மன்மதன் அம்புக்காக கமல்ஹாசன் எழுதிய பாடல்

டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன், த்ரிஷா, மாதவன், சங்கீதா நடிக்கும் படம் மன்மதன் அம்பு. உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் த்ரிஷா நிஷா என்ற பெயர் கொண்ட சினிமா நடிகையாக நடிக்கிறார். 

கதைப்படி நடிகை நிஷா ஒரு கவிதை எழுதுகிறார். அது பாடலாக இடம்பெறுகிறது. அந்த கவிதையை நிஜமாக எழுதியவர் நடிகர் கமல்ஹாசன். 

கண்ணோடு கண்ணை கலந்தாளென்றால்... எனத் தொடங்கி தொடரும் அந்த பாடல் கமல்ஹாசனை ஒரு கவிஞராக மீண்டும் நிரூபித்திருக்கிறது.

கமல்ஹாசன் எழுதிய அந்த பாடல் வரிகள் வருமாறு:-


கண்ணோடு கண்ணைக் கலந்தாளென்றால்
களங்கம் உள்ளவள் எச்சரிக்கை
உடனே கையுடன் கைகோர்த்தாளா?
ஒழுக்கம் கெட்டவள் எச்சரிக்கை

ஆடை களைகையில் கூடுதல் பேசினால்
அனுபவம் மிக்கவள் எச்சரிக்கை
கலவி முடிந்தபின் கிடந்து பேசினால்
காதலாய் மாறலாம் எச்சரிக்கை

கவிதை இலக்கியம் பேசினளாயின்
காசை மதியாள் எச்சரிக்கை
உன்னுடன் இருப்பது சுகமென்றாளா
உறுதியாய் சிக்கல் எச்சரிக்கை

அறுவடை கொள்முதல் என்றே காமம்
அமைவது பொதுவே நலமாகக்கோள்
கூட்டல் ஒன்றே குறியென்றானபின்
கழிப்பது காமம் மட்டும் எனக்கொள்

உன்னை மங்கையர் என்னெனக் கொள்வர்?
யோசிக்காமல் வருவதை எதிர்கொள்
முன்னும் பின்னும் ஆட்டும் சகடை
ஆணும் பெண்ணும் அதுவேயெனக்கொள்

காமமெனப்படும் பண்டைச் செயலில்
காதல் கலவாது காத்துக்கொள்
இப்பெண்ணுரைக்கெதிராய் ஆணுரை ஒன்றைஇயற்றத் துணியும் அணி சேர்த்துக்கொள்.
Related Posts with Thumbnails