Thursday, July 2, 2009

Sanjay Dutt jumps from speeding a train blindfolded

Sanjay dutt, our desi Sylvester Stallone, not only jumped off a speeding train on the sets of Luck but he did it blindfolded, with his hands tied behind his back and without any cables or dummies.

According to director Soham Shah, Sanju insisted on doing the scene without any safety measures. Says Sanjay, “I hadn’t shot such a hard-core sequence in a long time, so when the opportunity arose, I decided to do it myself.” Good thing it was a speeding train and not a 10-storey building.

பிரபு தேவா தேர்ந்தெடுத்த அடுத்த பிரபு தேவா

விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகி வந்த நடன நிகழ்ச்சி "உங்களில் யார் அடுத்த பிரபுதேவா'.

கடந்த பல வாரங்களாக ஒளிபரப்பாகி வந்த இந்த நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதிலிருந்தும் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்று நடனமாடி வந்தனர்.

பல விதமான சுற்றுகளைத் தாண்டி இறுதி போட்டிக்கு பிரேம் கோபால், ஷெரிஃப், நந்தா, மனோஜ்குமார் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் பங்கு கொண்டு நடனமாடிய இறுதி சுற்றுப் போட்டி சென்னை ஒய்.எம்.சி.ஏ. வளாகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் நடன இயக்குநர் பிரபுதேவா கலந்து கொண்டு போட்டியாளர்களில் முதல் நபரை தேர்ந்தெடுத்தார்.

விஜய் டி.வி.யில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட இந்த இறுதி போட்டியில் நான்கு போட்டியாளர்களும் இரண்டு கட்டமாக போட்டியிட்டனர். முதல் சுற்றில் மேற்கத்திய நடனமும், இரண்டாம் சுற்றில் விருப்பப்பட்ட நடனத்தையும் ஆடினர். ஒவ்வொருவரின் நடனத்தையும் கவனித்த பிரபுதேவா தன்னுடைய கருத்துகளை தெரிவித்து இறுதியில் ஷெரிஃப் வெற்றி பெற்றதாக அறிவித்தார்.

ஷெரிஃப்பிற்கு ரூ.10 லட்சமும், மற்ற மூன்று போட்டியாளர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் பரிசாக வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியின் தொகுப்பு (ஜூலை -3) வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

ஆரம்பமே சரியில்லையே.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு தவிர்க்க முடியாதது மட்டும் அல்ல, அவசியமும்கூட என்பதைப் பொருளாதாரம் படித்தவர்கள், நாட்டு நலனில் அக்கறை உள்ளவர்கள் ஒப்புக்கொள்வார்கள். ஆனால் அதற்கான முடிவை அரசு எடுத்த விதமும், நேரமும் வியப்பை அளிக்கின்றன.

பெட்ரோல் விலையை லிட்டருக்கு 4 ரூபாயும், டீசல் விலையை லிட்டருக்கு 2 ரூபாயும் உயர்த்தும் முடிவை பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தேவ்ரா, பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்த பிறகு தில்லியில் புதன்கிழமை அறிவிக்கிறார்; புதன்கிழமை நள்ளிரவு முதல் இது அமலுக்கு வந்தது. ஆனால் மிகவும் முக்கியமான இந்த முடிவை எடுப்பதற்கு முன்னால் மத்திய அமைச்சரவையில் இதைப்பற்றிப் பேசவே இல்லை; அதைவிட முக்கியம் தோழமைக் கட்சிகளும் இடம் பெற்றுள்ள அரசியல் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவிலும் இதை விவாதிக்கவே இல்லை.

இவ்வளவு அவசர அவசரமாக விலையை அறிவிக்கும் அளவுக்கு கச்சா பெட்ரோலின் விலை மிகக் கடுமையாக கடந்த திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் உயர்ந்துவிடவில்லை. அப்படியிருக்க இந்த முடிவை அரசு எடுத்ததற்கு முழுக்க முழுக்க அரசியல்தான் காரணம் என்று அறியும்போது வேதனையாக இருக்கிறது.

மகாராஷ்டிர மாநில சட்டப் பேரவைக்கு வரும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பொதுத் தேர்தல் வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. எனவே அந்தச் சமயம் விலையை உயர்த்தினால் அது அந்த மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் வெற்றி வாய்ப்பைப் பாதிக்கும் என்பதால், முன்கூட்டியே விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவரான முரளி தேவ்ரா அதனால்தான் தனி அக்கறை எடுத்துப் பிரதமரைத் தனியாகச் சந்தித்தார் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இவையெல்லாம் வெறும் ஊகங்கள்தான் என்று ஒதுக்கிவிட முடியாது. பெட்ரோல், டீசல் விலை உயர்வும், குறைப்பும் தேர்தலை ஒட்டி பலமுறை மேற்கொள்ளப்பட்டதை நாம் நேரடியாகவே பார்த்து வருகிறோம்.

இந்த விலை உயர்வு இல்லாமலேயே தனியார் துறையில் உள்ள "ரிலையன்ஸ்', "எஸ்ஸôர்' போன்ற தொழில் குழுமங்கள் கோடிக்கணக்கில் லாபம் ஈட்டி வருகின்றன. மத்திய அரசும் பெட்ரோலிய சுத்திகரிப்பு நிறுவனங்களிடமிருந்து உற்பத்தி வரியாகவே கோடிக்கணக்கான ரூபாய்களைப் பெறுகிறது. எனவே அரசுத்துறை பெட்ரோலிய நிறுவனங்களின் நஷ்டம் மட்டுமே காரணமாகக் காட்டப்படுவது கண்துடைப்புதான்.

அரிய நிதி ஆதாரமான அன்னியச் செலாவணி இப்படி கோடிக்கணக்கில் செலவாவது குறித்து மத்திய அரசுக்கு உண்மையிலேயே கவலை ஏற்பட்டிருந்தால் கார், ஸ்கூட்டர், பைக் ஆலைகளுக்கு இந்த அளவுக்கு உரிமங்களும், சலுகைகளும் அளித்திருக்கவே கூடாது. நம்முடைய பெட்ரோலியத் தேவையில் 70 சதவீதத்தை இறக்குமதியைக் கொண்டுதான் பூர்த்தி செய்கிறோம் என்கிறபோது சாலைகளில் ஓட்டக்கூட இடம் இல்லாத அளவுக்கு கார், ஸ்கூட்டர், பைக் தயாரிப்புகளைப் பொறுப்பில்லாமல் ஊக்குவிப்பது ஏன்?

கடுமையான மின்சார வெட்டு, உற்பத்தி இழப்பு, வேலை இழப்பு, வருவாய்க் குறைவு என்று நம் நாட்டின் 75 சதவீதத்துக்கும் மேற்பட்ட மக்கள் தவித்துக் கொண்டிருக்கையில் அரசு நிறுவனங்களின் நஷ்டத்தைக் குறைப்பதற்கு மட்டுமே இந்த அளவுக்கு அக்கறை காட்டியிருப்பது வருத்தத்தையே தருகிறது.

காங்கிரஸ் கட்சிக்கு மக்களவையில் அறுதிப் பெரும்பான்மைக்கான வலு கிடைத்துவிட்டது என்றதும் காங்கிரஸ்காரர்களின் பேச்சும் தோரணையும் மாறிவிட்டது என்று அதன் நெருங்கிய தோழமைக்கட்சியின் தலைவர் மு. கருணாநிதியேகூட தில்லியில் உணர்ந்தார்.

பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியதற்கும், அதற்கு முன் தங்களிடம் ஆலோசனை கலக்காமல்விட்டதற்கும் நாடாளுமன்ற திமுக குழுத்தலைவர் டி.ஆர்.பாலு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார். அதற்கும் காங்கிரஸ் வட்டாரம் எகத்தாளமான பதிலையே விடையாகத் தந்திருக்கிறது. ""எந்த மாநில அரசாவது விலை உயர்வு கடுமை என்று கருதினால் பெட்ரோல், டீசல் மீதான விற்பனை வரியைக் குறைத்துக் கொள்ளட்டும்'' என்பதே அது.

பணவீக்க விகிதம் சரிவு என்று மாய்மாலமான ஒரு சொற்றொடரை அடிக்கடி பயன்படுத்துகின்றனர் நம்முடைய ஆட்சியாளர்கள். மொத்தவிலை குறியீட்டெண் அடிப்படையில் இது கணக்கிடப்படுகிறது. இதில் உணவுப்பண்டங்கள், உலோகம், அலோகம், மரச்சாமான்கள் என்று சகலவிதமான அசையும், அசையாப் பொருள்கள் சேர்க்கப்படுகின்றன. அந்த அடிப்படையில் விலைவாசி உயர்வு பூஜ்யமாகி இப்போது மைனஸ் என்ற அளவுக்குப் போய்விட்டதாம். அந்த துணிச்சலில்தான் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஏற்படும் பணவீக்க விகித உயர்வும் நல்லது என்ற முடிவுக்கு வந்திருப்பார்கள் என்று தோன்றுகிறது.

உண்மையில், நடுத்தரக் குடும்பத்து குடும்பத் தலைவியிடம் கேட்டுப்பார்த்தால் தெரியும் விலைவாசியின் லட்சணம் என்ன என்று. ஆரம்பமே சரியில்லை என்று அரசை எச்சரிக்கக் கடமைப்பட்டிருக்கிறோம். அதிகாரம் ஏற்படுத்தும் அகங்காரம் ஆபத்தில்தான் முடியும் என்கிறது சரித்திரம்

Computer-related Words in Tamil

The following is a short collection of computer-related words in Tamil. The tamil words are in romanized/transliterated format. (hopefully next year when we all have a font encoding standard, the tamil words will be in tamil!) The following transliteration scheme (Adami/Madurai) is used:

vowels: a, A/aa, i, I/ee, u, U/oo, e, E, ai, o, O, au/ow, q/ah
consonants: k, ng, c/s, NY/ny, t/d, N, th/dh, nN/n^, p/b, m, y, r, l, v, z/zh, L, R, n
grantha: h, j, S, sh, sri

addressmukavari, vilAcam
borderkaraikaL
bracketsadaippuk kuRikaL
brochurekuRippu
browserulAvi
centermaiyam, maththi, nadu
changemaRRal, maRRu
characterezhuththu
clickcodukku/codukkinAl
clipboardmaRaip palakai
client, customervAdikkaiyALar
colourvaNNam, niRam
commandkattaLai
comments, explanatory notesviLakkak kuRippu
compressadakkiamukku
computerkaNani, kaNippoRi
computer engineer/expertkaNip poriyALar
computer sciencekaNani iyal
contactthodarpu
copypirathi, nakal
createuruvAkku
cropcethukku
cursorEval
cyberspacekaNiniyakam
decompressvirivAkku
desktop computermEcaik kaNani
desktop publicationmEcaip piracuram
dictionaryakarAthi
directorykattu, kattai
distributeviniyOki, viniyOkappaduththu
documentAvaNam
downloadizhuththuvai
dragizhu
e-mailmin aNYcal
editorthokuppar
educational softwareaRiviyal menporuL
eraseazhi
escapeveLiyEru
electronicminnanu iyal, miniyal
featuresamcangkaL
fileOlai, kOvai, kOppai
findthEdu, kaNdupidi
fontvari vadivam
floppymen thattu
fontvarivadivu, ezhuththu vadivam
framesvElikaL, cattap padalkaL
gamesviLaiyAttukkkaL
graphicsvaraivukaL
hard drive/discvan thattu
hardwarevan poruL, iyali
helputhavi, thuNai
home pageillap pakkam
informationthakaval
information technologythakaval kaLam
installERRu (ERRuvathu), nAttu (nAttuvathu)
installationERRamaippu
internetiNaiyam, tholai valai thodarpu
italicscAinntha
keyvicai
keyboardvicaip palakai
laptop computermadik kaNini
laser disclEcar thakadu
layoutida othukkIdu, amaippu
linevari
listattavaNai pattiyal
magnetic diskkAnthath thakadu
memorykoLLadakkam
memory bankNYApaka adukku
monitorthirai
mousekaikAtti, eli
networkvalaippinnal, paNippinnal
newsgroupceithik kuzhu
newsceithi
operating systemthaLam, ceyalam
optical scanneroLi varudi
pagepakkam
paragraphpakathi, panthi/paththi
peripheralcakalap porutkaL, viLimbu
popularisepirapalappaduththal
powercakthi, valu
pointerkuriyeedu
pressamukku, thattu
printaccadi
publicationsveLiyiidukaL
publishveLiyiidu, piracuri
publisherpathippakaththAr
readythayAr
releaseveLiyiidu
savecEmikka
sectionpakuthi
servervazhangi, parimARi
sharewarepakir menporuL
softwaremenporuL, ceyali
sortvaricai cei/ ozhungu cei
source codeAthAra ANaikaL
sound cardcaththakkirami / olikkirami
sitethaLam
tableattavaNai
telnetkaNinith thotti
threadn^oolizhaikaL, n^oolizhai
technologythozhil n^utpam <
underlineadiyil kOdiyida
updatepuduppiththal
userupayOkippavar, payanpaduththuvOr
WWW (world-wide-web)ulakaLAviya valai, ulaka valai maiyam, vaiyaka virivu valai (vvv)
webiNaiyam
web pageiNaiyap pakkam
web siteiNaiyath thaLam
word processorcol ceyalAkki

