Monday, August 16, 2010

ஐஸ் மீது நடவடிக்கை எடுக்குமா நடிகர் சங்கம்?

பிரபல பாலிவுட் நடிகையும் முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யா ராய் மீது தென்னிந்திய நடிகர் சங்கம் நடவடிக்கை எடுக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

நடிகர் சங்கத்தில் பல நடிகர், நடிகைகள் உறுப்பினராகாமல் உள்ளனர். சங்கத்தில் இல்லாமலேயே படங்களில் இவர்கள் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நடிகர் சங்கம் இறுதி கெடு விதித்தது.

அதாவது ஆகஸ்ட் 15ம்‌தேதிக்குள் நடிகர் சங்கத்தில் உறுப்பினர் ஆகாவிட்டால் ஒத்துழைப்பு கொடுக்க மாட்டோம் என்று நடிகர் சங்கம் தெரிவித்திருந்தது. நடிகர் சங்கத்தின் முடிவுக்கு தயாரிப்பாளர் சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நடிகர் சங்கத்தின் மிரட்டலால் மிரண்டு போன நடிகர் - நடிகைகள் பலர் உடனடியாக தங்களை சங்கத்தில் இணைத்துக் கொண்டனர். சமீரா ரெட்டி, ஹன்சிகா, ஜெனிலியா, அங்காடித்தெரு மகேஷ், களவாணி விமல் உள்ளிட்டோர் நடிகர் சங்கத்தில் சேர்ந்தனர்.

ஆனால் கெடுவுக்குள் சிக்கியிருக்கும் ஐஸ்வர்யா ராய் எந்தவித ரீயாக்ஷனும் இதுவரை காட்டவில்லை. ஐஸ்வர்யா ராய் இருவர், ஜீன்ஸ், கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், ராவணன் உள்ளிட்ட தமிழ் சினிமாக்களில் நடித்துள்ளார்.

அவரை நடிகர் சங்கத்தில் இணையும்படி நடிகர் சங்க நிர்வாகிகள் ஏற்கனவே வற்புறுத்தியிருந்தனர். ஐஸ்வர்யா ராய் இந்த கெடுவை கண்டு கொள்ளவே இல்லை.

எனவே அவர் மீது நடிகர் சங்கம் நடவடிக்கை எடுக்குமா? அல்லது வழக்கம்போலவே மாற்றி மாற்றி பேசி, இந்த பிரச்னையையே மறந்து விடுவார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

No comments:

Post a Comment

மன்மதன் அம்புக்காக கமல்ஹாசன் எழுதிய பாடல்

டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன், த்ரிஷா, மாதவன், சங்கீதா நடிக்கும் படம் மன்மதன் அம்பு. உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் உருவாக...