ஆபத்தான விமான நிலையங்கள்

மங்களூரு விமான விபத்துக்கு அங்கு அமைந் துள்ள விமான நிலையத் தின் அமைப்புதான் காரணம் என்று கூறப்பட்டாலும், அதைப் போல சிக்கலான அமைப்புள்ள விமான நிலையங்கள் இந்தியாவில் பல உள்ளன.மங்களூரு பாஜ்பே விமான நிலையம், "டேபிள் டாப்' விமான நிலையம் என்று அழைக் கப்படுகிறது.

ஓடுபாதை தரையிலிருந்து உயரமாக, அல்லது மலைப்பாங்கான பகுதியில் அமைந்திருந்தால் இவ்விதம் அழைக்கப்படும். இதன் பழைய ஓடுபாதை, 6,000 அடி நீளமும், புதிய ஓடுபாதை, 8,300 அடி நீளமும் கொண் டவை.

மங்களூரு போல், காஷ் மீரின் லே மற்றும் ஸ்ரீ நகர், கேரளாவின் கோழிக் கோடு, பக்தோக்ரா, அகர் தலா, கவுகாத்தி, சில்சர், லெங்புய், போர்ட் பிளேர், குலு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் அமைந் துள்ள சில விமான நிலையங்கள், சிக்கலான அமைப்பில் தான் அமைந் துள்ளன.

விமான நிலையம் மேட்டுப்பாங்கான பகுதியில் அமைந்திருந்தால் அதில் ஒரே திசையில் மட் டும் விமானத்தை இறக்க வேண்டி வரும்.அதே போல், பிற நாடுகளின் எல்லைப் பகுதிகளில் அமைந்திருந்தால், அந்நாடுகளின் மீது பறப் பது, எப்போதுமே பிரச்னைக்குரியதாகத்தான் இருக்கும்.

இந்த இரண்டுக்கும் உதாரணமாக அந்தமானில் உள்ள போர்ட் பிளேர் விமான நிலையம் உள்ளது. இங்கு ஒரே திசையில் மட்டும் தான் விமானத்தை இறக்க முடியும். காரணம் அதைச் சுற்றி அமைந்துள்ள மலைகள்.

அதேபோல் கேரளா, கோழிக்கோட்டிலுள்ள விமான நிலையத்தைச் சுற்றிலும் மலைகள் அமைந்திருப்பதால், வானிலை சரியாக இல் லாத காலங்களில் அங்கு விமானத்தை இயக்குவது, சிக்கலான விஷயம் தான். அதையும் விட, ஓடுபாதையின் விளிம்பில், ஒரு பெரிய பள்ளத்தாக்கும் இருக்கிறது.

இதுபோன்ற சிக்கல் நிறைந்த விமான நிலையங்கள் குறித்து அனுபவம் வாய்ந்த விமானிகள் கூறியதாவது:ஓடுபாதைகளைப் பொறுத்தவரை பாதுகாப்பானது அல்லது பாதுகாப்பில்லாதது என்று கூற இயலாது. ஆனால் அதை, தெளிவானது அல்லது சிக்கலானது என்று கூறலாம். 

பாதுகாப்பும், பாதுகாப் பின்மையும், பறப்பதிலும், ஓடுபாதையின் தரத்திலும் தான் இருக்கிறது.மலைப்பாங்கான விமான நிலையங்களில் மட்டுமே விபத்துக்கள் நிகழ்வது என்பது தவறு. சாதாரணமான பிற நிலையங்களிலும் விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன.அப்படிப் பார்த்தால், அனைத்து ராணுவ விமான நிலையங்களுமே சிக்கல் வாய்ந்தவைதான். 

பெரும் பான்மையும் அவற்றின் ஓடுபாதை குறுகிய தூரம் கொண்டவையாகவும், சிக்கலான நில அமைப்பில் அமைந்தவையாகவும் தான் இருக்கும்.ஒரு காலத்தில் சிக்கல் வாய்ந்ததாகக் கருதப்பட்ட கொச்சி விமான நிலையம், இன்று அவ்வாறு கருதப்படுவதில்லை. 

அகர்தலா விமான நிலையத்தில் இருந்து புறப்படும் விமானம், வங்கதேசத்தின் மீதுதான் பறந்தாக வேண்டும் என்ற சிக்கலான நிலை, இன்னும் நீடிக்கிறது.பக்தோக்ரா விமான நிலையத்தின் ஓடுபாதை, ஒன்பதாயிரம் அடி நீளம் கொண்டது. 

அது, நேபாளம் மற்றும் வங்கதேச எல்லைகளுக்கு அருகில் அமைந்துள்ளது. அங்கு மிகக் கவனமாகத் தான் தரையிறக்க வேண் டும்.நாட்டின் மிக உயர்ந்த விமான நிலையம், காஷ்மீரின், லே. அது கடல் மட் டத்திலிருந்து 10 ஆயிரத்து 682 அடி உயரத்தில் இருக்கிறது.

அங்குள்ள சிக்கல், விமானிகளுக்கு மட்டுமல்ல, விமானத்துக்கும் சேர்த்தே உள்ளது. அவ் வளவு உயரத்தில் விமானத்தை இறக்கிப் புறப்படுவது, சாதாரண காரியமல்ல.லே ஓடுபாதையில் விமானி ஏதாவது தவறு செய்து விட்டால், அவர் இதர விமானிகளுக்கெல் லாம் எடுத்துக்காட்டாகி விடுவார். 

அதாவது அங்கு கரணம் தப்பினால், மரணம் என்ற நிலை தான்.பொதுவாக ஓடுபாதையைக் குற்றம் சொல்ல முடியாது. அதே நேரம், விமானி விமானத்தை இரண்டு முறை மேலே எடுக்கவோ, கீழே இறக்கவோ இயலாது. தனியார் விமான நிறுவனங்களின் கோரிக்கைகளை ஏற்று, பாதுகாப்பு விதிகளை அரசு,நீர்த்துப் போகச் செய்து விட்டது. 

2005 வரை, ஒருவிமானி, வர்த்தக விமானத்தை இயக்குவதற்கான உரிமம் பெறுவதற்கு, அவர், 250 மணி நேரம் பறந்திருக்க வேண்டும். ஆனால், இப்போது அது, 200 மணியாகக் குறைக்கப்பட்டு விட்டது.

இந்திய விமானிகள், வர்த்தக விமான உரிமத்தைப் பெறுவதற்கு முன்பு, பயணிகள் விமான இயக்க அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இந்த விதி வேறு எந்த நாட்டிலும் கிடையாது.ராணுவ விமானத்தை விட பயணிகள் விமானம் சிக்கலான அமைப்புடையது. 

ராணுவ விமானத்தை இயக்கிய வெளிநாட்டு விமானிகளில் பலர், இங்கு வந்து பயணிகள் விமானத்தை இயக்குகின்றனர்.இவ்வாறு விமானிகள் தெரிவித்தனர்.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails