இந்திய இன்டர்நெட்

இந்தியா கிராமங்களில் தான் வாழ்கிறது என்று வெகுநாட்களாகவே நாம் சொல்லி வருகிறோம். இன்டர்நெட் பயன்பாட்டிலும் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளதாகவும், விரைவில் இது முதல் இடத்திற்கு வரும் என்றும் எழுதி வருகிறோம்.

ஆனால் அண்மையில் எடுத்த ஆய்வின்படி, இந்தியக் கிராமவாசிகளில் 84% பேர், இன்டர்நெட் என்றால் என்னவென்று தெரியாமலேயே இருக்கிறார்கள். மீதம் இருக்கின்ற 16% பேர்களில் 85% பேர் இமெயில் பார்ப்பதற்கும், 67% பேர் வீடியோ பார்ப்பதற்கும், 48% பேர் கல்வி சார்ந்த தகவல்களைத் தேடுவதற்கும் இணையத்தினைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இதில் ஆறுதல் அளிக்கும் ஒரு விஷயம், கிராம மக்களில் இன்டர்நெட் பயன்படுத்துபவர்களில், 13% பேர் நவீன வேளாண் முறைகள் குறித்து கண்டறியவும், 8% பேர் உரவகைகள் குறித்து அறியவும் இணையத்தினைப் பயன்படுத்துகின்றனர்.

இதே போல, கிராம மக்களில் இன்டர்நெட் பயன்படுத்துபவர்கள் குறைவாக இருந்தாலும், இவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 2008 ஆம் ஆண்டைக் காட்டிலும், 2009 ஆம் ஆண்டு, இணையத்தினைப் பயன்படுத்தியவர்கள் 26.7% உயர்ந்து இருந்தனர்.

33 லட்சம் பேராக இருந்தவர்கள், 42 லட்சமாக உயர்ந்தனர். தமிழ்நாடு, ஆந்திரம், அஸ்ஸாம், மஹாராஷ்ட்ரா, ஒரிஸ்ஸா, ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள கிராமங்களில், இன்டர்நெட் பயன் படுத்தும் 15 ஆயிரம் பேர்களிடம், இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails