![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiesN0cIhnTjXz8IY78P0jG8mfSgG5Tm7a-kbmRJh1KCLL-G72UVgHMuW1RBrodB95mUppuWw6ujx60mX_Qo2xECC9kwETWiM5A68xuvBVhmpYY4-KtLEsDjDjwQE4_4c85W-OpbA5qRlbh/s400/7aff0cc7-22c7-48ef-a3aa-7d56f27db7b8_S_secvpf.gif)
ஷங்கர் தற்போது இந்தியில் ஹிட்டான “3 இடியட்ஸ்” படத்தை தமிழில் ரீமேக் செய்யும் வேலையில் உள்ளார். விஜய் நாயகனாக நடிக்கிறார்.
இந்த படம் முடிந்ததும் ரஜினி, கமல் நடிக்கும் படத்தை துவங்குவார் என்றும் செய்திகள் பரவின.
இதுபற்றி ஐதராபாத்தில் கமலிடம் நிருபர்கள் நேற்று பேட்டி கண்டனர். நீங்களும், ரஜினியும் சேர்ந்து நடிக்க ஷங்கர் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்கும் என்று கேட்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்து கமல் கூறியதாவது:-
ஷங்கர் இயக்கும் ரூ. 500 கோடி பட்ஜெட் படமொன்றில் ரஜினியும், நானும் அதில் நடிக்கிறோம் என்றும் நீங்கள் கூறுகிறீர்கள். அது பற்றி எனக்கு எந்த தகவலும் வரவில்லை. ஷங்கரிடம் இருந்து அதுபோன்று ஒரு படத்தில் நடிக்க அழைப்பும் வரவில்லை என்றார்.
மேலும் அவர் கூறியதாவது:-
ஐதராபாத்தில் பிக்கி மீடியா மாநாட்டை டிசம்பர் 1, 2 தேதிகளில் நடத்த உள்ளோம். 2 ஆயிரம் பிரதிநிதிகள் அதில் பங்கேற்கின்றனர்.
திருட்டு சி.டி.க்களால் திரைப்படத்துறை நலிந்துள்ளது. அவற்றை சினிமா துறையினரோ, அரசியல்வாதிகளோ தடுக்க முடியாது. மக்களால்தான் தடுக்க முடியும்.
திருட்டு சி.டி.யில் படம் பார்க்கமாட்டோம் என்று அவர்கள் உறுதி எடுத்தால் தானாக சரியாகிவிடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
0 comments:
Post a Comment