ஈசன் - முன்னோட்டம்

சுப்பிரமணியபுரம் படத்துக்கு பின் டைரக்டர் சசிகுமார் இயக்கும் படம் "ஈசன். சமுத்திரக்கனி, வைபவ், தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன் நடிக்கிறார்கள். அபிநயா கதாநாயகியாக நடிக்கிறார்.

அபர்ணா என்ற புதுமுகம் மற்றொரு கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படம் குறித்து டைரக்டர் சசிகுமார் கூறுகையில், "ஈசன் என்பதற்கான காரணம் படம் பார்த்தால்தான் தெரியும். ஆக்கலும், அழித்தலும் செய்கிறவன் ஈசன். ஆனால் இதில் என்ன நடக்கிறது என்பது சஸ்பென்ஸ்.

பிழைப்பு தேடி வந்தவர்கள், தலைமுறை தலைமுறையாய் வாழ்பவர்கள் என சென்னை நகரத்தின் வாழ்வின் பிம்பங்கள்தான் இந்தக் கதை. நகர வாழ்க்கை மனிதர்களின் ஆயிரம் உணர்வுகள் இதில் இருக்கின்றன.

ஒவ்வொரு மனிதனுக்கும் தனிப்பட்ட வாழ்க்கை, அதை பின்னணியாக வைத்து படம் வந்திருக்கிறது. சமுத்திரக்கனி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன் மந்திரியாக நடிக்கிறார், என்றார். ஈசனுக்கு ‌ஜேம்ஸ் வசந்தன் இசையமைக்கிறார்.

1 comments:

cineikons said...

supercineikons

Post a Comment

Related Posts with Thumbnails