விப்ரோ நிறுவனத்தின் சூழல் பாதுகாப்பு கம்ப்யூட்டர்

தகவல் தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோ லிமிடெட் தற்போது மறு சுழற்சி செய்யும் வகையில் நச்சுத் தன்மை அற்ற கம்ப்யூட்டர்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இத்தகைய கம்ப்யூட்டர்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். இன்டல் டியூயல் கோர் தயாரிப்புகள் இதில் இடம்பெறும்.

இதன் மூலம் கார்சினோஜெனிக் எனப்படும் நச்சுத்தன்மை அற்ற கம்ப்யூட்டர்கள் சந்தைக்கு வந்துள்ளது. இவற்றை மறு சுழற்சி செய்யலாம்.

இதனால் சுற்றுச் சூழல் பாதுகாக்கப்படும். இந்த கம்ப்யூட்டர்கள் 2 ஆண்டு ஆராய்ச்சிக்குப் பிறகு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் தலைமை செயல் தலைவர் அனுராக் பெஹர் தெரிவித்தார்

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails