Wednesday, August 12, 2009

வண்ணத்துப்பூச்சி - விமர்சனம்

நகர பரபரப்பில் தொழிலிலேயே மூழ்கி கிடக்கும் பெற்றோருக்கு மகளாக வளர்கிறார் திவ்யாபாரதி. தாய்-தந்தை பாசம் கிடைக்காமல் ஏங்குகிறாள். அவளை விடுமுறைக்கு தாத்தா பாலசிங்கிடம் வசிக்க கிராமத்துக்கு அனுப்புகின்றனர். அங்குள்ள சூழ்நிலைகள் பிடித்துப்போகிறது. பாசம் பொழியும் தாத்தா பிரியமாக பழகும் கிராம மக்கள், தோழிகள் எல்லோரும் அவளுக்குள் ஆழமாய் பதிகிறார்கள்.

திவ்யாபாரதியை வீட்டுக்கு அழைத்து செல்ல தந்தை-தாய் வருகின்றனர். ஆனால் அவர்களுடன் செல்ல மறுக்கிறாள். பெற்றோரை பிரிந்து கிராமத்தில் தாத்தாவுடன் வாழ அனுமதிக்கக் கோரி கோர்ட்டுக்கும் செல்கிறாள்.

இந்த விச்சித்திர வழக்கை நீதிபதி ரேவதி விசாரிக்கிறார். அவர் என்ன தீர்ப்பு வழங்கினார் என்பது கிளைமாக்ஸ்...


குழந்தைகளை மறந்து எந்திரத்தனமாக வாழும் நகர்புற பெற்றோர்களையும் பிள்ளைகளின் ஆசாபாசங்களையும் உயிரோட்டமான காட்சிகளுடன் படமாக்கியுள்ளார் இயக்குனர் அழகப்பன்.சி.

பட்டணத்து பெற்றோராக வரும் சித்தார்த், மாதவி கம்ப்யூட்டர் யுக ஹைடெக் வாழ்க்கையில் கச்சிதமாக பொருந்துகின்றனர். திவ்யா பாரதியாக வரும் ஸ்ரீலட்சுமியும், பாலாசிங்கும் பேத்தி, தாத்தாவாக வாழ்ந்துள்ளனர்.

உடல் நலக்குறைவு ஏற்பட்ட பாலாசிங்குக்கு கசாயம் காயத்து கொடுப்பது... கூலி வேலை செய்து தாத்தாவுக்கு சட்டை வாங்கி கொடுப்பது... கிராமத்தினருக்கு கடன் கொடுத்து சுரண்டும் ஆசாமிக்கு அறிவுரை சொல்லி திருத்துவது என அசத்தியுள்ளார்.

அரிதாரம் பூசாத கிராமத்து மனிதர்கள் அழுத்தமான கதையோட்டம் பலம். நாடகத்தன காட்சிகளும் நீளமான வசனங்களும் வேகத்தடை போடுகின்றன.

ரேஹான் இசையில் பாடல்கள் இனிமை.

No comments:

Post a Comment

மன்மதன் அம்புக்காக கமல்ஹாசன் எழுதிய பாடல்

டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன், த்ரிஷா, மாதவன், சங்கீதா நடிக்கும் படம் மன்மதன் அம்பு. உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் உருவாக...