இரட்டை கோபுர வீழ்ச்சி திகில் படங்கள் வெளியீடு

அமெரிக்காவின் புகழ் பெற்ற இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்ட போது, ஹெலிகாப்டரிலிருந்து அந்நாட்டு போலீசார் எடுத்த அதிர்ச்சியூட்டும் படங்கள், சம்பவம் நடந்து ஒன்பது ஆண்டுகளுக்குப் பின் வெளியிடப்பட்டுள்ளன.


அமெரிக்காவில், உலக வர்த்தக மையம் என்று அறியப்பட்ட இரட்டைக் கோபுரங்கள் 2001, செப்., 11 அன்று, பயங்கரவாதிகளால் விமான மோதல் மூலம் இடித்துத் தகர்க்கப்பட்டன. இக்கொடூர சம்பவத்தில், இரண்டாயிரத்து 752 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்;


நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர்.இச்சம்பவம் நிகழந்த போது, அமெரிக்க போலீசார் ஹெலிகாப்டரிலிருந்து பல படங்கள் எடுத்தனர்.


அப்படி எடுக்கப்பட்ட இரண்டாயிரத்து 779 படங்களுள் குறிப்பிட்ட படங்களை, அமெரிக்க செய்தி அமைப்புக்கு, அந்நாட்டு தேசிய தர மற்றும் தொழில்நுட்ப அமைப்பு வழங்கி யுள்ளது.


ஹெலிகாப்டரில் இருந்து கொண்டு படம் எடுத்த வெளிப்புற செய்தியாளர் களிடமிருந்து இந்தப் படங்களை தொழில்நுட்ப அமைப்பு வாங்கியிருந்தது.


ஒரு படத்தில் கட்டடம் இடிந்ததால் ஏற்பட்ட புழுதி அலையலையாக மிதந்து வருவது காட்டப் பட்டிருக்கிறது கட்டடம் படிப்படியாக இடிந்து அருகிலுள்ள பகுதிகளிலும், கிழக்கு நதியிலும் விழுவதும் எடுக்கப்பட்டுள்ளது.

அக்கட்டடத்துக்குள் சிக்கியவர்களின் பரிதாபகரமாக வேதனையுடன் இருக்கும் முகங்களையும் எடுத்துக் காட்டுகின்றன

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails