மன்மதன் அம்புக்காக கமல்ஹாசன் எழுதிய பாடல்

டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன், த்ரிஷா, மாதவன், சங்கீதா நடிக்கும் படம் மன்மதன் அம்பு. உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் த்ரிஷா நிஷா என்ற பெயர் கொண்ட சினிமா நடிகையாக நடிக்கிறார். 

கதைப்படி நடிகை நிஷா ஒரு கவிதை எழுதுகிறார். அது பாடலாக இடம்பெறுகிறது. அந்த கவிதையை நிஜமாக எழுதியவர் நடிகர் கமல்ஹாசன். 

கண்ணோடு கண்ணை கலந்தாளென்றால்... எனத் தொடங்கி தொடரும் அந்த பாடல் கமல்ஹாசனை ஒரு கவிஞராக மீண்டும் நிரூபித்திருக்கிறது.

கமல்ஹாசன் எழுதிய அந்த பாடல் வரிகள் வருமாறு:-


கண்ணோடு கண்ணைக் கலந்தாளென்றால்
களங்கம் உள்ளவள் எச்சரிக்கை
உடனே கையுடன் கைகோர்த்தாளா?
ஒழுக்கம் கெட்டவள் எச்சரிக்கை

ஆடை களைகையில் கூடுதல் பேசினால்
அனுபவம் மிக்கவள் எச்சரிக்கை
கலவி முடிந்தபின் கிடந்து பேசினால்
காதலாய் மாறலாம் எச்சரிக்கை

கவிதை இலக்கியம் பேசினளாயின்
காசை மதியாள் எச்சரிக்கை
உன்னுடன் இருப்பது சுகமென்றாளா
உறுதியாய் சிக்கல் எச்சரிக்கை

அறுவடை கொள்முதல் என்றே காமம்
அமைவது பொதுவே நலமாகக்கோள்
கூட்டல் ஒன்றே குறியென்றானபின்
கழிப்பது காமம் மட்டும் எனக்கொள்

உன்னை மங்கையர் என்னெனக் கொள்வர்?
யோசிக்காமல் வருவதை எதிர்கொள்
முன்னும் பின்னும் ஆட்டும் சகடை
ஆணும் பெண்ணும் அதுவேயெனக்கொள்

காமமெனப்படும் பண்டைச் செயலில்
காதல் கலவாது காத்துக்கொள்
இப்பெண்ணுரைக்கெதிராய் ஆணுரை ஒன்றைஇயற்றத் துணியும் அணி சேர்த்துக்கொள்.

டைட்டிலுக்காக புதுமுகத்தை மிரட்டும் பிரபல டைரக்டர்!

தான் விரும்பிய டைட்டிலை வேறொரு புதுமுகம் ஏற்கனவே பதிவு செய்து வைத்திருப்பதையறிந்த பிரபல டைரக்டர் அந்த புதுமுக டைரக்டரை மிரட்டி வருகிறாராம். 

ஏற்கனவே 10 படங்களை இயக்கியிருக்கும் அந்த டைரக்டர் தற்போது மருமகன் நடிகரை வைத்து ஒரு படத்தை இயக்கும் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். இந்த படத்திற்கு முதலில் அருவா என பெயர் சூட்டியிருந்தனர். 

ஆனால் படத்தின் நாயகனுக்கோ வேறொரு தலைப்பின் மேல் ஈர்ப்பு. நாயகன் விருப்பத்தை பூர்த்தி செய்வதற்காக அந்த தலைப்பை பதிவு செய்ய முற்பட்டபோதுதான் தெரிந்தது, நாயகனின் விருப்ப தலைப்பு வேறோரு புதுமுக டைரக்டரின் கையில் இருக்கிறது என்று. 

உடனடியாக அந்த புதுமுகத்திடம் போனில் பேசிய டைரக்டர், தனக்கு அந்த ‌தலைப்பை விட்டுக் கொடுக்கும்படி கேட்டிருக்கிறார். ஆனால் புதுமுகமோ... வாய்ப்பே இல்லை. எனது படத்திற்கு அந்த தலைப்புதான் பொருத்தமாக இருக்கும், என்று கூறி மறுத்து விட்டாராம்.

விட்டாரா டைரக்டர்...? ஆளு தெரியாம மோதாதே... மரியாதையா டைட்டிலை கொடுத்திரு என மிரட்டத் தொடங்கி விட்டார். அதேநேரம் புதுமுகமோ, நீங்க எவ்வளவு மிரட்டினாலும் அந்த டைட்டிலை தர முடியாது என முரண்டு பிடித்துக் கொண்டிருக்கிறார். மிஷ்கின் பஞ்சாயத்து முடிவுக்கு வந்துள்ள நிலையில் இயக்குனர்கள் சங்கத்தில் இப்போது இந்த பிரச்னை சூட்டை கிளப்பி விட்டிருக்கிறதாம். 

கமல்ஹாசன் பாணியில் இளம் ஹீரோக்கள்!

தனது படத்தில் இளம் நடிகர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதை தனி கொள்கையாக வைத்திருக்கும் கமல்ஹாசனின் பாலிஸிக்கு இளம் ஹீரோக்கள் மாறி வருகிறார்கள்.


இன்றைய இளம் ஹீரோக்கள் தங்கள் படங்களில் வேறொரு ஹீரோ நடிப்பதை அனுமதிக்க மறுப்பது கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து கொண்டிருக்கிறது. பாலிவுட், மல்லுவுட்டைப் போல மூத்த நடிகர்கள் ஒன்று சேர்ந்து ஒரே படத்தில் நடிப்பதில்லை.


தமிழ் சினிமாவில் இந்த நிலை மாற வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் அவ்வப்போது கூறுவதுடன், தனது படங்களில் இளம் நடிகர்களையும் இணைத்து நடிக்க வைப்பார். பஞ்சதந்திரம், தெனாலியில் ஜெயராம், அன்பேசிவம் படத்தில் மாதவன், காதலா காதலாவில் பிரபுதேவா, குருதிப்புனலில் அர்ஜூன் என சக கலைஞர்களை நடிக்க வைத்தார். தற்போது அவர் நடித்து வரும் மன்மதன் அம்புவில் கூட மாதவன் இருக்கிறார்.

இப்போது கமல்ஹாசன் பாலிஸியை பின்பற்ற தயாராகியிருக்கிறார்கள் நடிகர் விஜய், ஜீவா, ஸ்ரீ‌காந்த் ஆகியோர். டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகவிருக்கும் 3 இடியட்ஸ் படத்தில்தான் இந்த மூன்று நட்சத்திரங்களும் இணைகின்றன.


இந்த படத்துக்காக முதல் பாடல் கம்போஸிங் முடிந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெமினி பிலிம் சர்க்யூட் தயாரிக்கும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். டிசம்பர் 6ம்‌தேதி படத்தின் சூட்டிங் தொடங்கவுள்ளது.

சிங்கப்பூரில் மன்மதன் அம்பு பாடல் வெளியீடு

கமல், திரிஷா, மாதவன் இணைந்து நடித்துள்ள படம் மன்மதன் அம்பு, கே.எஸ்.ரவிக்குமார் இயக்கி உள்ளார். டிசம்பர் 17-ந் தேதி இப்படத்தை ரிலீஸ் செய்ய ஏற்பாடு நடக்கிறது.

இதன் பாடல் சி.டி. வெளி யீட்டு விழாவை சிங்கப்பூரில் நடத்துகின்றனர். வருகிற 20-ந் தேதி இவ்விழா நடக்கிறது. 7 ஆயிரம் ரசிகர்கள் இவ்விழாவில் பங்கேற்கின்றனர்.

3 மணி நேரம் விழா நடைபெறுகிறது. முன்னதாக 14-ந் தேதி கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

கமலஹாசன், மாதவன்- திரிஷா, சங்கீதா, கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் இவ் விழாவில் கலந்து கொள்கின்றனர்.


நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காகவும், நடிகர் -நடிகைகள் பலர் சிங்கப்பூர் செல்கிறார்கள். விஜய் டி.வி. இதனை நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

மந்திர புன்னகை - முன்னோட்டம்

டைரக்டர் கரு.பழனியப்பன் ஹீரோவாக அறிமுகமாகும் படம் மந்திர புன்னகை. இதுவரை நான்கு படங்களை இயக்கியிருக்கும் கரு.பழனியப்பன் தனது 5வது படமான மந்திர புன்னகையை இயக்கி, நடிக்கிறார்.

படத்தில், காதலாலும் கறைக்கமுடியாத, ஒரு கனத்த இதயத்துடன் இருக்கும் ஒரு இளைஞனாக கரு.பழனியப்பன் நடித்திருக்கிறாராம். இந்த உலகத்தில் இருக்கிற எல்லா மனிதர்களுக்கும், பசி, கோபம், அழுகை, சிரிப்பு, ஆசை, காமம், காதல், அன்பு என்று ஆதார உணர்ச்சிகள் ஒன்றுதான்.

ஆனால் இந்த உணர்ச்சிகளுக்கான காரணம் ஒவ்வொருவருக்கும் மாறுபடுகிறது. அப்படி பார்க்கும்போது இந்தப் பூமிப் பந்தில் இருக்கிற ஒவ்வொரு மனிதனும் ஒரு தனி உலகம்தான்.

அப்படி தனெக்கென ஒரு தனி உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு இளைஞனின் கதைதான் மந்திரப்புன்னகை.

கரு.பழனியப்பனுக்கு ஜோடியாக மீனாட்சி நடிக்கிறார். இவர்களுடன் சந்தானம், மகேஸ்வரி, ரிஷி மற்றும் தம்பி ராமையா ஆகியோர் நடிக்க, இயக்குநர் நகுலன் பொன்னுசாமி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார்.

நீண்ட இடைவேளைக்கு பிறகு கவிஞர் அறிவுமதி இப்படத்தில் பாடல்களை எழுதியுள்ளார். இவருடன் யுகபாரதி, விவேகா ஆகியோரும் பாடல்கள் எழுத, வித்யாசாகர் இசையமைக்கிறார்.

ராம்நாத் ஷெட்டி ஓளிப்பதிவு செய்ய, கலையை ராஜீவனும், படத்தொகுப்பை ராஜா முகம்மதுவும் செய்கிறார்கள்.

இந்திரா பிக்சர்ஸ் சார்பில் நாகராஜன் - கார்த்திக் நாகராஜன் தயாரிக்கும் இப்படத்தின் சூட்டிங், சென்னையிலும் அதன் சுற்றுப்புற பகுதிகளிலும் நடந்துள்ளது.

திருட்டு விசிடியை ஒழிக்க கமல்ஹாசன் சொல்லும் ஐடியா!

மக்கள் நினைத்தால் மட்டுமே திருட்டு விசிடியை ஒழிக்க முடியும் என்று நடிகர் கமல்ஹாசன் யோசனை தெரிவித்துள்ளார்.

திருட்டு விசிடி குறித்த கேள்விக்கு பதில் அளித்திருக்கும் கமல்ஹாசன், திருட்டு சி.டி.க்களால் திரைப்படத்துறை நலிந்துள்ளது. அவற்றை சினிமா துறையினரோ, அரசியல்வாதிகளோ தடுக்க முடியாது. மக்களால்தான் தடுக்க முடியும்.

திருட்டு சி.டி.யில் படம் பார்க்கமாட்டோம் என்று அவர்கள் உறுதி எடுத்தால் தானாக சரியாகிவிடும், என்று கூறியுள்ளார்.

ஷங்கர் படத்தில் நடிக்கப்போவதாக வெளியான செய்தி குறித்த கேள்விக்கு பதில் அளிக்கையில், ஷங்கர் இயக்கும் ரூ.500 கோடி பட்ஜெட் படத்தில் நான் நடிப்பதாக செய்தி வெளியானதாக நானும் கேள்விப்பட்‌டேன். ஆனால் ஷங்கரிடம் இருந்து அதுபோன்று ஒரு படத்தில் நடிக்க அழைப்பும் வரவில்லை, என்றார்

ஷங்கர் இயக்கும் ரூ. 500 கோடி பட்ஜெட் படம்

ஷங்கர் தற்போது இந்தியில் ஹிட்டான “3 இடியட்ஸ்” படத்தை தமிழில் ரீமேக் செய்யும் வேலையில் உள்ளார். விஜய் நாயகனாக நடிக்கிறார்.

இந்த படம் முடிந்ததும் ரஜினி, கமல் நடிக்கும் படத்தை துவங்குவார் என்றும் செய்திகள் பரவின.

இதுபற்றி ஐதராபாத்தில் கமலிடம் நிருபர்கள் நேற்று பேட்டி கண்டனர். நீங்களும், ரஜினியும் சேர்ந்து நடிக்க ஷங்கர் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்கும் என்று கேட்கப்பட்டது.

இதற்கு பதில் அளித்து கமல் கூறியதாவது:-


ஷங்கர் இயக்கும் ரூ. 500 கோடி பட்ஜெட் படமொன்றில் ரஜினியும், நானும் அதில் நடிக்கிறோம் என்றும் நீங்கள் கூறுகிறீர்கள். அது பற்றி எனக்கு எந்த தகவலும் வரவில்லை. ஷங்கரிடம் இருந்து அதுபோன்று ஒரு படத்தில் நடிக்க அழைப்பும் வரவில்லை என்றார்.

மேலும் அவர் கூறியதாவது:-

ஐதராபாத்தில் பிக்கி மீடியா மாநாட்டை டிசம்பர் 1, 2 தேதிகளில் நடத்த உள்ளோம். 2 ஆயிரம் பிரதிநிதிகள் அதில் பங்கேற்கின்றனர்.

திருட்டு சி.டி.க்களால் திரைப்படத்துறை நலிந்துள்ளது. அவற்றை சினிமா துறையினரோ, அரசியல்வாதிகளோ தடுக்க முடியாது. மக்களால்தான் தடுக்க முடியும்.

திருட்டு சி.டி.யில் படம் பார்க்கமாட்டோம் என்று அவர்கள் உறுதி எடுத்தால் தானாக சரியாகிவிடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேஸ்புக்கை மையமாக கொண்டு உருவான சினிமா!

இன்று உலகையை தன்னுள் முடக்கிப் போட்டிருக்கும் பேஸ்புக் தளத்தை மையமாகக் கொண்டு ஹாலிவுட்டில் தி சோஷியல் நெட்‌வொர்க் என்ற பெயரில் புதிய படமொன்று உருவாகியிருக்கிறது.

இந்தப் படத்தின் கதையை தி ஆக்சிடெண்டல் பில்லியன்ர்ஸ் என்கிற புத்தகத்தை தழுவி உருவாக்கியுள்ளார் எழுத்தாளர் ஆரோன் சார்க்கின்.

சைபர் உலகின் இந்நூற்றாண்டு அதிசயமான ஃபேஸ்புக் செய்யும் ஆக்கம் மற்றும் அழிவினை சொல்லும் படமாக இது இருக்கும். இது வரமா? சாபமா? என்பதை கதை முடிவு சொல்லும்.

படத்தை இயக்கியுள்ளவர் டேவிட் பிஞ்ச்சர். இவர் ஏலியன், செவன், ஃபைட் க்ளப், ஸோடியா போன்ற படங்களை கொடுத்தவர்.

கோல்டன் குளோபல் உட்பட பல விருதுகளைக் குவித்தவர். மார்க்காக நடித்துள்ளவர் ஜெஸ்ஸி ஈசன் பொக்.

ஆண்ட் ரூ கார் ஃபீல்டு, ஜாஸ்டின் டிம்பர் லேக், ஆர்மி ஹாமர், ஜோஷ் பென்ஸ் ஆகியோர் பிரதான பாத்திரங்களில் வருகிறார்கள். பேஸ்புக்கின் ஆக்கம் அழவுகள் பற்றி இளையதலைமுறையினருக்கு எச்சரிக்கிற படமாக தி சோஷியல் நெட் ஒர்க் இருக்கும் என கருதப்படும் இப்படத்தை சோனி பிக்சர்ஸ் வெளியிகிறது. நாளை (12ம்தேதி) ரீலிஸ்.

டிசம்பர் 6 முதல் 3 இடியேட்ஸ்

எந்திரன் என்ற மெகா பிரமாண்டப் படத்தைக் கொடுத்த ஷங்கர், அடுத்து முழுவீச்சில் 3 இடியட்ஸ் ரீமேக்கில் இறங்குகிறார்.

தமிழ் மற்றும் தெலுங்க என இரு மொழிகளில் உருவாகுகிறது. இதில் அமீர்கான் வேடத்தைச் செய்யப் போகிறவர் விஜய்.

மாதவன் வேடத்தில் ஜீவாவும், ஷர்மான் ஜோஷி பாத்திரத்தில் சித்தார்த்தும் நடிக்கிறார்கள். ஷங்கர் இயக்கும் முதல் ரீமேக் 3 இடியட்ஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கில் மகேஷ் பாபு ஹீரோவாக நடிக்கிறார். இதனையடுத்து டிசம்பர் 6 முதல் 3 இடியேட்ஸ் படத்தின் தெலுங்கு பதிப்பை முதலில் தொடங்குகிறார் ஷங்கர்.

