மொபைல் போனிலும் தேர்வு எழுதலாம்

இன்று மொபைல் போன் ஒரு அடிப்படைதேவைகளில் ஒன்றாக உருவாகிவிட்டது. மொபைல் போன் மூலம் தகவல் செய்யலாம், அரட்டை செய்யலாம் , வீடியோ அனுப்பலாம் , பாடல் கேட்கலாம். ஆனால் தேர்வு எழுதலாமா? எழுதலாம்.

சேஷாத்ரிபுரம் பர்ஸ்ட் கிரேட் கல்லூரி , எலகங்கா , பெங்களூரு. இதனை நடைமுறை செய்திருக்கிறது. கல்லூரிகளிலும் , பள்ளிகளிலும் மொபைல் போன் தடை செய்யப்பட்டு வருகிற காலகட்டத்தில் இந்த தேர்வு முறையை அறிமுகப்படுத்திருக்கிறது. இதற்கு அந்த கல்லூரி நிர்வாகம் தரும் பதில் , தொழில்நுட்பம் கல்வி தரத்தை உயர்த்தும் என கூறுகிறது.

இந்த தொழில்நுட்பத்திற்கு இன்டர்ஆக்டிவ் பிளாட்பார்ம் ஆன் மொபைல் என்று பெயர் . தேர்வு எழுத ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு மொபைல் போன் தரப்படுமாம். அதில் கேம்ஸ் ,மெசேஜ் மற்றும் பிறரை தொடர்பு கொள்ளும் வசதிகள் தடைசெய்யப்படுமாம்.

இந்த தேர்வு முறையை கடந்த வருடம் பிபிஎம், பிசிஏ பாடத்திட்டத்திற்கு அறிமுகம் செய்தது , முயற்சி வெற்றியடைந்தது. இந்த வருடம் அனைத்து பாடத்திட்டதிற்கும் இந்த தொழில்நுட்பத்தை நடைமுறைப்படுத்தியிருக்கிறது. தேர்வு நேரம் துவங்கியதும் அனைவருக்கும் கேள்விகள் மொபைல் போன் திரையில் வெளியிடப்படுமாம்.

ஒவ்வொரு கேள்விக்கும் நான்கு பதில்கள் தரப்பட்டிருக்குமாம். ஒவ்வொரு கேள்விக்கும் உரிய பதிலை தேர்வு நேரம் முடியும் தருவாயில் பதிலை உறுதி செய்து இறுதில் சப்மிட் பட்டனை அழுத்தினால் பதில்கள் அனைத்தும் சர்வர் கம்ப்யூட்டரில் சேமிக்கப்படும். பதில்கள் அனைத்தும் உடனடியாக சரிபார்க்கப்பட்டு மதிப்பெண்கள் விரைவாக வெளியிடப்படும் என்கிறது நிர்வாகம்.

மேலும் இந்த தேர்வு முறையால் மாணவர்கள் தகாத செயல் செய்வதை தடுக்க முடியும் என்கிறது. மாணவர்கள் கல்லூரி வகுப்புகளை புறக்கணிப்பது ஒரு பெருமை சார்ந்த விஷயமாக கருதப்படுவதுண்டு. இதனையும் இந்த மொபைல் போன் தொழில்நுட்பத்தின் மூலம் தவிர்க்கலாம். அதாவது வருகை பதிவேட்டையும் கொண்டு வந்திருக்கிறது.

வகுப்பிற்கு வரும் ஆசிரியர் ஒரு மொபைல் எடுத்துவருவர் , அவருக்கு ஒரு பாஸ்வேர்ட் தரப்படும் , பாஸ்வேர்டை அளித்ததும் பாடப்பிரிவு , வருடத்தின் நிலை திரையிடப்படும் . பின்னர் ஒவ்வொரு மாணவர்களின் பெயர்கள் திரையிடப்படும். வருகை பதிவேட்டை சரிபார்த்தவுடன் தகவல் சர்வர் கம்ப்‌யூட்டரில் சேமிக்கப்படும்.

முதல் 15 நிமிடகளுக்கு மட்டுமே வருகை பதிவேட்டை அளிக்கமுடியும். காலம் தாழ்த்தி வரும் மாணவர்கள் வருகை அளிக்கமுடியாது, இதனால் மாணவர்கள் காலம்கடத்துவதை தவிர்க்கமுடியும். இதுமட்டுமில்லை , 3 நாட்களுக்கு மேல் வருகை இல்லாத மாணவர்கள் அவர்களின் பெற்றோரின் மொபைல் எண்ணிற்கு தகவல் அளிக்கப்படும்.

இதனால் மாணவர்கள் புறக்கணிப்பதை தடுக்கமுடியும் என்கிறது கல்லூரி. இந்த முறை பயன்படுத்தி வங்கிகள் தேர்வு, அரசு தேர்வுகள் மற்றும் பிற தேர்வுகள் நடைமுறைபடுத்தபடலாம். இது மட்டுமா! தேர்தலை கூட நடத்தலாம்.

இதனால் போலி ஓட்டுகள் அளிக்கப்படுவதை தவிர்க்கலாம். எல்லோருக்கும் வாக்காளர் எண் தரப்படுவதால், இந்த முறையை எதிர்கொள்ளலாம். தேர்தல் முடிவையும் காலதாமதமின்றி தெரிந்துகொள்ளலாம்.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails