ஆஸ்காருக்கு போகிறது அமீர்கானின் பீப்பிளி லைவ்

பாலிவுட் நடிகர் அமீர்கான் தயாரித்து சமீபத்தில் வெளியாகி ஹிட் ஆன படம் பீப்ளி லைவ். இந்தியாவின் அடிமட்ட விவசாயிகளின் அவலத்தை சொன்ன படம் இது. ஆஸ்கர் விருதுக்கான போட்டிக்கு இந்திய திரைப்பட சம்மேளனம் சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த தகவட, ஆஸ்கார் விருதுக்கான பரிந்துரை கமிட்டி தலைவர் கே.எஸ்.சேதுமாதவன் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ஆஸ்கார் விருதுக்கான வெளிநாட்டுப் பட பிரிவுக்காக அங்காடி தெரு, மதராச பட்டினம், விண்ணைத்தாண்டி வருவாயா, பா (இந்தி), பீப்லி லைவ் (இந்தி), பழசிராஜா (மலையாளம்) உள்பட மொத்தம் 27 படங்கள் பரிசீலிக்கப்பட்டன.

இறுதியில், இந்திய விவசாயிகளின் அவலநிலையை மிக யதார்த்தமாகவும், நகைச்சுவையாகவும் சித்தரித்து இருந்த பீப்லி லைவ் (இந்தி) படம், ஆஸ்கர் போட்டிக்காக தேர்வு செய்யப்பட்டது, என்றார்

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails