பிரமாண்ட டைரக்டரின் அவசர முடிவு!

பிரமாண்ட டைரக்டர் என்ற பெயரெடுத்த அந்த இயக்குனர், இந்தியில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் ஆன 3 முட்டாள்கள் படத்தை தமிழில் ரீ-மேக் செய்ய திட்டமிட்டதும், இதற்கான நடிகர்கள் - நடிகைகள் தேர்வு நடைபெற்றதும் தெரிந்த சங்கதிதான்.

என்ன காரணத்தினாலோ அந்த படத்தை தயாரிக்க முன்வந்த ஜெமினி நிறுவனம் தயாரிப்பு முயற்சியை சற்று தள்ளிப் போட்டிருக்கிறதாம்.

அதுவரை இளைய தளபதியின் தேதிகளை வீணடிக்க விரும்பாத பிரமாண்டம், அவரை வைத்து மசாலா படம் ஒன்றை இயக்க அவசர முடிவு எடுத்திருக்கிறாராம்.

இந்த மசாலா படத்தில் ஏற்கனவே நடிக்கவிருந்தவர் ஜீவமான இளம் நடிகர்தானாம். இந்த தகவல் அறிந்த ஜீவ நடிகர் அதிர்ச்சியடைந்து, விஜயத்தை நேரில் சென்று பார்த்து பேசியிருக்கிறார்.

அவர்கள் என்ன பேசினார்கள் என்பது தெரியவில்லை. ஓருவேளை படத்தில் 2 பேரும் சேர்ந்து நடிக்கலாம் என்று கோடம்பாக்கத்தில் பேசிக் கொள்கிறார்கள்.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails