட்டிப்புகள் Word, Excel, PowerPoint இல் பயன்படுத்தப் படுகின்றன. இந்தப் புதிய பைல் நீட்டிப்புகள் முன்னைய பதிப்புகளோடு ஒத்திசைவதில்லை.

அதனாலேயே Office 2002 மற்றும் Office 2003 பதிப்புகளில் இந்த docx, xlsx மற்றும் .pptx பைல் நீட்டிபுகளைக் கொண்ட பைல்களைத் திறக்க முடிவதில்லை.

எனினும் முன்னைய பதிப்புகளில் பயன் படுத்தபடும் நீட்டிப்புகளோடு பைல்களைச் சேமிக்கக் கூடிய வ்சதி Office 2007 இல் தரப்படுள்ளது. நீங்கள் அடிக்கடி பழைய பதிப்புகளில் உள்ள பைல் நீட்டிப்புகளையே பயன் படுத்துகிறீர்கள் அல்லது Office 2007 நிறுவப்பட்டிராத கணிகளில் உங்கள் பைல்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டியிருந்தால் முன்னைய பதிப்புகளில் பயன் படுத்தப்படும் நீட்டிப்புகளோடே சேமிக்க வெண்டி வரும்.

Office 2007 இல் பைலைச் சேமிக்கும் போது இயல்பு நிலையில் பழைய நீட்டிப்புக்களுடனேயே சேமிக்குமாறு செய்து விட்டால இந்தப் பிரச்சினை எழாது.

Word 2007 இல் பைல் ஒன்றைச் சேமிக்கும் போது .doc எனும் நீட்டிப்பை இயல்பு நிலைக்கு மாற்றப் பின் வரும் வழி முறையைக் கையாளுங்க்ள்.

முதலில் MS- Word 2007 ஐத் திறந்து கொள்ளுங்கள். அடுத்து File மெனுவின் கீழ் Word Options தெரிவு செய்யுங்கள். திறக்கும் விண்டோவின் இடது புறம் Save தெரிவு செய்யுங்கள்.

அடுத்து வீண்டோவின் வலப்புறம் Customize how documents are saved என்பதைத் தெரிவு செய்யுங்கள். அங்கு Save File in this format எனுமிடத்திலுள்ள ட்ரொப் டவுன் லிஸ்டிலிருந்து Word 97-2003 Document (*doc) என்பதைத் தெரிவு செய்து ஓகே சொல்லுங்கள்.

இப்போது வர்டில் உருவாக்கும் அனைத்து பைல்களும் மேற்சொன்ன போமட்டிலேயே சேமிக்கப்படும்.

இரண்டு கணினிகளை இணைப்பது எப்படி?

தற்போது நாம் முன்னொருபோதும் இல்லாதவாறு ஒன்றோடொன்று பிண்ணிப் பிணைந்த ஓர் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எமது அன்றாட வாழ்வில் ஓர் அங்கமாக கணினிகள் மாறி விட்டதைத் தொடந்து மக்களுக்கியேயான தொடர்பாடல் முறைகளும் மாறியிருப்பதைக் காண் கிறோம்..

இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட கணினிகளை ஒன்றோடொன்று இணைக்கப் பட்டிருப்பின் அதனை ஒரு கணினி வலையமைப்பு (Computer Network) எனப்படும். கணினிகளை ஒன்றோடொன்று இணைப்பதிலும் பல்வேறு முறைகள் பயன் பாட்டிலுள்ளன. வலையமைப்பின் அளவைப் பொருத்து இந்த ஒவ்வொரு முறையும் அதற்கேயுரிய சாதக பாதகங்களையும் கொண்டுள்ளன.

எந்த வகையிலான கணினி வலையமைப்பை உருவாக்கும் போதும் சில அடிப்படை விடயங்களைக் கருத்தில் கொள்ள் வேண்டியுள்ளது, உதாரணமாக் வலையமைப்பு உருவாக்கப் போவது கம்பியூடா (wired) அல்லது கம்பியில்லாமலா (wireless) என்பது. அதேபோன்று ஒரு வலையமைப்பில் முகிய பங்காற்றுவது ப்ரொட்டகோல் (Protocol) எனப்படும் தொடர்பாடல் விதி முறைகளாகும். இரு வேறு பட்ட கணினிகள் தொடர்பாடும் போது இணைப்பு மொழியாக் இந்த ப்ரொட்ட்கோல் தொழிற்படுகிறது. தற்போது கணினி வலையமைப்பில் TCP/IP எனும் தொடர்பாடல் விதிமுறையே பயன் பாட்டிலுள்ள்து.. இந்த விதி முறையே உலகலாவிய கணினி வலையமைப்பான இணையத்திலும் பயன் படுத்தப்படுகிறது.

பைல் மற்றும் வளங்களைப் பாரிமாறிக் கொள்ளும் வசதி, மின்னஞ்சல், கணினி வழி உரையாடல், பேஸ் புக் போன்ற சோஷியல் நெட் வொர்க் (Social Networking) சேவைகள் போன்றன் இன்றைய கணினிகளால் இணைந்து விட்ட உலகின் வியக்கத் தக்க பயன்பாடுகளாக்ப் பரபரப்பாகப் பேச்ப்படுகிறது. உலகம் முழுதுமுள்ள கணினிகளின் வலையமைப்பே இதனைச் சாத்தியமாக்கியது.
இனி விடயத்திற்கு வருவோம். வீட்டிலோ அலுவலகத்திலோ கணினிகளை ஓர் அறையின் மூலையில் வெளியுலக் தொடர்பேதுமில்லால் (Stand alone) தனியாக வைத்துப் பாவிக்கும் காலம் எப்போதோ மலையேறி விட்டது இருப்பது இரண்டே இரண்டு கணினிகளாயினும் அவற்றை ஒன்றோடொன்று இணைத்துப் பயன் படுத்துவதில் பல அனுகூலங்கள் உள்ளன. இரண்டு கணினிகளை இணைத்து ஒரு சிறிய கணினி வலயமைப்பை உருவாக்க ஒன்றுக்கு மேற்பட்ட வழி முறைகளும் உள்ளன. அவற்றுள் அதிக செலவில்லாமல் இணைக்கக் கூடியது க்ரொஸ் ஒவர் (cross-over) கேபல் கொண்டு இணைப்பதாகும். அதன் மூலம் இரண்டு கணினிகளுக்கிடையே பைல்களைப் பரிமாறிக் கொள்ளவும் இணைய இணைப்பு மற்றும் ப்ரிண்டர்களை பகிர்ந்து கொள்ளவும் முடியும்..இணைய இணைப்பைப் பகிர்ந்து கொள்வதாயின் ஒரு கணினியில் இரண்டு நெட்வர்க் கார்டுகளை (Network Interface Card) பொருத்த வேண்டி யிருக்கும். ஒரு கார்டை ப்ரோட்பேண்ட் (Broadband) இணைப்புக்கான ரூட்டரிலும் (Router) மற்றொரு கார்ட் அடுத்த கணினியை இணைக்கவும் பயன் படுத்தப்படும்.
ப்ரோட்பேண்ட் இணைய இணைப்பைப் ப்கிர வேண்டிய அவசியமில்லை அல்லது நீங்கள் பயன் படுத்துவது டயல் அப் (Dial up) இணைப்பு எனின் ஒரு கணீனியில் இரண்டு நெட்வர்க் கார்டுகள் தேவைப் படாது.. இரண்டு கணினிகளை இணைப்பது பைல்களைப் பரிமாற மட்டுமே எனின் இரண்டு கணினிக்ளிலும் ஒவ்வொரு நெட்வர்க் கார்ட்இருந்தாலே போதுமானது.
எனினும் இவ்வாறு இரண்டு கணினிகளை இணைக்கும் போது சில வரையறைகளும் உள்ள்ன என்பதைக் கவனத்திற் கொள்ள் வேண்டும். உதாரணமாக் இணைய இணைப்பையோ அல்லது ப்ரிண்டரையோ பகிர்ந்து கொள்ளும் போது இரண்டு கணிகளும் இயக்க நிலையிலேயே இருக்க வேண்டும் என்பதையும் மறந்து விடாதீர்கள்,.
இடையில் ஹப் (Hub) , ஸ்விச் (Switch) போன்ற வேறு எந்த சாதனங்களும் இல்லாமல் நெட்வர்க் கார்ட் ஊடாக மட்டுமே இணைப்பதற்கு இரண்டு கணினிகளையும் விசேட cross-over கேபல் பயன் படுத்தப்படுகிறது.. இந்த
க்ரொஸ் ஓவர் கேபல் வழமையான (Ethernet) ஈதர்நெட் கேபலிலிருந்து வேறுபட்டது. இத்னை நாமாகவே த்யாரித்துக் கொள்ளவும் முடியும்.
இரண்டு கணினிகளையும் கேபல் கொண்டு இணைத்து விட்டால் மாத்திரம் அவற்றிற்கிடையே தொடர்பாடலை மேற் கொள்ள் முடியாது. அடுத்த வேலையாக இரண்டு கணினிகளிலும் ஐபி முகவரிகளை கீழுள்ளவாறு மாற்றியமைக்க வேண்டும்.
விண்டோஸ் எக்ஸ்பீ இயங்கு தளத்தில் முதல் கணினியில்
Start → Settings ஊடாக Network Connections தெரிவு செய்யுங்கள். அப்போது திறக்கும் விண்டோவில் Local Area Network என்பதன் கீழ் நெட்வர்க் கார்டுக்குரிய ஐக்கனை மஞ்சள் நிறத்தில் விழிப்புக் குறியுடனும் “Limited or No Connectivity” எனும் செய்தியுடனும் காண்பிக்கும்.
அடுத்து அந்த ஐக்கன் மீது ரைட் க்ளிக் செய்து வரும் மெனுவிலிருந்து Properties தெரிவு செய்யுங்கள்., அப்போது தோன்றும் Local Area Connection Properties டயலொக் பொக்ஸில் General டேபின் கீழ் Internet Protocol (TCP/IP) என்பதைத் தெரிவு செய்து அதன் கீழுள்ள் Properties பட்டனில் க்ளிக் செய்யுங்கள். தோன்றும் டயலொக் பொக்ஸில் Use the following IP address என்பதைத் தெரிவு செய்து கீழுள்ள்வாறு அதன் ஐபி முகவரியை மற்றியமையுங்கள்..
முதல் கணினியில்
(PC-1) ஐபி முகவரியாக 192.168.0.1 எனவும் இரண்டாவது கணினியில் (PC-2) 192.168.0.2 எனவும் வழங்குங்கள். இப்போது இரண்டு கணினிகளையும் இணைத்தாயிற்று, இதனை உறுதி செய்து கொள்ள வேண்டுமானால் மறு படியும் Start → Settings ஊடாக Network Connections தெரிவு செய்ய் வரும் விண்டோவில் நெட்வர்க் கார்டுக்குரிய ஐக்கனில் ம்ஞ்சல் நிற விழிப்புக் குறி மறைந்திருப்பதைக் காணலாம். சில வேளை அந்த ஐக்கன் மேல் பூட்டு வடிவில் ஒரு ஐக்கன் இருப்பதை அவதானித்தால் Firewall இயக்க நிலையிலுள்ளது என்பதையே காட்டுகிறது. அவ்வாறிருந்தால் பைல் பரிமாறம் செய்வதை விண்டொஸ் அனுமதிக்காது. அதனை இடப்பக்கம் Network Task என்பதன் கீழ் Change Windows Firewall Settings என்பதைக் க்ளிக், செய்து தற்காலிகமாக நிறுத்திக் கொள்ளுங்கள்.. தற்போது இந்த சிறிய வலையமைப்பில் பைல், போல்டர் மற்றும் வளங்களைப் பகிர்ந்து கொள்ளக் கூடியதாயிருக்கும்.
IP Address: 192.168.0.1
Subnet Mask: 255.255.255.0
Default Gateway: 192.168.0.1
Preferred DNS Server: 192.168.0.1
படங்கள் பிரசுரமாகுமாயிருந்தால்
நிழற் படுத்தப் பட்ட பகுதி அவசியமில்லை இரண்டாவது
கணினியிலும் கீழே காட்டியுள்ளது போன்று ஐபி முகவரியை மாற்றி அமையுங்கள்.
IP Address: 192.168.0.2
Subnet Mask: 255.255.255.0
Default Gateway: 192.168.0.1
Preferred DNS Server: 192.168.0.1

அதி வேக ப்ரோடபேண்ட் இணைய இணைப்பைப் பகிர்ந்து கொள்ள வேண்டுமாயின் இரண்டு கணினிகளிலும் ஐபி முகவரியை மாற்றியமைக்கும் இடத்தில் “Obtain an IP address automatically” என்பதைத் தெரிவு செய்ய் வேண்டும்.

எனினும் அதிவேக இணைய இணைப்பை இரண்டு கணினிகளுக்கிடையே பகிர்ந்து கொள்ள வேண்டுமாயின் நேரடியாக் க்ரொஸ் ஓவர் கேபல் கொண்டு இணைப்பதை விட இடையில் இரண்டு அல்லது நான்கு போர்டுக்ள் (Ports) கொண்ட ரூட்டர் மூலம் இணைப்பதே சிறந்த வழி முறையாகும். எனினும் அதற்கு க்ரொஸ் ஓவர் கேபலை விட செலவு சற்று அதிகமாயிருக்கும். .என்பதை நினைவில் கொள்ளவும்.

இருதய நோய்கள் வராமல் தடுக்க

இருதய நோய் உள்ளிட்ட நோய்கள் வராமல் தடுக்க சீரான உடல் பயிற்சி அவசியம் என்றார் இருதய நோய் சிகிச்சை நிபுணர் செந்தில்குமார் நல்லுசாமி.

திருச்சி நடுநகர் அரிமா சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் "இதமாய் காப்போம் இதயம்' என்ற தலைப்பில் அவர் மேலும் பேசியது:

"அதிக கொழுப்புச் சத்து, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு மாரடைப்பு வர அதிக வாய்ப்பு உள்ளது.

40 வயதுக்கு மேல் உள்ள ஆண்களும், 50 வயதுக்கு மேல் உள்ள பெண்களும் ஆண்டுக்கு ஒருமுறை ரத்த அழுத்த பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை எப்போதும் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

மூச்சுத் திணறல், தோள்பட்டை வலியுடன் கூடிய மார்பு வலி, நடக்கும்போது, ஓடும் போது, உயரமானப் பகுதிகளில் ஏறும்போது மார்பு வலி ஏற்படுதல் போன்றவை மாரடைப்புக்கான அறிகுறிகள்.

ஒருவருக்கு தொடர்ந்து 20 நிமிஷங்களுக்கு மேல் படபடப்புடன் மார்பு வலி ஏற்பட்டால் உடனே அருகிலுள்ள மருத்துவமனைக்குச் சென்று பரிசோதித்துக் கொள்வது அவசியம்.

இருதயத்துக்குச் செல்லும் ரத்தக் குழாயில் கொழுப்புச் சத்துகள் அதிகமாகி ரத்த ஓட்டத்தை தடுப்பதால்தான் மாரடைப்பு ஏற்படுகிறது.

பொதுவாக, இருதய நோய் உள்ளிட்ட எந்த நோயும் நம்மைத் தாக்காமல் இருக்க தினமும் அரைமணி நேரமாவது சீரான உடல் பயிற்சி செய்வது நல்லது.

மேலும், இரவு தூங்கச் செல்வதற்கு முன் ஏறத்தாழ இரண்டு மணி நேரத்துக்கு முன்பே சிறிய அளவு உணவு சாப்பிட வேண்டும். முடிந்தளவு சாதத்தை தவிர்ப்பது நல்லது.

இருதய நோயைத் தவிர்க்க நினைப்பவர்கள் முதலில் புகைப் பிடிப்பதையும், மது அருந்துவதையும் நிறுத்த வேண்டும்.

இதுதவிர, இறைச்சி, எண்ணெய் பலகாரங்கள், கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

எந்தச் சூழ்நிலையிலும் மன அழுத்தத்துக்கு ஆளாகமல் இருத்தல் அவசியம். ஒரே நேரத்தில் பல வகையான சிந்தனைகளில் ஈடுபடுவதால் மன அழுத்தம் ஏற்படுகிறது.

நாம் எப்போதும் நேர்மறை எண்ணத்துடன் இருந்தால்தான் நமக்கு நேர்மறையான முடிவுகள் கிடைக்கும்' என்றார் செந்தில்குமார் நல்லுசாமி.

நிகழ்ச்சியில், அரிமா சங்கத் தலைவர் சூசைநாதப்பிள்ளை, செயலர் எஸ். சசிதரன், வட்டாரத் தலைவர் லட்சுமணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
Related Posts with Thumbnails