4 படங்களை உதறிய நயன்தாரா

நயன்தாரா புதுப்படங்களில் நடிக்க மறுக்கிறார். ஏற்கனவே கைவசம் மூன்று படங்கள் இருந்தன. அதில் ஒன்று ஆர்யா ஜோடியாக நடித்த பாஸ் என்ற பாஸ்கரன். இதன் படப்பிடிப்பு முடிந்து பூசணிக்காய் உடைத்தாகி விட்டது.

கன்னடத்தில் உபேந்திரா ஜோடியாக ஒரு படத்தில் நடித்தார். அதுவும் முடிந்து விட்டது. மலையாளத்தில் ஒரு படம் நடித்தார். அதன் படப்பிடிப்பும் நிறைவடைந்து விட்டது. தற்போது அவரிடம் புதுப்படங்கள் எதுவும் இல்லை.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 4 மொழிகளிலும் புதுப்பட வாய்ப்புகள் வந்தன. கன்னட படத்தில் நடிக்க ரூ.1 கோடி சம்பளம் தருவதாக பேசினர். 4 படங்களிலும் நடிக்க மறுத்து விட்டார்.

எனவே நயன்தாராவின் அடுத்த கட்ட முடிவு என்ன? படங்களில் நடிப்பாரா? முழுக்கு போடுவாரா? என்றெல்லாம் பல்வேறு யூகங்கள் கிளம்பியுள்ளன.

பிரபுதேவா, நயன்தாரா காதல் இறுக்கமாகியுள்ளது. இருவரும் ஏற்கனவே திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர். ஆனால் முதல் மனைவி இருக்கும் போது இரண்டாவது திருமணம் செய்வது தண்டனைக்குரிய குற்றம் என்று தெரிய வந்ததால் அதனை கைவிட்டனர். திருமணம் செய்து கொள்ளாமலேயே இருவரும் ஒன்றாக வசிப்பதாக திரையுலகம் கிசு கிசுக்கிறது.

தற்போது படங்களில் நடிக்காத நிலையில் பிரபு தேவாவுடன் சுற்றுகிறார். அவர் சந்தோஷ்சிவனின் “உறுமி” படத்தில் நடித்து வருகிறார். அதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடக்கிறது. நயன்தாரா அந்த படப்பிடிப்பில் பிரபுதேவாவுடனேயே தங்கி இருக்கிறார். அவருக்கு சாப்பாடு தயார் செய்து கொடுக்கும் வேலையை கவனிக்கிறாராம்.

பிரபுதேவாவின் அன்றாட செலவுகளை நயன்தாராதான் கவனிக்கிறார். இதனால் அவரது சேமிப்பில் இருந்து பெருந்தொகை கரைந்து விட்டதாம். புதுப்படங்களிலும் நடிக்காத நிலையில் வருமானம் நின்று போய் உள்ளது.

இனிமேல் நயன்தா ராவுக்கு பிரபுதேவாவை சார்ந்திருக்கும் நிலைமை ஏற்படும் என்றும் செலவுகளை பிரபுதேவா தான் இனி கவனிக்கவேண்டும் என்றும் திரையுலக பிரமுகர் ஒருவர் கூறினார்

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails