Thursday, August 12, 2010

விஜய்யின் அடுத்த இன்னிங்ஸ்

சமீபகாலமாக நடிகர் விஜய் நடித்த படங்கள் அனைத்தும் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியடையவில்லை. வசூலும் ஏமாற்றத்தை தந்தது.

இதனால் ரசிகர்கள், தியேட்டர் அதிபர்கள் முதல் தயாரிப்பாளர்கள் வரை விஜய் நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். கடைசியாக வெளியான சுறா படத்தின் மூலம் தங்களுக்கு லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாகவும், விஜய் நஷ்ட ஈடு தர வேண்டும் என்று தியேட்டர் அதிபர்கள் ‌கோரிக்கை வைத்துள்ளனர்.

முன்னணி நடிகர்கள் வரிசையில் இருக்கும் விஜய் இப்போது கதையை தேர்ந்தெடுப்பதில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார்.

தனது ரசிகர்களுக்கு பிடித்தமான கதையம்சம் கொண்ட படங்களில் மட்டுமே நடிப்பது என முடிவு செய்திருக்கும் விஜய், பெரிய இயக்குனர்களின் படங்களாக இருக்கும்படியும் பார்த்துக் கொண்டிருக்கிறார். அடுத்தடுத்த தோல்விக்கு பிறகு புதிய இன்னிங்சை தொடங்கியிருக்கும் விஜய் தற்போது 5 புதிய படங்களில் நடித்து வருகிறார்.

சித்திக் இயக்கத்தில் காவல் காதல், ராஜா இயக்கத்தில் வேலாயுதம், சீமான் இயக்கத்தில் பகலவன், ஷங்கர் இயக்கத்தில் 3 இடியட்ஸ் மற்றும் லிங்குசாமி படம் என பெரிய இயக்குனர்களின் படங்களில் நடித்து வரும் விஜய் இந்த இன்னிங்சில் விட்ட இடத்தை எட்டிப் பிடிப்பாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

No comments:

Post a Comment

மன்மதன் அம்புக்காக கமல்ஹாசன் எழுதிய பாடல்

டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன், த்ரிஷா, மாதவன், சங்கீதா நடிக்கும் படம் மன்மதன் அம்பு. உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் உருவாக...