அடுத்த மைல்கல்லை எட்டியது டுவிட்டர்

சோசியல் நெட்வொர்க்கிங்கில் ஆரம்பித்‌த சில ஆண்டுகளில் அபரிமிதமான வளர்ச்சி அடைந்துள்ள டுவிட்டர் இணையதளம் அடுத்த மைல்கல்லை எட்டியுள்ளது. 

மாதத்திற்கு 2 பில்லியன் டுவிட்டுகள் பரிமாறப்படுகின்றன. 

இதுகுறித்து நிறுவன உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், நாள் ஒன்றுக்கு 65 மில்லியன் டுவிட்டுகள் பரிமாறப்பட்டு வருவதாகவும், கடந்த மே மாதம் வரை 15 பில்லியன் டுவிட்டுகள் பரிமாறப்பட்டுள்ளதாகவும், கடந்த பிப்ரவரி மாதம் வரை 10 பில்லியன் டுவிட்டுகளே பரிமாறப்பட்டு இருந்திருந்ததாகவும், 3 மாதத்தில் 5 பில்லியன் டுவிட்டுகள் பரிமாறப்பட்டு இமாலய சாதனையை டுவிட்டர் இணையதளம் எட்டியுள்ளதாக அவர் தெரிவித்தார். 

நாள் ஒன்றுக்கு 1,35,00 பேர் புதிதாக டுவிட்டர் இணையதளத்தில் உறுப்பினர்களாக சேர்வதாக அவர் மேலும் தெரிவி்த்தார்

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails