மருமகளை அடிப்பது 'கொடூரம்' அல்ல

மருமகளை அடிப்பதோ அல்லது தனது மகன் விவாகரத்து செய்துவிடுவார் என்று மிரட்டல் விடுப்பதையோ 'கொடூரமான' செயலாக கருத முடியாது என்றும், இதற்காக கணவரையோ அவரது உறவினர்களையோ தண்டிக்க முடியாது என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த இந்திய தொழிலதிபர் விகாஸ் சர்மா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் மேற்கண்ட தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், மருமகள் அணிவதற்கு பயன்படுத்தப்பட்ட உடைகளை வழங்குவதும் குற்றமாகக் கருத முடியாதும் என்றும் கூறப்பட்டுள்ளது.

எனினும், தம்பதியினருக்கு திருமணத்தின்போது வழங்கப்பட்ட பரிசுப் பொருட்களை மாமியார் எடுத்துக்கொள்வது தண்டனைக்குரியது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails