ஆரோக்​கிய சமை​யல்!

* காய்​கறி சாலட் செய்​யும்​போது ஒரு கைப்​பிடி பாசிப் பருப்பை அரை​மணி நேரம் ஊற வைத்து சேர்த்​துக்​கொள்​ளுங்​கள் சத்​துக்​கும் சத்து;​ சுவைக்​கும் சுவை!​

* பஜ்ஜி மாவில் நாலைந்து பூண்டு பற்​களை அரைத்​தும்,​​ ஒரு ஸ்பூன் சீர​கத்​தைப் பொடித்​தும் போட்டு பஜ்ஜி செய்​தால்,​​ பஜ்ஜி நல்ல சுவை​யு​ட​னும் இருக்​கும்.​ கடலை மாவி​னால் வரும் வாயுத் தொல்லைகளையும் ஏற்​ப​டா​மல் தடுக்​கும்.​

* மோர்க் குழம்பு செய்ய சமான்​களை வறுத்​து​விட்டு,​​ தேங்​காய்க்​குப் பதி​லாக பச்​சை​யா​கவே துளி கச​க​சாவை போட்டு அரைத்து மோர்க்​கு​ழம்பு செய்து பாருங்​கள்.​ சுவை​யாக இருக்​கும்.​ தேங்​காய் போடா​த​தால் கொலஸ்ட்​ரால் குறை​யும்.​ கச​கசா போடு​வ​தால் வயிற்​றுக்கு குளுமை.​

* உளுந்து -​ அரை கப்,​​ அரிசி -​ கால் கப்,​​ சிறிது வெந்​த​யம் இவை​களை ஊற வைத்து நைசாக அரைத்து 4 கப் கேழ்​வ​ரகு மாவு​டன் கலந்து மறு​நாள் காலை தோசை வார்க்​க​வும்.​ சத்​தான,​​ சுவை​யான தோசை தயார்.​

* துவ​ரம் பருப்​புத் துவை​யல் தயார் செய்​யும்​போது,​​ சிறிது கொள்​ளினை​யும் வறுத்​துச் சேர்த்து அரைத்​தால் சுவை​யும் மண​மும் கூடு​த​லாக இருக்​கும்.​ உடம்​பிற்​கும் நல்​லது.​

* சாம்​பார்,​​ கீரை,​​ புளிப்பு கூட்டு போன்​ற​வற்​றைக் கொதித்து இறக்​கும் சம​யம் துளி வெந்​த​யப் பொடி தூவி இறக்​கி​னால் நல்ல வாச​னை​யாக இருக்​கும்.​ உட​லுக்​கும் ஆரோக்​கி​யம்.​

* எந்த வகை கீரை​யா​னா​லும் அதைச் சமைக்​கும்​போது அள​வுக்கு மீறி காரம்,​​ உப்பு,​​ புளி இவற்றைச் சேர்த்து சமைத்​தால்,​கீரை​யி​லுள்ள சத்​துக்​கள் முழு​மை​யாக கிடைக்​காது.​

* வெந்​த​யத்​தைக் கறுப்​பாக வறுத்​துத் தூள் செய்து காப்​பிப் பொடி​யில் கலந்து காப்​பிப் போட்​டுக் குடித்​தால் சர்க்​க​ரை வியா​தி​கா​ரர்​க​ளுக்கு நல்​லது.​

* இரண்டு மிளகு,​​ அரை ஸ்பூன் தனியா -​ தூள் செய்து தேநீர் கொதித்து வரும்​போது தூவி இறக்கி வடி​கட்டி சர்க்​கரை கலந்து சாப்​பிட உடம்​புக்​கொரு ஊட்​டச்​சத்து கிடைத்து களைப்பு நீங்​கும்.​

* மழை மற்​றும் குளிர் காலங்​க​ளில் தயிர் உறை​யாது.​ உறை​யூற்​றும்​போது பாலைச் சற்று சூடாக்கி ஊற்றி ஒரு பாத்​தி​ரத்​தை​யும் கவிழ்த்து மூடி​விட்​டால் விரை​வில் உறைந்​து​வி​டும்.​

* மிக்​ஸி​யில் மாவு அரைக்​கும்​போது அது எளி​தில் சூடா​கி​வி​டும்.​ சூட்​டைத் தணிக்க ​ மாவில் ஐஸ் வாட்​டர் தெளித்து அரைக்​க​லாம்.​​

* ரத்​தக்​கறை படிந்த துணி​களை உப்​புக் கலந்த தண்​ணீ​ரில் சிறிது நேரம் ​ ஊற வைத்து துவைத்​தால் கறை​கள் நீங்​கி​வி​டும்.​

* குழந்​தை​க​ளின் நகங்​க​ளில் அழுக்​குச் சேர விடக்​கூ​டாது.​ நகத்தை வெட்​டி​விட வேண்​டும்.​ அப்​படி வெட்​டு​வ​தற்கு முன்பு குழந்​தை​க​ளின் விரல்​க​ளைத் தண்​ணீர் முக்​கித் துடைத்​து​விட்டு,​​ அதன் மேல் பவு​ட​ரைப் பூசி​னால் ​ எது​வரை நகத்தை வெட்​ட​லாம் என்​ப​தைத் தெளி​வா​கக் காட்​டும்.​

* கார​ண​மின்றி திடீ​ரென வயிறு வலித்​தால்,​​ இரண்டு ஸ்பூன் சர்க்​க​ரையை வாயில் போட்​டுக் கொண்டு தண்​ணீர் குடித்​தால் ​ வலி பறந்​து​வி​டும்.​

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails