Thursday, July 15, 2010

விருதகிரியில் விஜயகாந்தின் அரசியல் பஞ்ச்


நடிகரும் அரசியல் கட்சி தலைவருமான விஜயகாந்த் டைரக்டர் அவதாரம் எடுத்திருக்கும் படம் விருதகிரி. இந்த படத்தின் நாயகனும் அவர்தான்.

கட்சிப்பணி, இயக்குனர் பணி, நடிப்புப் பணி என தினம் தினம் பரபரப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் அவர், விருதகிரியில் தனது ரசிகர்கள் மற்றும் கட்சிக்காரர்களுக்கு பிடிக்கும் வகையிலான பஞ்ச் வசனங்களை வைத்திருக்கிறார்.

'அணியா நின்னு ஆளுறதை விட, தனியா நின்னு வாழுறதுதாண்டா பெருமை!' என்பது உள்ளிட்ட எக்கச்சக்க பஞ்சகளை படத்தில் வைத்திருக்கும் விஜயகாந்த், பொது மக்கள், மாணவர்கள், திருநங்கைகள் என இவர்களுக்குள் பலதரப்பட்ட பிரச்னைகளை கையில் எடுத்திருக்கிறாராம்.

மொத்தத்தில் இது மக்களுக்கான படம் என்று விஜயகாந்த் கூறியிருக்கிறார்.

No comments:

Post a Comment

மன்மதன் அம்புக்காக கமல்ஹாசன் எழுதிய பாடல்

டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன், த்ரிஷா, மாதவன், சங்கீதா நடிக்கும் படம் மன்மதன் அம்பு. உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் உருவாக...