ஜூலை 6 முதல் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். கவுன்சலிங்: , 2000 மாணவர்களுக்கு அழைப்பு

அரசு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்களில் மாணவர்களைச் சேர்க்க சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் வரும் 6-ம் தேதி முதல் கவுன்சலிங் தொடங்குகிறது.

இந்த ஆண்டு (2009-10) எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர மொத்தம் 13,937 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் ரேங்க் பட்டியல் அடிப்படையில் மொத்தம் 2,000 மாணவர்களுக்கு முதல் கட்ட கவுன்சலிங்கில் கலந்து கொள்ள அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. சுகாதாரத் துறையின் இணையதளத்தில் கவுன்சலிங் அட்டவணையும் மாணவர்களுக்கான கவுன்சலிங் அறிவுரையும் வெளியிடப்பட்டுள்ளது.

சிறப்புப் பிரிவினருக்கு...: கவுன்சலிங் முதல் நாளான ஜூலை 6-ம் தேதி உடல் ஊனமுற்றோர், விளையாட்டில் சிறந்து விளங்குவோர் உள்ளிட்ட 53 சிறப்புப் பிரிவு இடங்களுக்கு கவுன்சலிங் நடைபெறும். இந்த சிறப்புப் பிரிவு இடங்களுக்கு மொத்தம் 250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். கவுன்சலிங்குக்கு பொதுப் பிரிவு, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் வரும்போது எம்.பி.பி.எஸ். படிப்புக்கான முழுத் தொகையான ரூ.10,495-க்கு டி.டி. எடுத்து வர வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடி வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு இந்தத் தொகை ரூ.8,500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எம்.பி.பி.எஸ். கட்டணம் தொடர்பான விவரங்கள் விண்ணப்பத்துடன் அளிக்கப்பட்ட தகவல் குறிப்பேட்டில் பக்கம் 14-ல் இடம்பெற்றுள்ளன.

டெலி சிப்ஸ்

சீரியல் தயாரிப்பில் அதிக ஆர்வம் காட்டும் நடிகை குஷ்பூ, புதிய கதைகளோடு வரும் பலரிடம் கதை கேட்டு வருகிறார். ஒரே நேரத்தில் அனைத்து சேனல்களிலும் தன்னுடைய சீரியல் வர வேண்டும் என்பதுதான் அவரது எண்ணமாம். இதற்காக புதிய சீரியல்களுக்கான கதை விவாதம் அவரது வீட்டிலே "தொடர்'கிறது.

ஐந்தாண்டுகளுக்கு முன் சன் டி.வி.யில் ஒளிபரப்பாகி வந்த ரமணி ஸ்ள் ரமணி நகைச்சுவை தொடரை தற்போது ஜீ டி.வி ஒளிபரப்பி வருகிறது. அனைத்து சேனல்களும் தானே தயாரித்து நகைச்சுவை தொடர்களை ஒளிபரப்பி வரும் நிலையில், பழைய தொடரை தூசு தட்டி எடுத்திருக்கிறது ஜீ டி.வி. நிர்வாகம்.

சின்னத்திரை நடிகை நீலிமா ராணி தற்போது சினிமாவில் ஆர்வம் காட்டி வருகிறார். "கோலங்கள்' தொடரில் மட்டும் நடித்து வரும் அவரது கையில் இப்போது "ரசிக்கும் சீமானே', "ஜக்குபாய்', "புகைப்படம்' ஆகிய படங்கள் இருக்கிறது. முக்கிய கேரக்டர்கள் இருந்தால்தான் சீரியல் என முடிவெடுத்திருப்பதுதான் இதற்கு காரணம்.