மகேஷ் பாபுவின் கால்ஷீட் பிரச்சனை காரணமாக 3 இடியேட்ஸ் படத்தை முதலில் தெலுங்கில் தொடங்குகிறார். படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

மைனா - விமர்சனம்

மைனா வெளியாவதற்கு சில மாதங்களுக்கு முன்பே படுபயங்கர எதிர்பார்ப்பை கிளப்பி விட்டு, அதில் ஓரளவு பூர்த்தியும் செய்திருக்கிறது.

குடித்து குடித்து இறந்து போன அப்பாவால் சின்ன வயதிலேயே குடியிருக்கும் வீடு உள்ளிட்ட சொத்துபத்துகளையும், சொந்தபந்தங்களையும் இழந்து நடுத்தெருவில் நிற்கும் நாயகிக்கும், அவரது அம்மாவிற்கும் அடைக்கலம் கொடுக்கிறான் சிறுவயது ஹீரோ.

பனியாரம் சுட்டு விற்று வயிற்றை கழுவும் நாயகியின் அம்மாவால் நன்றாக படித்தும், நாயகியை படிக்க வைக்க முடுியாத சூழல். அதனால் நாயகியை தானே கூலி வேலையெல்லாம் செய்து படிக்க வைக்கும் நாயகனுக்கு, இனம் புரியாத வயதில் இருந்தே நாயகி மீது காதல்! நாயகிக்கும் நாயகன் மீது அதே ரக காதல்!

இது நாயகியின் அம்மாவிற்கு தெரியவருகிறது.அதுவரை வாய்திறந்து ஹீரோவை மருமகனே.. மருமகனே... என அழைத்து வந்த அவர், அதன் பின் காட்டும் ஆக்ஷனும், ஆக்ரோஷமும், அதற்கு ஹீரோ பண்ணும் ரீயாக்ஷனும், அதனால் எழும் பிரச்னைகளும்தான் மைனா படத்தின் மீதிக்கதை!

க்ளைமாக்ஸில் சந்தர்ப்பத்தாலும், சூழ்நிலையாலும் அந்த ஜோடிக்கு ஏற்படும் கொடூரம், படம் முடிந்து நீண்ட நேரமாகியும் நம் நெஞ்சை விட்டு நீங்க மறுப்பது படத்தின் வெற்றிக்கு கட்டியம் கூறும் ப்ளஸ் பாயிண்ட்.

மைனாவின் நாயகராக சுருளி எனும் பாத்திரத்தில் தொட்டுப்பார் விதார்த் நம் மனதை தொடுகிறார். காட்டான் மாதிரி தலைமுடியும், தாடி மீசையுமாக இருந்தாலும், ரசிகர்கள் நெஞ்சை உலுக்கும் நடிப்பில் ஜூனியர் ராஜ்கிரண் என்று பட்டமே தரலாம் இவருக்கு.

அதுவும் தன் காதலுக்காகவும், காதலிக்காகவும் பெற்ற தாய் - தந்தையையே அடிக்க பாயும் இடத்தில் விதார்த் சிறப்பான நடிப்பை விதைத்திருக்கிறார். அதேமாதிரி, விபத்துக்குள்ளான பேருந்தில் தன்னையும், தன் காதலையும் குழி தோண்டி புதைக்க நினைக்கும் சிறைக்காவலர்களை காப்பாற்றும் இடத்திலும் சபாஷ் வாங்கி விடுகிறார் விதார்த்.

மைனாவாகவே வாழ்ந்திருக்கும் அமலா பால், சிந்து சமவெளியில் விட்டதை இங்கே பிடித்து விட்டார். இவர் அழகான பெண்பால் மட்டுமல்ல... அருமையான நடிப்பாலும் நம்டம தன்வசப்படுத்தி விடுகிறார். க்ளைமாக்ஸில் அவருக்கு நிகழும் கொடூரம் கல் நெஞ்சக்காரர்களையும் கரைய வைக்கும்.

விதார்த் - அமலா பால் மாதிரியே ஜெயிலர் பாஸ்கராக வரும் சேது, தம்பி ராமையா, செவ்வாளை, கார்த்திக், பூவிதா, மீனாட்சி உள்ளிட்ட சகலரும் தங்கள் பங்கை சரியாய் செய்திருக்கிறார்கள். அதிலும் மைனாவின் சாவிற்கு காரணமான தன் மனைவி உள்ளிட்ட சொந்தபந்தங்களை போட்டுத் தள்ளும் ஜெயிலர் பாஸ்கராக வரும் சேதுவும், சுருளியின் அன்பில் உருகிப் போகும் தம்பிராமையாவும் பிரமாதம்.

சுகுமாரின் ஒளிப்பதிவும், டி.இமானின் இசையும் இதுவரை காணாத தமிழ்சினிமாவை கண் முன் நிறுத்துகிறது. இதுதான் க்ளைமாக்ஸோ, அதுதான் க்ளைமாக்ஸா இருக்குமோ... என எக்கச்சக்கமாக யோசிக்க விட்டு, யாருமே யோசிக்காத கோணத்தில் மைனாவுக்கும், சுருளிக்கும் முடிவு கட்டும் க்ளைமாக்ஸில் டைரக்டர் பிரபு சாலமன் வித்தியாசமாகத் தெரிகிறார்.

மைனா - தரமான தமிழ்ப்படம்தான் நைனா!

சம்பளம் குறைத்து வாய்ப்பு தேடும் ஹீரோ

"உன்னாலே உன்னாலே", "ஜெயம் கொண்டான்", "மோதி விளையாடு" உள்ளிட்ட படங்களில் நடித்தும் ஹீரோ வினய்க்கு பெரிய அளவில் புதிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இத்தனைக்கும் காரணம் வினய் கேட்டு வந்த அதிகப் படியான சம்பளம் தான். இதன் விளைவு தான் தனக்கு புதிய பட வாய்ப்புகள் கிட்டவில்லை...என்பதை உணர்ந்த வினய், அதிரடியாக சம்பளத்தை குறைத்துக் கொண்டிருக்கிறார்.

இப்பொழுது, "சாக்லெட்" பட அதிபரும், "மதுர" பட இயக்குநருமான மாதேஷ் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

சம்பளத்தை குறைத்துள்ளதால் தொடர்ந்து புதிய பட வாய்‌ப்புகள் வாயிற் கதவை தட்டும் என நம்புகிறார் வினய் ! இப்பொழுதாவது புத்தி வந்ததே !!

வ குவாட்டர் கட்டிங் : ஸ்பெஷல் ஹைலைட்ஸ்

தமிழ்ப்படம் வெற்றிக்கு பிறகு மிர்ச்சி சிவா நடித்திருக்கும் படம் வ குவாட்டர் கட்டிங். தயாநிதி அழகிரியின் க்ளவுட் நைன் மூவிஸ் தயாரிக்கும் இப்படத்தை டைரக்டர் புஷ்கர் - காயத்ரி இயக்கியுள்ளனர். வித்தியாசமான வ குவாட்டர் கட்டிங் படத்தின் ஸ்பெஷல் ஹைலைட்‌ஸ் :-

* ஒரு இரவில், சென்னையில் நடக்கும் கதைதான் வ குவாட்டர் கட்டிங் படத்தின் மொத்த கதையும்.

* தமிழ்ப்படம் சிவா நாயகனாகவும், லே‌கா வாஷிங்டன் நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள்.

* கோவையில் இருந்து சென்னைக்கு வரும் சிவா, தன் அக்கா கணவர் எஸ்.பி.பி. சரண் வீட்டில் தங்கி, அடுத்த நாள் சவுதிக்கு போக வேண்டும். அந்த ஒரு நாள் ராத்திரியில் மாலை 6.30 மணி முதல் காலை 6.30 மணி வரை நடக்கும் கதையை சுவாரஸ்யமாக கொடுத்திருக்கிறார்கள் புஷ்கர் - காயத்ரி தம்பதிகள்.

* படத்தின் சிவாவின் பெயர் சுந்தர்ராஜன். விஜய் ரசிகராக நடிக்கிறார். எனவே தனது பெயரை சுரா என சுருக்கிக் கொள்வாராம்.

* தமிழ்ப்படம் போல் எந்த கலாய்ப்பும் இல்லாத, சுத்த காமெடி படமாம் இந்த வ குவாட்டர் கட்டிங். பெரிய மெசேஜ் எதுவும் இல்லாமல் ஒரு ஜாலியான படம்.

* ஆர்யா - பூஜா நடித்த ஓரம் போ திரைப்படத்திற்கு பிறகு கணவன் - மனைவியான புஷ்கர் - காயத்ரி இணைந்து இயக்கும் 2வது படம் இது.

* படத்தில் ஆங்காங்கே சந்திக்கும் சின்ன பிரச்னை எப்படி பெரிய ‌பாதிப்பை தருகிறது என்பதை அழுத்தமாக பதிவு செய்துள்ளாராம்.

* ஜனவரியில் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை 68 நாட்கள் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர். பெரும்பாலான காட்சிகள் இரவில்தான் படமாக்கப்பட்டுள்ளது.

* 19 வயசு பொண்ணு, 12ம் வகுப்பு படிக்கிறது, 3 முறை பெயில் ஆகி, தற்கொலைக்கு முயற்சி பண்ணுவது போன்ற இயல்பான காட்சிகள் படத்தில் உள்ளனவாம்.

* டான்ஸ் மாஸ்டர் கல்யாண், நடனம் அமைத்துக் கொடுத்திருப்பதுடன், சொக்கத் தங்கள் என்ற பெயரில் அரசியல்வாதியாகவும் நடித்து பட்டையை கிளப்பியிருக்கிறார்.

* சுரா வாக வரும் சிவாவின் அக்கா கணவர் எஸ்.பி.பி. சரண், மார்த்தண்டன் என்ற கேரக்டரில் சிறப்பாக நடித்துள்ளாராம். படத்திற்காக 20 கிலோ எடை போட்டு அந்த கேரக்டரை நிஜமாக கொண்டு வந்திருக்கிறாராம் அவர்.

* எல்லா படங்களும் வித்தியாசமான லவ் ஸ்டோரி, வித்தியாசமா எடுத்திருக்கோம்னு சொல்வாங்க, ஆனா இந்த படத்தை பார்த்தா உங்களுக்கே வித்தியாசமான படமா இருக்கேன்னு சொல்லத் தோணும் என்கின்றனர் படத்தி்ன் டைரக்டர்களான புஷ்கர் - காயத்ரி தம்பதியர்.

கம்‌பெனிக்கு பூட்டு போடத் தயாராகும் இயக்குனர்!

பிரமாண்ட இயக்குனர் என்று பெயரெடுத்த அந்த இயக்குனர் சமீபத்தில் எந்திரமான படத்தை இயக்கி முடித்த கையோடு, தனது சொந்த பட கம்பெனியின் கணக்கு வழக்குகளை பார்த்திருக்கிறார்.

பெயர் சொல்லுகிற மாதிரி படங்களை தயாரித்து வெளியிட்டு வரும் அந்த நிறுவனத்தின் லாப நஷ்ட கணக்கில் லாபத்தை விட நஷ்டம் தலைதூக்கி நிற்கிறதாம்.

மூன்று முக்கியமான படங்களால் மட்டும் ரூ.9 கோடி வரை நஷ்டத்தை சந்தித்திருக்கும் அந்த கம்பெனியை இனியும் ‌தொடர வேண்டுமா? என்ற யோசனையில் மூழ்கியிருக்கும் பிரமாண்ட இயக்குனர், விரைவில் கம்பெனிக்கு பூட்டு போடப் போவதாக சொல்கிறது கோடம்பாக்க தகவல்.

அநேகமாக கம்பெனியின் கடைசிப்படம் அன்நதபுரத்து வீடாகத்தான் இருக்கும் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

பிரமாண்ட டைரக்டரின் அவசர முடிவு!

பிரமாண்ட டைரக்டர் என்ற பெயரெடுத்த அந்த இயக்குனர், இந்தியில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் ஆன 3 முட்டாள்கள் படத்தை தமிழில் ரீ-மேக் செய்ய திட்டமிட்டதும், இதற்கான நடிகர்கள் - நடிகைகள் தேர்வு நடைபெற்றதும் தெரிந்த சங்கதிதான்.

என்ன காரணத்தினாலோ அந்த படத்தை தயாரிக்க முன்வந்த ஜெமினி நிறுவனம் தயாரிப்பு முயற்சியை சற்று தள்ளிப் போட்டிருக்கிறதாம்.

அதுவரை இளைய தளபதியின் தேதிகளை வீணடிக்க விரும்பாத பிரமாண்டம், அவரை வைத்து மசாலா படம் ஒன்றை இயக்க அவசர முடிவு எடுத்திருக்கிறாராம்.

இந்த மசாலா படத்தில் ஏற்கனவே நடிக்கவிருந்தவர் ஜீவமான இளம் நடிகர்தானாம். இந்த தகவல் அறிந்த ஜீவ நடிகர் அதிர்ச்சியடைந்து, விஜயத்தை நேரில் சென்று பார்த்து பேசியிருக்கிறார்.

அவர்கள் என்ன பேசினார்கள் என்பது தெரியவில்லை. ஓருவேளை படத்தில் 2 பேரும் சேர்ந்து நடிக்கலாம் என்று கோடம்பாக்கத்தில் பேசிக் கொள்கிறார்கள்.

டைரக்டருக்கு அதிர்ச்சி கொடுத்த தம்பி நடிகர்!

முதல் படத்திலேயே கிராமத்து நாயகனாக வெற்றிவாகை சூடிய அந்த தம்பி நடிகர் அடிப்படையில் அசிஸ்டென்ட் டைரக்டராக இருந்தவர். அடுத்தடுத்து நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தால் நல்ல கதைக்காக காத்திருந்து நடித்து வருகிறார்.

இயக்குனர் துறையில் தனக்குள்ள அனுபவம் தான் நடிக்கும் படங்களில் தெரிய வேண்டும் என நினைக்கும் அந்த தம்பி நடிகர் தற்போது நடித்து வரும் புதிய படத்தில் கொஞ்சம் ஓவராகவே மூக்கை நுழைக்கிறாராம்.

எல்லா விஷயத்திலும் மூக்கை நுழைப்பதால் படத்தின் டைரக்டர் ரொம்பவே அப்செட். சமீபத்தில் படத்தில் இடம்பெறப் போகும் பாடல் என்று கூறி ஒரு பாடலை நாயகனுக்கு போட்டுக் காட்டியிருக்கிறார் டைரக்டர்.

பாடலை கேட்ட ஹீரோ, இந்த பாட்டு வேணாம் என்று சொல்லி விட்டாராம். இதனால் அதிர்ச்சியுடன் கூடி ஆக்ரோஷத்தில் இருக்கிறதாம் இயக்குனர் தரப்பு.

ஏற்கவே இந்த தம்பி நடிகரின் அண்ணன் சூட்டிங் ஸ்பாட்டில் ஓவராக பில்ட்-அப் கொடுப்பதால் தயாரிப்பாளர் மற்றும் டைரக்டர்கள் அவஸ்தை பட்டு வருதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் தம்பியும், அண்ணன் வழியில் தன்னை மாற்றிக் கொண்டிருப்பது எங்கே போய் முடியுமோ? என புலம்புகிறார்கள் அஸிஸ்டென்ட் டைரக்டர்கள்.

திருட்டு கதையில் உருவான எந்திரன்

எனது கதையை திருடி எந்திரன் என்ற பெயரில் படம் எடுத்துள்ளனர் என்று படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மீது எழுத்தாளர் அமுதா பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

சென்னை, வேளச்சேரி எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர் அமுதா தமிழ்நாடன். வாரமிருமுறை வெளிவரும் புலனாய்வு இதழில் துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர், நேற்று (25ம்தேதி) சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்து புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

நான் எழுதிய "ஜூகிபா எனும் சிறுகதை, "இனிய உதயம் எனும் பத்திரிகையில் 1996ம் ஆண்டு ஏப்ரலில் வெளிவந்தது. தொடர்ந்து 2007ம் ஆண்டில், சாருபிரபா பப்ளிகேஷன்ஸ் சார்பில் வெளிவந்த "திக் திக் தீபிகா என்ற புத்தகத்திலும் வெளிவந்தது.

சமீபத்தில் திரைக்கு வந்த, "எந்திரன் திரைப்படத்தை பார்த்த என் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் நேரிலும், போனிலும் மற்றும் கடிதம் மூலமும், இந்த படம் என் படைப்பான "ஜூகிபா என்ற சிறுகதையை அப்படியே எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தனர்.

சமீபத்தில் நானும் அந்த படத்தை தியேட்டரில் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். என், "ஜூகிபா கதையை மூலக்கதையாக வைத்து, சினிமா சங்கதிகளான பாட்டு, சண்டை, கிராபிக்ஸ் காட்சிகளை சேர்த்து, "எந்திரன் படத்தை எடுத்து வெளியிட்டுள்ளனர்.

இந்திய பத்திரிகை பதிவாளர் முன் பதியப்பட்ட, "இனிய உதயம் இதழில் வெளியான காப்புரிமை கொண்ட எனது, "ஜூகிபா கதையை படமாக்க, என்னிடமோ, இனிய உதயம் வெளியீட்டாளரிடமோ எந்த முன் அனுமதியும் பெறவில்லை. மோசடி செய்து, லாபம் சம்பாதிக்கும் உள்நோக்கத்துடன் இயக்குனர் சங்கர், 1997 - 98ல் தான் கற்பனை செய்தது போல் பொய்யாகக் கூறி, "எந்திரன் படத்தை உருவாக்கி, அவரே அதன் இயக்குனராக செயல்பட்டுள்ளார்.

இயக்குனரும், தயாரிப்பாளரும் சேர்ந்து கூட்டு சதி செய்து இந்த படத்தை தமிழ், தெலுங்கு, இந்தியில் வெளியிட்டு, என் காப்புரிமையை சட்டத்திற்கு விரோதமாக உரிமை மீறல் செய்துள்ளனர். இந்திய காப்புரிமை சட்டத்தின்படி, கிரிமினல் குற்றம் புரிந்துள்ள இயக்குனர், தயாரிப்பாளர் மீது வழக்கு பதிவு செய்து, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

புகார் மனுவுடன் தனது கதை வெளியாகி இருந்த பத்திரிகையின் நகலையும் ஆரூர் தமிழ்நாடன் இணைத்திருந்தார். கமிஷனரிடம் அளிக்கப்பட்ட புகார் குறி்தது அமுதா தமிழ்நாடன் கூறுகையில், "இரண்டு முறை இந்த சிறுகதை வெளிவந்துள்ளது. முதலில் நண்பர்கள் கூறியதை நான் நம்பவில்லை.

நான் பார்த்த பின்புதான் தெரிந்து கொண்டேன். இதுகுறித்து சிவில் வழக்கு தொடரப்படும். இப்பிரச்னையில் நடவடிக்கை எடுப்பதாகவும், சைபர் கிரைம் பிரிவில் விசாரிக்கும்படி பரிந்துரை செய்தும் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார், என்றார்.

அமுதா தமிழ்நாடனின் வக்கீல் எட்விக் அளித்த பேட்டியி்ல, காப்புரிமை சட்டத்தை அவர்கள் மீறியுள்ளனர் என்பதுதான் எங்கள் குற்றச்சாட்டு. இது கிரிமினல் குற்றமாகும். இதற்கு 3 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை உண்டு. இதுதவிர சிவில் சட்டத்தின் கீழ் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறோம்.

இந்த புகார், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசின் சைபர் குற்றப்பிரிவுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். வேறு மொழியில் வெளியாகி இருக்கும் `எந்திரன் சினிமாவை எதிர்த்தும் வழக்கு தொடர இருக்கிறோம், என்று கூறியுள்ளார்.

நயன்தாராவின் நடிப்பு நச்சரிப்பு ! பிரபுதேவா கடுப்பு !!

நயன்தாராவிற்கு பிரபுதேவாவுடன் காதல் கல்யாணத்தை நோக்கி போய் கொண்டிருப்பதும், பிரபுதேவாவின் முதல் மனைவி இவர்கள் மீது கோர்ட்டு கேஸூ என அலைந்து கொண்டிருப்பதும் ஒரு பக்கம் என்றால், மற்றொரு பக்கம் நயன் நடித்து சமீபத்தில் ரிலீஸான பாஸ் என்கிற பாஸ்கரன் படம் படுசூப்பராக ஓடிக் கொண்டிருப்பதை பார்த்து தொடர்ந்து நடிக்க வேண்டுமென்ற ஆசை நயனுக்கு அதிகம் இருக்கிறதாம்.

ஆனால், பிரபுதேவாவோ அவரது ஆசைக்கு தொடர்ந்து தடை போட்டு வருகிறாராம். உன்னால ஃபீல்டுல நிலைத்து நிற்க முடியும்; காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும் என நயனின் தோழிகள் தொடர்ந்து தூபம் போட்டுவருகிறதால் நயனும் தன் நடிப்பாசையை பிரபு தேவாவிடம் சொல்லி ஓ.கே., வாங்க ஒற்றை காலில் நிற்கிறாராம்.

ஒரு பக்கம் மனைவி ரமலத்தின் கோர்ட்டு கேஸூ பிரச்னை, மற்றொரு பக்கம் நயனின் நடிப்பு நச்சரிப்பு என படாதபாடு படுகிறாராம், மாஸ்டர்..பாவம் தான்!!

ஈசன் - முன்னோட்டம்

சுப்பிரமணியபுரம் படத்துக்கு பின் டைரக்டர் சசிகுமார் இயக்கும் படம் "ஈசன். சமுத்திரக்கனி, வைபவ், தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன் நடிக்கிறார்கள். அபிநயா கதாநாயகியாக நடிக்கிறார்.

அபர்ணா என்ற புதுமுகம் மற்றொரு கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படம் குறித்து டைரக்டர் சசிகுமார் கூறுகையில், "ஈசன் என்பதற்கான காரணம் படம் பார்த்தால்தான் தெரியும். ஆக்கலும், அழித்தலும் செய்கிறவன் ஈசன். ஆனால் இதில் என்ன நடக்கிறது என்பது சஸ்பென்ஸ்.

பிழைப்பு தேடி வந்தவர்கள், தலைமுறை தலைமுறையாய் வாழ்பவர்கள் என சென்னை நகரத்தின் வாழ்வின் பிம்பங்கள்தான் இந்தக் கதை. நகர வாழ்க்கை மனிதர்களின் ஆயிரம் உணர்வுகள் இதில் இருக்கின்றன.

ஒவ்வொரு மனிதனுக்கும் தனிப்பட்ட வாழ்க்கை, அதை பின்னணியாக வைத்து படம் வந்திருக்கிறது. சமுத்திரக்கனி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன் மந்திரியாக நடிக்கிறார், என்றார். ஈசனுக்கு ‌ஜேம்ஸ் வசந்தன் இசையமைக்கிறார்.

உதயநிதியின் நண்பேன்டா!

சிவா மனசுல சக்தி டைரக்டர் ராஜேஷ் எம். இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகர் அவதாரம் எடுக்கவிருக்கும் படத்திற்கு ஒரு கல் ஒரு கண்ணாடி அல்லது நண்பேன்டா என இருவேறு டைட்டில்கள் பரிசீலனையில் உள்ளதாம்.

இதில் நண்பேன்‌டா என்ற தலைப்பு, உதயநிதியின் ரெட்ஜெயண்ட் மூவிஸ் பட நிறுவனம் வெளியீட்டில் ராஜேஷ் எம். இயக்கி சமீபத்தில் வெளியான பாஸ் என்கிற பாஸ்கரன் வெற்றிப்படத்தின் மூலம் பிரபலமான வார்த்தை என்பதால் அதையே டைட்டில் ஆக்கும் உத்தேசமும் இருக்குனருக்கு இருக்கிறதாம்.

உதயநிதி முதன்முதலாக நடிக்கப் போவது காமெடி சப்ஜெக்ட் என்பதும், நண்பேன்டா டைட்டிலும் அதற்கு பொருத்தமாக இருக்கும் என்பதும் ஒரு காரணமாம்! அடடே!

காவலன் சூட்டிங்கில் திக் திக்

காவலன் சூட்டிங்கை முடித்துக் கொண்டு மும்பை புறப்பட்டுச் சென்றார் நடிகை அசின். இலங்கையில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டதுடன், அதிபர் ராஜபக்ஷேவை சந்தித்ததான் நடிகை அசி‌னுக்கு எதிராக பொதுநல ஆர்வலர்கள் பலரும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

விஜய்யுடன் அவர் ஜோடி சேர்ந்திருக்கும் காவலன் பட சூட்டிங் நடக்கும் இடங்களுக்குச் சென்று கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் செய்து வந்தனர். தமிழகத்தில் வில்லங்கம் ஏற்பட்டதால் சூட்டிங்கை கேரளாவுக்கு மாற்றியது காவலன் டீம். அங்கேயும் கறுப்புக் கொடிதான்.

இதனால் எப்படா சூட்டிங் முடியும் என காத்திருந்த அசின், ஒருவழியாக காவலன் சூட்டிங்கை முடித்து விட்டார். தான் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்திலும் நடித்து முடித்த அசின், சூட்டிங் முடிந்‌த கையோடு மும்பை புறப்பட்டு சென்று விட்டார்.

காவலன் சூட்டிங் குறித்து அசின் அளித்துள்ள பேட்டியில், "வாழ்க்கையில் என்னால் மறக்கமுடியாத சூட்டிங்னா அது காவலன் சூட்டிங்காத்தான் இருக்கும். சந்தோஷம், பதட்டம், பயம் எல்லாமே கலந்த சூட்டிங் இதுதான். தினமும் திக் திக் என இருக்கும். ஒரு கட்டத்தில் சீக்கிரம் இந்த படப்பிடிப்பு முடிந்துவிட்டால் போதும் என்றாகிவிட்டது.

ஆனால் விஜய்யும் சித்திக்கும் என்னைப் பார்த்துக் கொண்ட விதம், எனக்கு ஆதரவளித்த விதம் மறக்க முடியாதது," என்று கூறியுள்ளார். அடுத்த வாரத்தில் காவலன் படத்துக்கான டப்பிங் பணிகள் நடைபெற உள்ளன. இதில் அசின் பங்கேற்று சொந்த குரலில் டப்பிங் பேசுவார் என் காவலன் யூனிட்டிங் இருந்து கசியும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒட்டுமொத்த யூனிட்டையே புலம்ப வைக்கும் ஓவர் பில்ட்அப் ஹீரோ

படத்தின் தலைப்பில் இருப்பது‌போல தனக்கும் எக்ஸ்ட்ராவாக ஒரு அறிவு இருப்பதாக நினைத்துக் கொண்டு அந்த ஹீரோ படுத்தும்பாட்டைத்தான் ஒட்டுமொத்த யூனிட்டும் சொல்லி புலம்பிக் கொண்டிருக்கிறது.

தொட்டதிற்கெல்லாம் அந்த வாரிசு நாயகன் மூக்கை நுழைப்பதுடன், குறை சொன்னதால் கடுப்பான முன்னணி ஆர்ட் டைரக்ரட் தோட்டா தரணியே ‌பேக்கப் சொல்லி விலகி விட்டார் படத்தில் இருந்து. முன்னணி நடிகர்கள் பலரது படங்களிலெல்லாம் பணியாற்றியிருக்கிறேன்.

பெரிய பெரிய நடிகர்களே என்னை ஒரு வார்த்தை கூட சொன்னதில்லை. பாராட்டைத் தவிர வேறெதையும் அவர் சொன்னதாக நினைவில்லை. வேறு எந்த நடிகரும், இயக்குநரும், தயாரிப்பாளரும் எனது பணியில் குறுக்கிட்டதுமில்லை, குறை சொன்னதுமில்லை.

அந்த அளவு தொழிலில் நேர்மையாகவே இருந்திருக்கிறேன். ஆனால் நேற்று வந்த ஒரு ஹீரோ எனக்கே ஆர்ட் டைரக்ஷன் சொல்லித் தருகிறார். அதைக் கேட்டுக் கொண்டிருக்கும் அளவுக்கு எனது பகுத்தறிவும் தன்மானமும் இடம்தரவில்லை" என்று கூறி விலகிவிட்டார் தோட்டா.
Related Posts with Thumbnails