சின்னத்திரை காதலர்கள் பட்டியலில் இசையருவியின் முரளி -நிஷா ஜோடி சேர்ந்திருக்கிறது. "மானாட மயிலாட' நிகழ்ச்சியில் ஜோடியாக நடனம் ஆடி காதல் வயப்பட்ட இந்த ஜோடிக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளது

Wednesday, July 1, 2009

தொலைவிலிருந்து கணினியை இயக்க Remote Assistance

விண்டோஸ் இயங்கு தளத்தின் எக்ஸ்பீ மற்றும் விஸ்டா பதிப்புகளில் கணினி வலையமைப்பில் அல்லது இணையத்தில் இணைந்துள்ள வேறொரு கணினியை அணுகும் வசதியைத் தரும் Remote Assistance மென்பொருளும் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உங்கள் கணினியில் ஏதும் சிக்கல் ஏற்படும் போது நீங்கள் அறிந்த ஒரு கணினி வல்லுனரின் உதவியை அவரிடம் நேரில் செல்லாமலேயே பெற்று சிக்கலைத் தீர்த்துக் கொள்ளலாம்.
அதாவது கொழும்பிலோ குருனாகாலிலோ வசிக்கும் நீங்கள் வெளிநாடொன்றில் இருக்கும் ஒரு நண்பரை அழைத்து அவர் அங்கிருந்தே உங்கள் கணினியில் ஏற்பட்டுள்ள சிக்கலைத் தீர்த்து வைக்கும் வசதியை Remote Assistance தருகிறது.
இந்த வசதியைப் பெற உங்கள் கணினியிலும் இணைய விரும்பும் கணினியிலும் இணைய இணைப்புடன் விண்டோஸ் எக்ஸ்பியும் (விஸ்டாவிலும் மேம்படுத்தப்பட்ட ரீமோட் எஸிஸ்டன்ஸ் வசதி கிடைக்கிறது) நிறுவியிருத்தல் வேண்டும். அத்துடன் வின்டோஸ் லைவ் மெஸ்ஸெஞ்சரில் இணைவத்ற்கான ஒரு மின்னஞ்சல் முகவரியும் அவசியம்.
நீங்கள் நண்பரை அழைத்ததும் உங்கள் அழைப்பை ஏற்றுக் கொண்டு கணினியுடன் இணைப்பை ஏற்படுத்தியதும் உங்கள் கணினியின் டெஸ்க் டொப் திரையை அவரது கணினியில் காண முடியும். அவருக்கு உங்கள் கணினியை முழுமையாகக் கட்டுப்படுத்த அனுமதி வழங்கப்படின் அவரது கீபோர்டையும் மவுஸையும் உபயோகித்து உங்கள் கணினியை முழுமையாக அவரது கட்டுப் பாட்டின் கீழ் கொண்டு வர முடியும். அதற்குப் பின்வரும் வழி முறையைக் கையாளலாம்.
முதலில் ஸ்டார்ட் மெனுவில் Help and Support தெரிவு செய்யுங்கள். உதவி வேண்டுபவர் மட்டுமே இதனைத் தெரிவு செய்ய வேண்டும். அப்போது Help and Support விண்டோ தோன்றும். அங்கு Ask For Assistance மெனுவின் கீழ் உள்ள Invite a Friend to connect to your computer with Remote Assistance என்பதைத் தெரிவு செய்யுங்கள். அடுத்து தோன்றும் விண்டோவில் Invite someone to help you எனும் லிங்கில் க்ளிக் செய்யுங்கள்.

அடுத்து தோன்றும் விண்டோவில் விண்டோஸ் மெஸ்ஸெஞ்சர் காட்டும் பட்டியலிலிருந்து உதவியைப் பெற விரும்பும் நண்பரின் பெயரைத் தெரிவு செய்து அதன் கீழுள்ள Invite this person லிங்கில் க்ளிக் செய்தல் வேண்டும். அப்போது உங்கள் நண்பர் உங்கள் கணினியின் டெஸ்க்டொப்பைப் பார்வையிட அனுமதிக்கும். நண்பர் உங்கள் கணினியை முழுமையாகத் தனது கட்டுப் பாட்டின் கீழ் கொண்டுவர Take control பட்டனில் க்ளிக் செய்ய வேண்டும். பிறகு நீங்கள் ஓகே க்ளிக் செய்து அவரை உள்ளே வர அனுமதிக்க வேண்டும்.

மன்மதன் அம்புக்காக கமல்ஹாசன் எழுதிய பாடல்

டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன், த்ரிஷா, மாதவன், சங்கீதா நடிக்கும் படம் மன்மதன் அம்பு. உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் உருவாக...